இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
Spread the love

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி செவணப்பிட்டி பகுதியில் கனரக வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பட்டை பிரதான வீதி திருக்கோவிலைச் சேர்ந்த 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கனரக வாகனமும் இன்று (29) அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பிரயாணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையவல் அனுமதிக்கப்பட்டுள்ளர்

இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.