சொல்லிவிடு இதுவா காரணம்
முதன் முதலாய் உன் வீடு
முன் பாதம் நான் பாதிக்க
ஓடி வந்து விழியாலே
ஒடிந்து விட அனைத்தவளே
காற்றில் இடையாட
கரைந்து போனேண்டி
மெல்ல நீ சிரிக்க
வீழ்ந்து இரசித்தேண்டி
உன் பார்வை ஏக்கம்
உள்ளத்தை தழுவ
கண்ணே உன் நினைப்பால்
கசங்கி போனேண்டி
விடை பெற முடியா
விட்டு நான் பிரிய
கலங்கிய விழி நீர்
கண்ணில் தெரியுதடி
நெஞ்சுக்குள் நேசத்தை
நெருக்கமாய் வைத்தவளே
கொஞ்சி பேச – உன்
கொள்கை மறுத்ததென்ன …?
பொல்லா சாதி
வேலியாய் நிற்க
நம்ப மறுத்தாயோ
நாராய் கிழிந்தாயோ …?
ஆதியில் இல்லை சாதியடி
அவனில் இல்லை பிளவடி
பிந்திய மனிதர் கேடாச்சு
பிரளய சாதி செய்தாச்சு
ஒத்தையில நான் தவிக்க
ஓரமா விட்டவளே
தவறான முடிவொன்றால்
தவறிடிச்சே நல் வாழ்வு ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-01-2021