லண்டனில் கொரனோவால் புலிகளின் முக்கிய தளபதி மரணம் – கொண்டாடிய எதிரிகள்
ஈழத்தில் விடுதலை புலியின் முக்கிய பொறுப்பு நிலை தளபதியாக விளங்கி லண்டனில் வசித்து வரும் சேரமான் என்பவர் கொரோனா
நோயால் பாதிக்க பட்டார் ,ஆனால் தெய்வாதீனமாக அவர் அந்த கொடிய நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டாராம்
ஆனால் இவரது எதிரிகள் இவர் இறந்து விட்டதாக வாட்ஸாப் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ,அவரது படத்தை பதிவிட்டு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டியதுடன் அவருக்கு கேணல் வரை பதவி உயர்வும் வழங்கியுள்ளனர்
கருத்தியல் ரீதியில் போர்களை எதிர்கொள்ள முடியாது இவ்விதம் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு ஒருவரது தியாகத்தை ,அவர்
சிந்திய குருதி கொடைகளை கேவலமாக சித்தரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது கண்டு பிரபாகரன் நேசத்தின் பாசக்காரர்கள் சினம் கொண்டுள்ளனர்
எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க கற்று கொள் என கற்று கொடுத்த தலைவன் வழி வந்தவர்களே இவ்வாறு செயல் பட்டுள்ளது மானிட மனு நீதி நெஞ்சங்களை கலங்க வைக்கிறது
ஒன்று பட்டு ஓர் அணியில் சேர மறுத்து ,விளையாடல் புரியும் இவர்கள் வெறுக்க பட வேண்டியவர்கள் மறுப்பதற்கு இல்லை
,ஆனால் அவர் உயிரோடு உலாவும் பொழுதே அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அடித்து பரப்ப வேண்டுமா ..?
கொடிய நோயானது மக்களை மிரள வைத்து கொண்டுள்ளது ,பல டசின் தமிழர்கள் லண்டனில் மட்டும் பலியாகியுள்ளனர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
யார் இருப்போம் யார் இறப்பார் என்ற நிலை தொடரும் பொழுது இவ்விதமான கீழ் நிலை அநாகரீகமற்ற செயல் பாடுகள் தேவைதானா …..? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் .
கருத்தியல் பகைமை ஆகாது ,இன்று மோதி கொண்டவர்கள் நாளை ஒன்று சேரலாம் அப்பொழுது இன்று நீங்கள் புரியும் இந்த விடயங்கள் உங்களை தனிமை படுத்தி விடும் தோழர்களே .
ஈழ விடுதலைக்கு போராடி ,விழிப்புண் அற்ற காவிய நாயகரை நாம் ,அந்த தியாகத்தை கொச்சை படுத்தலாமா ..?
ஒன்றுபடுவீர் ….சிந்தித்து செயல் படுவீர்…!