கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்

கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்| பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க, இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.