விசாரணையில் பிள்ளையான்
Posted in இலங்கை செய்திகள்

விசாரணையில் பிள்ளையான்

விசாரணையில் பிள்ளையான்

விசாரணையில் பிள்ளையான் ,முன்னாள் புலிகள் இயக்கத்தை காட்டி கொடுத்து சிங்க பாதுகாப்பில் வாழ்ந்து வரும் பிள்ளையான் குற்றப்புலானய்வு துறையில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இன்று நடந்த விசாரணையில் வகைக்கு மூலத்தை பெற்று விட்டு பவர் வெளியேறி சென்றுள்ளார் .

பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிட தக்கது .

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .

இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் சில காண்ப்பிக்கின்றன .

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சைக்கோ மருத்துவர் அல்லது சக மருத்துவர்களை மன நோயாளியாக சித்தரிக்கும் ,

சத்தியமூர்த்தி என்கின்ற மருத்துவர் அர்ச்சுனாவை போல தற்போது நாகநாதன் மருத்துவரை கூண்டில் ஏற்ற பொலிஸ் விசாரனையை ஆரம்பித்துள்ளார் .

நாகநாதன் மருத்துவரை அணுகிய காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அதில் அவர் சிகிச்சை புரிகின்ற சத்திர சிகிச்சை பகுதியில் மருத்துவர்கள் தாதிமார்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ள பட்டதாக சமூகவலைத்தள பதிவுகள் பேசுகின்றன .

தங்களது மாபியா கொள்ளையை தடுக்கும் முகமாக அப்பாவி மருத்துவர்களை மிரட்டி ஒடுக்கும் நடவடிக்கையில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு வருகின்றார் .

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மருத்துவமனை ஊழல்களை கூறுபவர்களை மிரட்டி அடக்கும் ஒரு திறந்த நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட நகர்வாக இந்த வைத்தியர் நாகநாதன் மீதான பொலிஸ் விசாரணை விடயம் பார்க்க படுகிறது .

போலீஸ் விசாரணைக்கு உள்ளான மருத்துவர் நாகநாதன் தனது சட்டத்தரணியை நாடியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .

தமிழ் மக்களின் கலாச்சார பட்டினத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான சத்தியமூர்த்தியின் ,தனக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்கின்ற இழி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே தள்ளி 16 வயதான சிறுமி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் ​தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநகபர்கள் நால்வரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

இதற்கான விசேட அனுமதியை, களுத்துறை நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய வழங்கியுள்ளார் என்று குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் நால்வரிடம் மட்டுமன்றி தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளன ஹோட்டலின் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண்ணிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதேவேளை, பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளில், உயிரிழந்த பெண்ணின் தோழியின் காதலன் எனக் கூறப்படும் நபரே சிறுமியை பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் 12,000 ரூபாவை முற்பணமாக குறித்த நபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்

அதன்படி, இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சோதனையிட விசாரணையாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இறந்த சிறுமிக்கு தான் விற்கப்பட்டது தெரியுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

மேலும், சிறுமி மேல் மாடியில் இருந்து கீழே விழுவதற்கு முன்னர் சிறுமிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பிரதான சந்தேகநபர் கூறியுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று களுத்துறை நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய முன்னிலையில் நீதிமன்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு ட்டத்தரணிகளுக்கும், இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பவம் இடம்பெற்ற விடுதியின் உரிமையாளரின் மனைவி 02 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தோழி, காதலன் மற்றும் சாரதி ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி இறக்கும் போது சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பிரதான சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள்

சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா

சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா

சீனா நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று


132 பேருடன் திடீரென வீழ்ந்து நொறுங்கியது


பாட்டு அறையுடன் தொடர்புகளை துண்டித்து ராடாரில் இருந்து மறைந்துள்ளது

இந்த விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ள பொழுதும்

,அவை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் உள்ள

விமானியின் குரல்பதிவுகள் தெளிவின்றி காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது


குறித்த விமானத்தை ரொக்கட் தாக்கி வீழ்ந்து இருக்க கூடும் என்ற புதிய

தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுவரை இந்த விமானம் எவ்விதம் வீழ்ந்தது என்பது தொடர்பில் சீனா

தெரிவிக்கவில்லை ,மர்மம் தொடர்கிறது

    Posted in இலங்கை செய்திகள்

    ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

    ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

    கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து

    அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.

    வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்

    தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.

    மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்

    செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட

    வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

      வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

      அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவு பார்க்கும் ,ஆள் இல்லா விமானம் ஒன்று அமெரிக்கா

      மெஸ்சிக்கோ
      எல்லை பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது

      மேற்படி விமான விபத்து தொடர்பில் பூரண விசாரணைகளை அமெரிக்கா இராணுவம் ஆரம்பித்துள்ளது

      சமீப நாட்களாக பல நாடுகளின் இராணுவ வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

        வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

        கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

        நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்

          சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்

          வீரகெட்டிய, பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

          இதனை, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

          உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

          அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

            Posted in Uncategorized

            லண்டன் கென்ட் கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூடு – விசாரணையில் போலீஸ்

            லண்டன் கென்ட் கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூடு – விசாரணையில் போலீஸ்

            லண்டன் கென்ட் கடல் பகுதியில் மனித எலும்பு கூடு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது


            மேற்படி மனித எச்சம் எவ்விதம் இங்கு வந்தடைந்தது என்பது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


            இது கொலையா அல்லது ,கடலில் இறந்தவர் சடலம் இங்கு கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

              Posted in Uncategorized

              ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்

              ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்

              இலங்கை மாத்தறை பகுதியில் நீரோடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் மனித தலை ஒன்று மிதந்து வந்துள்ளது ,

              இதனை கண்ணுற்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மேற்படி நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

              கோட்டா ஆட்சியில் ஆறுகளில் இவ்விதம் மனித சடலங்கள் மிதந்து வருகிறது ,இது கொலையா

              ,அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

              மனித தலை
              மனித தலை
                Posted in Uncategorized

                காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                வாதுவ பிரதேச பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

                .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 57 வயதுடைய நபர் எனவும் ,இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது

                என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

                  சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

                  இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்


                  சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது

                  இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

                    ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

                    மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு

                    இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                    77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்

                    இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்

                    அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி inner-west பகுதியில் ஆண் மற்றும்

                    பெண் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்

                    இதில் பலத்த காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                    மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    கத்தி குத்து
                    கத்தி குத்து
                    Posted in உலக செய்திகள்

                    பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்

                    பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்

                    பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அகதிகள் தமது

                    வயதை மறைத்து குறைத்து வழங்கி வந்தது விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது

                    சிறகை என்ற பிரிவுக்குள் தம்மை அடக்கிட இவ்விதம் பொய்யான

                    வயதை அவர்கள் வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது

                    நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ,


                    தொடர்ந்து இரண்டாயிரம் பேரிடமும் அது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

                    Posted in சினிமா

                    சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்

                    சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்

                    பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                    சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
                    சல்மான் கான்


                    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது

                    பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

                    மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த

                    பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

                    சல்மான் கான்

                    இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி

                    நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும்.

                    கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மின்சார தடை – நடந்தது என்ன..? – விசாரணையில் விசேட குழு

                    நேற்று இடம்பெற்ற மின்விநியோக சீர்குலைவு பற்றி ஆராய்வதற்காக

                    நியமிக்கப்பட்ட குழு இன்று காலை கூடவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

                    நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடு முழுவதிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

                    கெரவலப்பிட்டி உப மின் நிலையத்தின் விநியோக வலைப்பின்னலில்

                    ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் எனக் கருதப்படுகின்ற நிலையில்

                    குழுவொன்றை நியமித்து உண்மையைக் கண்டறியுமாறு மின்வலு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

                    இந்தச் சீர்குலைவு காரணமாக வீதிப் போக்குவரத்துச் சமிக்ஞைகள் இயங்காமல்

                    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ரெயில் சேவைக்குப் பாதிப்பு

                    ஏற்படவில்லை எனவும் ரெயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

                    2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் மின்விநியோக வலைப்பின்னல் சீர்குலைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.