மட்டு விபத்தில் இருவர் படுகாயம்

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Spread the love

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் புதன்கிழமை மாலை (07) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No posts found.