சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள்
ஆடிகம சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 5 சிறுமிகள் அங்கிருந்து தப்பிச்சென்ற
நிலையில், இன்று (14) அதிகாலை முந்தல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
12 முதல் 15 வயதுடைய இந்த சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சிறுமிகள் நடந்து சென்ற நிலையில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதனை கண்டுள்ளனர்.
பின்னர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் வந்தமை தெரியவந்துள்ளது.