தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது

தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Spread the love

தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது

2023 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.