மனைவி முன் கணவன் சுட்டுக்கொலை – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

நத்தார் தினத்தில் –மனைவி முன் கணவன் சுட்டுக்கொலை – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

நத்தார் தினமான நேற்று இரவு ஒன்பது மணியளவில் Battersea Church Road in south west London பகுதியில் மர்ம நபர்.

நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் மனைவி முன் 36 வயது கணவன் பலியானார் .

இவர் மீது சுமார் பத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன .

இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்ட பொழுதும் அது பலனின்றி இறந்துள்ளார் .

மனைவி முன் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இது குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில் சம்பவத்தை கண்ணுற்று மனைவி கத்தியதாக தெரிவித்துள்ளனர் .

மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் ;போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

விசேட குற்றப் புலனாய்வு துறையினர் தமது புலன் விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் ,நத்தார் தினத்தில் இடம்பெற்ற

இந்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த கொலை விசாரணை முடிவிலேயே தகவல்கள் தெரியவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

புத்தாண்டு ,மற்றும் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பல படுத்த பட்ட பொழுதும் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

2008 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 136 பேர் இவ்விதம் சுட்டு தாக்குதலில் பலியாகியுள்ளனராம்

Leave a Reply