Search Results for: பிரிவு
காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு
காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு
காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டது
இலங்கையில் முதன்முறையாக,
இலங்கையில் முதன்முறையாக, பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு ஒன்று நேற்று கரபிட்டிய ஜெர்மன்-இலங்கை நட்புறவுப் பெண்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
விழாவில் உரையாற்றிய, பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளரான மகளிர் நல மருத்துவர் டாக்டர் தீபானி ஜசிங்க,
மருத்துவமனையின் இந்தப் புதிய பிரிவு தென் மாகாணம் மற்றும் பல பிற பகுதிகளில் உள்ள பெண்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.
இது இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் நலப் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை பிரிவும் திறக்கப்பட்டது.
மருத்துவ சிறப்பு மருத்துவர்
மருத்துவ சிறப்பு மருத்துவர் டாக்டர் கெலும் ஜயசிங்க மகளிர் நலப் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை பிரிவின் பொறுப்பாளராக உள்ளார்.
தற்போதுள்ள வசதிகளைக் கொண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 மகளிர் நல அறுவை சிகிச்சைகள் செய்ய முடிவதாகவும், புதிய அறுவை சிகிச்சை
பிரிவு திறக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
தென் மாகாணம், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்து ஏறக்குறைய தினமும் 100 நோயாளிகள் மகளிர் புற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜெர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் மருத்துவமனையின் பணியாள் கே. எல். எம். சோமரத்ன முதல் நோயாளியை அனுமதித்தார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன .Sri Lanka’s health department snoring
உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை
இலங்கையின் கடைகளில் உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் ,
உணவு முறைகள் உரிய முறையில் சுகாதார பொறி முறைகளை பின்பற்றி செய்யாத நிலையும் காணப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து செல்கின்ற உல்லாச பயணிகள் .யூ டூப் காணொளி காணொளி பிடித்து இலங்கையின் மானத்தை வாங்கி விற்று விடுகிறார்கள் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்கு
ஆனால் இது தொடர்பாக கவனம் செலுத்துவது தொடர்பாக இலங்கையினுடைய சுகாதாரப்பிரிவு ,பிரதேச சபைகள் ,
உள்ளூராட்சி சபை மன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்குகள் செயப்படுவதை காணப்படுகிறது.
தமது சுய நலங்களுக்காகவே அரசியல்வாதிகள் வாழ்கிறவர்கள் ,மக்களில் எவ்வாறு அக்கறை காண்பார்கள் என்பதை இது காண்பிக்கிறது .
உணவுகளுக்குள் பிளேட் ,பிளாஸ்டர் .மற்றும் ஊசிகள் ,பல்லி ,பூச்சிகள் ,என்பனவும் சமீப காலங்களாக கண்டெடுக்கப்படுகிற செய்திகள் வெளிவந்திருந்தன.
வீதியோர கடைகள் மற்றும் பிரபல உணவகங்கள் உள்ளிட்டவைகளும் ,சுகாதார முறைமையற்று காணப்படுகிறது .
இதற்கு பிரதேச சபை ஏன் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டுமாக இருந்தால் ,அரசியல்வாதிகளையே மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும் என்பதே ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பேசப்பட்ட விடயமாக காணப்படுகிறது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- வனவாசல ரயில் தடம் புரண்டது

ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…
கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…
நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்…
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.
காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.
காதல் பிரிவு
காதல் பிரிவு
இருவரும் இருந்த இடத்தில்,
இப்போது நிழலும் நமக்குள் பேசாது.
சிரிப்பின் சத்தம் மறைந்தபின் – உனை
சீண்டாமல் வாழ்வது தான் என் பழக்கம்.
உன் கை தொட்டு போன காற்றே – இப்போதும்
என் கன்னத்தில் ஓர் நினைவாக வீசுகிறது.
“நீ இல்லை” என்பதைக் கேட்ட என் இதயம்,
மீண்டும் காதலிக்க தயங்குகிறது.
நாம் சேர்ந்து வாசித்த அந்த புத்தகம்,
இப்போது வெறும் காகிதங்களாகிறது.
ஒவ்வொரு பக்கமும் உன் நினைவுகள்,
படிக்க முடியாத உரையாய் மாறுகிறது.
என் கனவில் நீ வந்தாலும்,
வெறும் பார்வை கொடுத்து விலகுகிறாய்.
நிஜத்தில் நீ இல்லாத வேதனை,
கனவில் கூட தொடராய் தொடருகிறது.
காதல் வெறும் சேர்வல்ல,
பிரிவும் அதில் ஒரு பாகம் என்பதை
இப்போது தான் உணர்கிறேன்,
உன் நேசம் இன்னும் என் உள்ளம் சுமக்கிறது…
—-
இப்படிக்கு
உன் பிரிவில்
என் உயிரை தேடும்
நான்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம் ,வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.
இந்த மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின்
பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
Featured
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (03) குறித்த அமைச்சின் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விடயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கலாம் என்றார்.
இந்நிகழ்வில், அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,
நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திருமதி)
எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபு அலா –
பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை
முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று
(27) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள முறையான வளர்ச்சியைப் பாராட்டிய ஜனாதிபதி, இது ஏனைய பண்ணைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இப்பண்ணையை திறந்து வைப்பதுடன் அதற்குத் தேவையான பின்புலத்தை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அம்பேவெல பண்ணை, இலங்கை மற்றும் தெற்காசியாவின் பால் உற்பத்தி மற்றும் பண்ணை தொடர்பான அதியுயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் பிரதான மத்திய நிலையமாகச் செயற்பட்டு வருவதாக அம்பேவெல பண்ணைக் குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.
‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவில் தற்போது சுமார் 1000 கறவை மாடுகள் உள்ளதோடு, அவற்றிலிருந்து தினமும் பால் சேகரிக்கப்படுகிறது.
இந்த மாடுகளிடமிருந்து தினமும் 03 முறை பால் கறக்கப்படுவதோடு நாட்டின் பால் தேவையின் 40,000 லிற்றர் திரவப் பால் இப்பண்ணை உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்பேவெல கட்டமைப்பிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.
பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
இக்கறவை மாடுகளைப் பராமரித்தல், தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்குதல், எடை நிறுத்தல் , நோய் நிலைகளைக் கண்டறிதல், நோய்
நிலைமைக் காணப்பட்டால் மாடுகளைப் பிரித்தெடுத்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் இயந்திரம் மூலம் சுயமாக நடைபெற்று வருகின்றன.
அம்பேவெல பண்ணைக் கட்டமைப்பு முழுவதும் உள்ள 4500 மாடுகளுக்கு தற்போது உணவளிக்கப்படுகின்றது.
2001 ஆம் ஆண்டு அம்பேவெல குழுமம் நிறுவப்படுவதற்கு முன்னர், அது அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தபோது, நாளொன்றுக்கு 1500 லிற்றர் பால் மட்டுமே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது.
தற்போது சிறந்த கறவை மாடுகளை இலங்கையில் உருவாக்குவதில் அம்பேவெல கட்டமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்குள் வெற்றிக் கண்டுள்ளது.
அதன்படி, இந்தக் கறவை மாடுகள் எதுவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.
மேலும் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக உலகில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கமைய உலகிலுள்ள உயர் ரக ஆண் மாடுகளின் விந்துக்களை இறக்குமதி செய்து,
மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்குப் பொருத்தமான கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வது இந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு பகுதியாக உள்ளது.
அதேபோன்று, கறவை மாடுகளுக்கு உணவளிப்பதன் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சோள விவசாயிகளின் முழுமையான விளைச்சலை அம்பேவெல பண்ணைக்கு பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆண்டுக்கு சுமார் 25,000 மெட்ரிக் தொன் சோளப் பயிர்களை சேகரித்து, சேமித்து வைக்கும் வசதியும் அம்பேவல கட்டமைப்பில் உள்ளது.
அம்பேவெல பண்ணைக்கு அருகில் தற்போது கைவிடப்பட்ட நிலையிலுள்ள மேய்ச்சல் நிலத்துக்கு உகந்ததென இனங்காணப்பட்டுள்ள சுமார்
30 ஏக்கர் காணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பார்வையிட்டார்.
சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதல்முறையாக மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த
2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது.
திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு
செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில்
எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தந்தை நாகர்ஜுனாவும் சேர்ந்து நடித்திருக்கும் பங்கராஜு திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்த நாக சைதன்யா அதில் சமந்தாவை பிரிந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில், “பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக
எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். அது போன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவை
பிரிந்தது தொடர்பாக முதன் முறையாக நடிகர் நாக சைதன்யா பேசியிருப்பது குறித்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
இன்று காலை தொடக்கம் ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ள மேலும் சில கிராம உத்தியோகத்தர்
பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும்
தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும்
பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்
தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும் புத்தளம் மாவட்டத்தில்
பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்
தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக
ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய
நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளராதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும்
மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை நிர்மாணிப்பதற்காக வருடாந்த திட்டத்தில் திறைசேரியினால் அனுமதிக்கப்பட்ட 60 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு
மேலதிகமாக, 180 மில்லியன் தொகைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதுடன் ஏற்கனவே தனக்கு விசேடமாக கிடைக்கப்பெற்ற வேண்டுகோளின்
அடிப்படையில் தான் குறிப்பிட்ட தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதனை சில தரப்பினர் தவறாக புரிந்துகொண்டு ஊடகங்களில்
விமர்சனங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிழையான கருத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும் செப்ரெம்பர் மாத முடிவுக்கு முன்னர் தேவையான அனைத்து ஒதுக்கீடுகளையும் பெற்று செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் 2022 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை ஒக்டோபர்
மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டதுடன் ஆரம்பிக்கும் அபிவிருத்தி திட்டங்களை 2 வருடங்களுக்குள் முடித்து அதனை பயன்பாட்டிற்குரியவாறு செயற்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும்; வடமாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக
முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக ஓதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
இலங்கையில் தொடர்ந்து கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்பொழுது மேலும் 16
கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்த பட்டுள்ளனர்
மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்
மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்
இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்போது எட்டு
காவல்துறை பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
இவ்வாறு முடக்க பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபடுத்த
பட்டுள்ளது
8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்
8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்
பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம
பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்
அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை
என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்
இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்
மூன்று படையணிகளை உள்ளடக்கிய இலங்கை இராணுவ பொறியியலாளர்களின் பல் திறன் மற்றும் பன்முகத் திறன்
கொண்ட புதிய முதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு நேற்று முன்தினம் ஸ்தாபிக்கப்பட்டது.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ பொறியியலாளர் பிரிவு பல்திறன் மிக்க பல பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய அனைத்து வகையான தேசிய கட்டுமான பொறியியல் பணிகள்,
சிவில் -இராணுவ பணிகள், கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள், துரித அனர்த்த முகாமைத்துவ பணிகள், தளபதியின்
பணிகள் என்பவற்றை மத்தியஸ்த்தப்படுத்தல், பொறுப்பேற்றல், விநியோகித்தால் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் என்பவற்றை முன்னெடுக்கவுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் , இராணுவத்தின் தளபதியும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர
சில்வா, மத்தேகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள தலைமையக கட்டிடத்திற்கான பெயர் பதாகையை திறந்து வைத்ததுடன்
நிர்மாணப் பணிகளை தொடக்கி வைக்கும் வகையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்ளையும் நாட்டினர்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்
வகையில் உத்தியோகபூர்வ ஏட்டில் இராணுவ தளபதி வைபவ ரீதியாக கையொப்பமிட்டார்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவுக்கான முதலாவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஒக்டோபர் 28 ம் திகதி முதல்
அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய பொறியியலாளர் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சப்பர்ஸ் குடா ஒய்வு விடுதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேட்மிட்டன் மைதானம் மற்றும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தையும் இராணுவ
தளபதி திறந்து வைத்தார். அத்துடன் இரசாயன அச்சுறுத்தல்கள், வெடிப்பொருட்கள் அகற்றுதலுக்கு எதிரான தமது எதிர் நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக
இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு சக்தி படை வீரர்களினால் காட்சிப்படுத்தப்பட்ட ஒத்திகை காட்சியையும் இராணுவ தளபதி கண்டுகளித்தார்.
“எமது பணம் வெளிநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் செலவிடுவதற்கு பதிலாக நாம் உயர் தொழில்நுட்பத்துடன் அதிநவீன இயந்திரங்களைப் பெற்று
ஜனாதிபதியின் ஆசியுடன் முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என தெரிவித்த இராணுவ தளபதி,
இராணுவத்தினரால் குறைந்த செலவில் உயர்ந்த தரத்துடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவத்
தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி, மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி , கள பொறியியலாளர்
தலைமை அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

























