![தவிக்கிறேன்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/01/KISS-512x310.jpg)
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- தலைகீழாக கவிழ்ந்த கார்
- மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
- பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
- லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
- இராணுவத்தில் சிறை கைதிகள்
- 11 இஸ்ரேல் தளபதிகள்பலி
- பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
- இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
- இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
- இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
- இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
- மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
- தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
- தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
- மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
- தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்