49 வயதுடைய பெண் கடத்தல் திடுக்கிடும் தகவல்
கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசுக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.
காரில் வந்த குழு ஒன்றினாலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
49 வயதுடைய பெண் கடத்தல் திடுக்கிடும் தகவல்
குறித்த கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த காரை தடுத்து
நிறுத்துமாறு கற்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது, காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காரில் இருந்து தப்பிய குறித்த பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து அவர் ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்