500 ரசியா இராணுவம் பலி – தொடரும் கடும் போர்
உக்கிரேனில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற மோதல்களில் சிக்கி ,ரசியா இராணுவத்தினர் 500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக, உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
அகோர ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் ,முன்னேற முயன்ற ரசியா படைகளுக்கு எதிரான ,வழிமறிப்பு தாக்குதலை நடத்திய பொழுது ,இந்த பாரிய இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,உக்கிரேனிய இராணுவம் அறிவித்துள்ளது .
500 ரசியா இராணுவம் பலி – தொடரும் கடும் போர்
குரூஸ் ஏவுகணைகளை பயன் படுத்தி, ரசியா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
அவ்வாறான நவீன ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் .இவ்விதமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
இதுவரை ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் கவச வாகனங்கள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ள பொழுதும் ,தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் ரசியா படைகள் முன்னேற்ற நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .