நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வாரிசு நடிகை, காதலால் சில காலமாக படங்களில் நடிக்காமல்
இருந்தாராம். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாருக்கும் சொல்லாமல் திடீரென வெளியேறினாராம்.
இதனால் கடுப்பான இயக்குனர் நடிகை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில்
இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் நடிகையை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறாராம் இயக்குனர்.
மேலும் டப்பிங், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நடிகையை புறக்கணிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.