கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி வீட்டில இப்படி செய்து சாப்பிடுங்க, செம சுவையாக இருக்கும் .
இந்த கறிவேப்பிலை கார சட்னி சாதம் ,மற்றும் இட்லி தோசை கூட சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
அப்படி சுவையான கார கறிவிப்பிலை சட்னி ,எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
கறிவேப்பிலை கார சட்னி செய்வது எப்படி செய்முறை ஒன்று
அடுப்பில கடாயா வைத்து ,அதில கொஞ்சம் எண்ணெய் விட்டு ,அந்த எண்ணெய் சூடானதும் ,ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு ,ஏழு சின்ன வெங்காயம் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வதங்கி வந்த பின்னர், காரத்திற்கு ஏற்ப வாறு மிளகாய் ,அப்புறம் ஒன்றரை கப்பு வேர்க்கடலை ,கூடவே புளி,ஒரு கப் அளவு துருவிய தேங்காய் ,தேவையான கருவேப்பிலை சேர்த்து வதக்கி வாங்க .
வதக்கியதை இறக்கி ஆற வைத்த பின்னர், மிக்சியில உப்பு சேர்த்து சேர்த்து அரைத்திடுங்க .
மிக சுலபமான கருவேப்பிலை கார சட்னி ரெடியாடிச்சு .
இந்த கருவேப்பிலை சட்னியில் ,அயன் சத்து கூட இருக்கு ,இவை கண்களுக்கு மற்றும் உடலுக்கு மிக அவசியமானது .
வாரத்தில இரண்டு முறை இந்த கருவேப்பிலை சட்னி செய்து சாப்பிட்டு வாங்க .மக்களே உடல் ஆரோக்கியமாக விளங்கும் .