Search Results for: விசாரணைகள்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம் ,ஷிரந்தியின் இரண்டு நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த சிஐடி உத்தரவிட்டுள்ளது
கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக துணை தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதில் ஐஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயசிங்க கூறினார்.
இம்புல்கொட மற்றும் மாகோலவில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறினார்.
மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் இஹல இம்புல்கொடவில் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு
விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகோலவில் ரூ. 01 மில்லியனுக்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும்
ஜெயசிங்க கூறினார். நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளில், இந்தப் பத்திரங்கள் அலரி மாளிகையில் வரையப்பட்டு கையொப்பமிடப்பட்டு,
2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் ,போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.
விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .
இனி நாங்கள் என்ன செய்யலாம்
1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )
2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .
ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.
இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .
மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .
இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு
எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .
தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| பனாகொட இராணுவ முகாமில் நேற்று (24) இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் தனது உத்தியோகபூர்வ ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர் 32 வயதுடையவர் எனவும், இவர் மாத்தளை – நாவுல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இந்த நிலையில், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய,
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்
போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும்
முன்வைத்த கூற்றுக்கு அமைய விரைவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்
இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குழுக்கள் இந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகையை அமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த மக்களை ஏமாற்றி பணத்தையும் தங்க நகைகளையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ள ஜானக்க சேனாதிபதி என்பவருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க என்பவருக்கும்
எதிராக சட்ட ஏற்பாடுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
இலங்கையில் இறுதி போரின் பொழுது கைது செய்யப்பட்டு காணமால் போன உறவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் என என அமெரிக்கா தூதுவரிடம் இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மகிந்தா ,மைத்திரி ,கோத்தபாயா அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா என நான்கு ஜனாதிபதிகள் ,ஆண்டு ஆட்சி புரிந்த பொழுதும் ,இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .
பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை கொழும்பு மட்டக்குளி காவல்துறை அருகில் உள்ள பாலம் ஒன்றில் ,மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டு ,மீட்க பட்டுள்ளது .
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 76 வயதுடைய நபர் என கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணாம் தெரிவிக்க படவில்லை .
இது கொலையா ,விபத்தா ,இயற்கையை மரணமா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்
துருக்கி ,வடமேற்கு Bursa மாகாணத்தின் மேலாக பறப்பில் ஈடுபட்ட பயிற்சி விமானம் ஒன்று திடிரென வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை அதில் பயணித்த இருவர் பலியாகினர்
இந்த விமான விபத்து குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இந்த விமான
விபத்து இயந்திர கோளாறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் M20 வேகசாலையில் மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நபர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருத படும் மூவர் அப்பகுதியில் கைது செய்ய போட்டுள்ளாராம்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இறந்த நபரது குடும்பத்திற்கு தகவல் வழங்க பட்டுளளது
காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்
காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்
2016 ஆம் ஆண்டு இலக்கம் 17 கீழான காணாமற்போனோர் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெறுகிறது.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுரப்பட்ட பின்னர் 2009 ஆண்டுக்குப்பின்னர் காணாமற்போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழுவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தவொரு முறைப்பாடு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைப்பாடுகளை ஆராய்வதற்குத் தீர்மானித்தது.
இதற்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைவாக, நீதி அமைச்சர் அலி சப்ரியின் பங்கேற்பில் வடமாகாணத்தில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும்,; நடமாடும் சேவைகள் மூலம் மக்களைத் தெளிவூட்டுவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக வடமாகாணத்தை தெரிவு செய்து தீர்வு வழங்க முன்வந்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட அவர் காணாமல் போனோர் உட்பட ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு என்ற இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் இன்று 27 ஆரம்பமாகவுள்ளது.
நடமாடும் சேவை நாளை வரை இங்கு நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தனது பிரச்சினைகளை இங்கு முன்வைக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய மகா வித்தியாலத்திலும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
இதில் சட்ட உதவி ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபை, கடன் சபைகள் திணைக்களம், சமுதாய சார் சீர் திருத்த திணைக்களம் ,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயக பணியகம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், மாகாண காணிகள் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு, தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவகங்களின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இந்தியா தமிழக பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த சாம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு அறிவிக்க பட்டதால் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர்
இந்த கட்டட இடி பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்
,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
216,000 சிறார்களை கற்பழித்த பாதிரிமார் – விசாரணைகள் ஆரம்பம்
216,000 சிறார்களை கற்பழித்த பாதிரிமார் – விசாரணைகள் ஆரம்பம்
1950 ஆண்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் சுமார் 216,000 சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதனை அடுத்து பிரான்சு தீவிர விசாரணைகளை ,ஆரம்பித்துள்ளது இவ்வாறு குற்ற சுமத்த பட்ட பாதிரிமார்கள்
மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக
கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்
இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ ,வன்கொடுமை
தாக்குதல் இஸ்ரேலிய அரசாங்கம் புரிந்த போர் குற்றம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
மேற்படி குற்ற சட்டு தொடர்பான கடிதம் ஒன்றையும் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பி
வைத்துள்ளது ,மேற்படி இனப் படுகொலை ,மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க படவுள்ளன எ
இங்கு இஸ்ரேல் புரிந்த குற்றங்கள் ஆதார பூர்வமாக நிருபிக்க பட்டுள்ளதால் ,இஸ்ரேல் அதிபர் இனப்படு கொலை புரிந்த குற்ற சாட்டில் சிறை செல்லும் அபாயம்
உள்ளது
அவருடன் ,பாதுகாப்பபு அமைச்சர்,இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களும் சிறை செல்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் அதிவேகமாக கொரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு தின பந்தய போட்டிகள் இடம்பெற்றுள்ளன
இந்த நிகழ்வில் 175 சாராய போத்தல்களும் வழங்க பட்டு விசேடமாக குறித்த நிகழ்வு நடத்த பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் பெரும் உயிர் கொல்லி கொரனோ விதிகளை பின் பற்றாது இந்த நிகழ்வு
நடத்த பட்டுள்ள நிலையிலும் குறித்த நகர பிதாவும் இதில் கலந்து கொண்டது சர்ச்சையை
கிளப்பியுள்ளது ,
மேற்படி நிகழ்வு தொடர்பான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன





























