அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை
Posted in இலங்கை செய்திகள்

அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை அதிகரித்த மழை கவலைக்குரியதல்ல என வானிலை ஆய்வுத் துறை

நீர்ப்பிடிப்புப் பகுதிகள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட போதிலும்,

வரும் நாட்களில் பேரிடர் எதுவும் ஏற்படாது என வானிலை ஆய்வுத் துறை நேற்று தெரிவித்தது.

தற்போது மழைப்பொழிவு

“தற்போது மழைப்பொழிவு அதிகரித்துள்ளது, இது தென்மேற்குப் பருவமழை நிலவுவதால் ஏற்படுகிறது. இருப்பினும், பேரிடர் நிலைமைகள் உருவாகும்

அறிகுறிகள் எதுவும் இல்லாததால், கவலைக்குரிய நிலை எதுவும் இல்லை,” என வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்புப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.

ஜூலை மாதத்திற்குள் எல் நினோ நிலைமைகள் நிலைபெறும் என்றும், அது இலங்கையில் வறண்ட காலங்களைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு எல் நினோ நிலைமைகள் காரணமாக தென்மேற்குப் பருவமழையின் வீரியம் குறைவாக இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

களு கங்கை, களனி கங்கை, நீல்வல கங்கை

இதற்கிடையில், களு கங்கை, களனி கங்கை, நீல்வல கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் நேற்று வரை அதிகரித்துள்ளதாக

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் என். எல். சூரியபண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார். “நீர் மட்டம் அதிகரித்திருந்தாலும், உடனடி வெள்ள அச்சுறுத்தல் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், நேற்றைய நிலவரப்படி, கின் கங்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 75 மி.மீ., நீல்வலாவில் 55 மி.மீ., களனியில் 50 மி.மீ. மற்றும் களு

கங்காவில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நொர்டனில் 32.4 மி.மீ., லக்ஷபானாவில் 37 மி.மீ., மற்றும் அப்பர் கோட்மலையில் 13.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று, மாத்தறை மாவட்டம் அத்துரேலியாவில் 102 மி.மீ., காலி மாவட்டம் ஹினிடுமாவில் 92 மி.மீ., பூசாவில் 74 மி.மீ., திஹகோடாவில் 90 மி.மீ. மற்றும்

கேகாலை மாவட்டம் வரக்கபொலவில் 69 மி.மீ. என அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

உயிராயுதம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உயிராயுதம்

உயிராயுதம்

உடலோடு வெடிசுமந்த
உயிரான ஆயுதம்
உலகத்தின் தலைசிறந்த
உன்னத காவியம்

அலையோடு படகேறிய
அசையாத ஓவியம்
அஞ்சாது பகைமுடித்த
அண்ணனின் வீரம்

நெஞ்சொடு வெடி சுமந்த
நெருப்பான போரியம்
நிழலாக தொடரும்
நினைவழியா காவியம்

ஆடியில் ஆடிய
அழியாத ஆழியம்
அந்நியன் ஓடிட
அனல் கக்கிய வீரியம்

அங்கையர் கன்னியும் மில்லரும்
அவருடன் கூடிய தோழரும்
நெஞ்சில் வாழும் ஆலயம்
நினைவில் உருகும் ஊழியம் .

ஆக்கம் 05-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
Posted in இலங்கை செய்திகள்

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி ,விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் .

இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் ஈச்சிலம்பற்று (வெருகல்) பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும்

இடையிலான சந்திப்பொன்று, இ வெருகல் – சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.

அவலத்தின் விளிம்பில் எங்கள் இனம் சிறீதரன் எம்பி

அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை.

தமிழ்த்தேசிய அரசியல் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன – என்றார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட க்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் சங்கர், ஓய்வுநிலை அதிபர் இரத்தினசிங்கம்,

மற்றும் மாவட்டக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூஞ்சை நோய் மீண்டும் பரவல்
Posted in இலங்கை செய்திகள்

பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது.

மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.

இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும்.

மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும்.

மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.

மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும்.

மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்


ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்

உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட வந்த ரஷ்யா விமான படை அழிப்பு ,
எரியும் விமானங்கள் ,சிதறியா இராணுவ முகாம்கள் ,வெடித்த கடும் போர் ,
சூடு பிடிக்கும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் .

ரஷ்யா படைகள் நடத்தும் அஅகோர தாக்குதலினால் செயல் இழக்கும் உக்ரேன் இராணுவம் .


போராடும் வீரியம் குறைக்க படுவதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் அதிகாரிகள் .

ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்

எம்மோடு பேச வாருங்கள் இல்லை என்றால் ,உக்ரைன் என்கின்ற நாடு காணாமல் போகும் என முழக்கம் .

மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் ஜெலன்ஸி ,
கைவிட படும் நிலைக்கு யுக்ரைன் போர் களம் மாற்றம் பெற்று வருவதை ,
களமுனை நகர்வுகள் காட்சி படுத்துகின்றன .

விரைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ,இராணுவ பேரழிவுகளை தடுக்க மறுத்தால் .


வரலாற்றில் யுக்ரைன் என்ற நாடு இலலாமல் போன தடயம் உருவாகலாம் எனற நிலை ,உருவாக்கம் பெறும் என்கின்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன .

வீடியோ

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

லண்டனில் இரு நூற்று ஏழு பேருக்கு குரங்கு நோயானது தொற்றியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த குரங்கு நோயினால் பாதிக்க பட்ட மக்கள் விசேட சேவை பிரிவின் கீழ் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

32 கிலோ மார்பு கொண்ட பெண்

லண்டனில் வேகமாக பரவி வரும் குரங்கு நோயின் தாக்குதல் அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

ஆப்ரிக்கா நாட்டில் இருந்து காவி வரப்பட்ட இந்த குரங்குநோயின் தாக்குதல் பாதிப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்க பட்டுள்ளது

விரைவில் கர்ப்பம் தரிக்க வைக்கும் இந்த உணவுகள்

மேலும் இந்த நோயானது வீரியம் கொண்டு தாக்கும் திறன் அதிகரித்தால் மீளவும் ஐரோப்பிய நாடுகள் அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

குரங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் பல்வேறு பட்ட
வேலை திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

    முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

    பிரான்சில் வசித்து வரும் தொழில் அதிபரும் ,சமூக சேவகருமாக விளங்கி வரும்

    நாகலிங்கம் பால சந்திரன் அவர்களுக்கு உலக தமிழர் பல்கலைக்கழகம் அமெரிக்காவினால்எதிர்வரும் 28 ஆம் திகதி ,முனைவர் எனும் டாக்ட்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க படுகிறார்

    முப்பது வருடங்களாக தமிழீழ போராட்டத்தின் பலமாக தன்னை அர்ப்பணித்து செயல்

    முன்னாள் TGTE சபாநாயகர்

    பட்டவரும் ,பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயல் பட்டு தனது பணியினை திறம்பட ஆற்றியவர்

    மேலும் தனி நபராக போராடி பல மக்களுக்கு உதவிகளை வழங்கி வருபவரும் ,நாடு

    கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயக்காராக விளங்கி அந்த அமைப்பை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமையும் இவரை சாரும்

    தன் இனம் ,தன் மக்கள் என தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்த பண்பாளன்,அளப்பெரும்

    சமூக சேவகனுக்கு உரிய கவுரவத்தை உலகத் தமிழர் பல்கலைக்கழகம் ,அமெரிக்கா வழங்கியுள்ளது பெருமை தருகிறது

    ஈழ மண்ணில் புலிகள் ஆளுகை காலத்தில் தமிழ் மண் வீரியம் பெறவும் ,அந்த போராட்டம் வெல்லவும் பல்வேறு பட்ட உதவிகளை ஒன்று திரட்டி வழங்கிய அளப்பெரும் சேவகர்

    தவிர பிரான்சில் கலைபண்பாடடு கழகம் உயிர்பெறவும் ,தமிழர் தேசத்தில்

    பொருண்மிய மேம்பாடு சிறக்கவும் தன் பங்களிப்பை ,தனது சக்திக்கு மீறிய வகையில் அளித்தவர்

    பல்வேறு பட்ட இராயத்தந்திர உறவுகளை பேணி அதன் மூலம் ஈழ பிரச்சனையை சர்வதேச அரங்கில் உரக்க ஒளிக்க வைத்தவர் ,இவ்வாறன பல்முக ஆற்றல் கொண்ட ஒருவருக்கு இந்த விருது கிடைப்பது மகிழ்வை தருகிறது

    இவருடன் மேலும் மூன்று தமிழர்களும் அடக்கம் பெறுகின்றனர்

    அவருக்கும் ,மேலும் இங்கே பட்டம் பெறும் அணைத்து உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்களையும்
    பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்

    நாகலிங்கம் பால சந்திரன்
    நாகலிங்கம் பால சந்திரன்
      Posted in மருத்துவம்

      பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

      பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

      பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

      வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள்.

      அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

      நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.

      ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.

      எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான்.

      ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.

      இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?

      வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை

      மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.

      வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது

      . அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது

      பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

      வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

      வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்

      வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர்

      போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

      உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும்.

      காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே

      செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.

        Posted in இலங்கை செய்திகள்

        நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்

        நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்

        அரசாங்கத்துக்கு மனோ கணேசன்


        நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி

        தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர்

        மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு

        கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று,

        நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

        எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

        அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த

        அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?

        ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று

        கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.

        இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன

        ? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான்

        தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.

        இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் செத்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.

        நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.

        அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி வரி

        குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூ. 1600கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்கலாம்?

        நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா

        அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.

        கோதாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது. பிரதமர் மோ

        டி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய-இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற

        மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு

        பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது. இறப்பும் கூடி விட்டது.

        அதுபோல் நம்ம ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோதாபய

        ராஜபக்ச, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையின் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.

          Posted in Uncategorized

          கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

          கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

          இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது


          கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு

          கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன

          இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட

          நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது

          இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

            Posted in Uncategorized

            விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

            விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

            இந்திய டில்லி பகுதியியல் ஆளும் மத்தியாசுக்கு எதிராக

            விவசாயிகள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

            இதனால் அவர்கள் போராட்டம் நாள் தோறும் வீரியம் அடைந்து

            செல்லும் நிலையில் திடீரென அந்த பகுதியில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியது

            இதன் மூலம் இவர்கள் மூலம் பரப்ப படும் செய்திகள் தடுக்க பட்டால்

            அதன் வாயிலாக இவர்கள் போராட்டத்த்தை நசுக்கி விடலாம் எனது

            ஆளும் மோடி அரசின் நிலைப்பாடாக உள்ளது எனப்து குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்

            கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்

            பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

            தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,இவரை போன்று ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர்

            இரண்டாம் அலையாக வீரியம் கொண்டு பரவி வரும் கொரனோ நோயின்

            தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1500 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரிட்டன் தழுவிய நிலையில்

            பலியாகியுள்ளனர்
            ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

            ,தொடர்ந்து பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

            புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

            பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்

            நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல

            நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்

            கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்

            எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது

            இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்

            அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி

            அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி

            அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாங்குதலில் சிக்கி

            கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,197 பேர் பலியாகியுள்ளதுடன் புதிதாக அதே நாளில் 98,840 பாதிக்க பட்டுள்ளனர்


            இதே போல பிரிட்டனில் 570 பேர் பலியாகியும் 32,725 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டு ஆறு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு போட பட்டுள்ள பொழுதும் வீரியம்

            கொண்டுள்ள இந்த நோயானது புதிய வடிவில் பரவி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in உலக செய்திகள்

            கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

            கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

            உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.

            உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது

            சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்

            தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

            இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது.

            கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

            மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

            வைரஸ் பரவியவர்களில் 13.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91

            ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

            தொற்று பாதித்தவர்களில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 78,19,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

            தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை ஒரு

            கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

            Posted in உலக செய்திகள்

            உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

            உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

            உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந்துள்ளது.

            உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

            சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

            இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

            கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

            வைரஸ் பரவியவர்களில் 12.27 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

            பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு
            கொரோனா பரிசோதனை

            சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

            முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

            உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

            கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

            இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

            உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

            கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து

            761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

            Posted in மருத்துவம்

            அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்

            அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்

            சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

            அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்… ஏற்படுத்தும் பாதிப்புகளும்…
            அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்
            சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை

            கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள்

            இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின்

            வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை

            அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ

            பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும்

            நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

            நீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது

            கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான

            அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற

            அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.

            கணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான்

            மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை

            வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

            ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி

            படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.

            மாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும்.

            மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

            சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.

            சிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள்.

            ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.

            எச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால்

            பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால்

            பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.

            Posted in மருத்துவம்

            இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

            இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

            வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது

            பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

            இதய நோய் அபாயத்தை குறைக்கும் வாழைப்பழ தேநீர்
            வாழைப்பழ தேநீர்
            வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்

            நிறைந்திருக்கின்றன. அதனை தேநீராக தயாரித்தும் பருகலாம். வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள்

            நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.

            வாழைப்பழ தேநீர் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைப்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய்

            அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

            வாழைப்பழ தேநீரில் சர்க்கரை குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் சாப்பிடலாம். வாழைப்பழத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது சர்க்கரையின் வீரியம்

            குறைந்துவிடும். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியமும், பொட்டாசியமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். மேலும்

            வாழைப்பழத்தில் எல்-டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான

            செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உருவாக்கும். அதுபோல் டொபமைன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது.

            இது செரோடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கும் என்பதும்

            கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீர் தவறாமல் குடித்துவருவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்.

            வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைவதற்கும் உதவும். பசியையும் கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

            வாழைப்பழ தேநீரில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியமானது ரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கங்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். வாழைப்பழத்தின் தோலில்

            ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள்

            உள்ளன. அவை சருமம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

            வாழைப்பழ தேநீர் தயார் செய்வது எளிதானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக

            நறுக்கி போடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு

            லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

            Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

            ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

            ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

            ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

            ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை


            இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்
            ரோம்:

            சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்

            195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

            இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

            மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

            இதற்கிடையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.

            குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

            இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

            கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

            இத்தாலி – 6,077
            சீனா – 3,270
            ஸ்பெயின் – 2,207
            ஜெர்மனி – 118
            அமெரிக்கா – 504
            ஈரான் – 1,812
            பிரான்ஸ் – 860
            தென்கொரியா – 111
            சுவிஸ்சர்லாந்து – 118
            இங்கிலாந்து – 335
            நெதர்லாந்து – 213
            பெல்ஜியம் – 88
            ஜப்பான் – 41
            பிரேசில் – 25
            கிரீஸ் – 17
            இந்தோனேசியா – 49
            பிலிப்பைன்ஸ் – 33
            ஈராக் – 23
            ஸ்வீடன் – 25
            பொர்ச்சீகல் – 23
            ஆஸ்திரியா – 21
            சான் மரினோ – 20
            அல்ஜிரியா – 17
            துருக்கி – 30

            ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை
            ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை