Search Results for: தண்டவாளத்தில்
தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
இன்று (02) காலை எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர், வாத்துவ மொல்லிகொட, சாந்த பற்றிக் வீதியில் வசித்து வந்த குணசிங்க சமந்த சந்திரகுமார சில்வா என்ற 36 வயதானவர் ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலிருந்து மாத்தறை செல்லும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மொல்லிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை மோதியதால் அவர் உயிரிழந்ததுடன் சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
தடம் புரண்ட ரயில்
தடம் புரண்ட ரயில்
தடம் புரண்ட ரயில் ,ரம்புக்கனா பகுதியில் ரயில் தடம் புரண்டதால் சேவைகள் பாதிக்கப்படவில்லை – ரயில்வே திணைக்களம்
ரம்புக்கனா பகுதியில் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதால்
ரம்புக்கனாவிலிருந்து பனதுராவுக்கு இயக்கப்படவிருந்த ரயில், சேவையில் இருந்தபோது தடம் புரண்டதாக ரயில் இயக்கங்களின் கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவத்தால் ரயில் சேவைகளில் எந்தவித இடையூறோ அல்லது தாமதமோ ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றுவதற்கான பணிகளை ரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
மச்சு பிச்சு அருகே ரயில் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் காயம்
மச்சு பிச்சு அருகே ரயில் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் காயம்
மச்சு பிச்சு அருகே ரயில் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் காயம் மற்றும் ஓட்டுநர் மரணம்.
பெருவின் புகழ்பெற்ற மச்சு பிச்சு தொல்பொருள்
பெருவின் புகழ்பெற்ற மச்சு பிச்சு தொல்பொருள் தளத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளானதில் ஒரு
ஓட்டுநர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
ஆண்டியன் நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலமான இன்கா கோட்டைக்கு செல்லும் ரயில் பாதையில் நேருக்கு நேர் மோதியது – இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இன்கா ரயில் எஸ்.ஏ. மற்றும் பெருரெய்ல் எஸ்.ஏ. ஆகியவற்றால் இயக்கப்படும் ரயில்களுக்கு இடையேயான மோதல் குறித்து போலீசார் விசாரித்து
வருகின்றனர், இது முக்கியமாக சுற்றுலாப் பயணிகளை இந்த சின்னமான இடத்திற்கு கொண்டு செல்கிறது.
சுமார் 20 பேர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரி
காயமடைந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.
விபத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், தண்டவாளத்தில் மோசமாக சேதமடைந்த என்ஜின்கள் ஒன்றையொன்று
எதிர்கொண்டு, உடைந்த கண்ணாடி சிதறிக்கிடப்பதையும், தண்டவாளத்தின் ஓரங்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதையும் காட்டியது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொரிவைராச்சினா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது, இதுவும் ஒரு தொல்பொருள் தளமாகும்.
மச்சு பிச்சுவை அருகிலுள்ள குஸ்கோ நகரத்துடன் இணைக்கும் பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
திடீரென தண்டவாளத்தில் ஏற்பட்ட குழியினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்துள்ளது.
கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்
ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த திடீரென தோன்றிய குழியை உடனே கவனித்ததனால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இதனைக் கவனிக்காது விட்டிருக்கப்படுமாயின் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
அந்தக் குழியை சீர்திருத்தி, மீண்டும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..
தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி ,கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது அவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தடம் புரண்ட ரயில்
தடம் புரண்டது ரயில்
தடம் புரண்ட ரயில் ,கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் என்று தடம் புரண்ட நிலையில் தற்போது அந்த வழிச்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே தடம் புரண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட தொடருந்து சாலையை புணரவைத்து மீளவும் இயக்கும் நிலையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
காலநிலை காரணமாக தொடர்ந்த பாதைகளில் விரிசலை ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .
எனினும் இந்த தண்டவாள விரிசல்கள் காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
தடம் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு மூலமும் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இந்த ரயில் தடம் புரண்டதை அடுத்து கொழும்பு கோட்டை பதுளை பகுதிக்கான போக்குவரத்துக்கள் யாவும், தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று பிற்பகல் 1: 30 மணியளவில் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரத நிலைய அதிகாரிகள் 1990 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகையிரதத்தின் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற உள்ளது
புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்
புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்
புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து, காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்
இதையடுத்து அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
இஹல கோட்டை – பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறைந்தது 7 ரயில்களின் பயண அட்டவணை தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
தற்காலிகமாக கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையம் வரை இயங்கும்.பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவை ரயில் நிலையம் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்குby நிருபர் காவலன்
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்by நிருபர் காவலன்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடைby நிருபர் காவலன்
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.
மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார்.
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது, வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் ஒருவர் தற்கொலை புரிந்த செயல்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை நானு ஓயா பகுதியில் வாலிபன் ஒருவர் ,
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் ,அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன
பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
களுத்துறை சிறிகுருச சந்தியில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி மேலும் மூவருடன் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் “அத தெரண” விற்கு கிடைத்துள்ளது.
விசாரணையில், குறித்த சிறுமி நேற்று (06) பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள விடுதிக்க மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.
பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
நாகொட பிரதேசத்தை சேர்ந்த களுத்துறை பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
திடீரென விடுதி அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
இறந்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய அவர் பின்னர் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், ரயில் தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் சடலத்தை மற்றைய இளைஞனையும், யுவதியையும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியுடன் கடைசி நேரம் வரை தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் தற்போது இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதோடு, அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி
கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி
கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு நோக்கி வரும் சில ரயில்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி ரயிலை மீண்டும் தண்டவாளத்தில்
இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
இலங்கையில் காதல் ஜோடிகள் ,ரயில்வே தண்டவாளத்தில் நடந்து, சென்று கொண்டிருந்த பொழுது ,ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் .17 வயது இளம் பெண் ஒருவருக்கும் இடையில். முறையற்ற காதல் நிலவி வந்துள்ளது .
இவ்வாறு இருவரும் ரயில்வே தாண்டவளத்தில் கதைத்த படி காதல் புரிந்த ,நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பின்னல் வந்த ரயில் மோதி , படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்த காதல் ஜோடி , டிக்கோயா மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இதில் காதலி ,பலத்த காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இடம் மாற்ற பட்டுள்ளார் .
கள்ள காதல் செய்த கோலம் .
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .
கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.
குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .
விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .
ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.
இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.
வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்
வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்
இலங்கை வவுனியாவில் இருந்து அனுராத புரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள்
எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு தடை பட்டுள்ளது
தண்டவாளத்தில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவைகள் இடை நிறுத்த படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான
இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும்,
கடந்த 05 ஆம் திகதியும் தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள்,
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்
காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபை மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றி கொடுக்கும் பையின் மேல் குட்டை நாய் ஒன்று படுத்துறங்கிய சம்பவம் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,
இதில் இருந்து இந்த மருத்துவமனையின் சுகாதார வண்டவாளம் தண்டவாளத்தில் செல்கிறது ,குதிரை ஓடி மருத்துவர் ஆனால் இப்படித்தான் நடக்கும் .
வடக்கு சுகாதார அமைச்சர் கோட்டார் அடித்து குப்புற கிடக்கிறார் , காரைநகர் போன்று ,வரணி மருத்துவமனையில் வைத்தியரும் இது போன்ற சர்ச்சையில் , கெடுபிடிகளில் ஈடுபட்டுள்ளார் ,
அங்கும் பணியாளர்கள் இடமாற்றம் செய்வதுடன் பணி புரியும் பெண்களுடன் முறுகல் நிலையில் உள்ளதுடன் ,இவர்களின் அசமந்த போக்கின் காரணமாக ஒரு கர்ப்பிணியும் ,மூதாட்டி ஒருவரும் மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நபர் ஒருவர் காரை நகர் வைத்தியசாலையின் அசிங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் வடக்கு சுகாதார அமைச்சர் கோவணத்தை கழற்றி தலையில் முக்காடு போட்டு செல்வதாக நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளை புரிந்து வருகின்றனர் .
கோத்தபாயவின் ஆட்சியில் நடக்கும் இந்த சீர்கேடுகளை தட்டி கேட்பது யார் ..?
காரைநகர் புலம் பெயர் வாசிகள் இதனை தட்டி கேட்டு குறித்த மருத்துவமனை வைத்தியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மாற்றுவார்களா ..?
சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ,அசுத்தம் அசிங்கத்தை தருகிறது எனவே அந்த அசிங்கமான மருத்துவரை உடனடியாக மாற்றி சுத்தம் சுகாதரத்தை நிலை நாட்டி மக்களை காப்பாற்றுங்கள் கரை தீவு படித்த அறிவார்ந்த சமூகமே .
ஆள் சேர்க்கும் வடக்கு மாகாண ஆளுநர் இதனை கவனத்தில் எடுப்பாரா ..? அல்லது வரப்போகும் புதிய ஆளுநர் தான் புரட்சி நடவடிக்கை மேற்கொள்வாரா ..?









































