வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in உலக செய்திகள்

வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,கிரியாத் ஷ்மோனா, மெதுலா மற்றும் மிஸ்காவ் ஆம் உள்ளிட்ட வடக்கு இஸ்ரேலில்

நகரங்களைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்

உள்ள நகரங்களைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களைத் தொடங்கவிருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பு

டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “நாட்டிற்கும் மக்களுக்கும் எதிரான இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பு

நிறுத்தப்படும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும்” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

ஏப்ரல் 9 முதல் வடக்கு ரயில் பாதை இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும்
Posted in இலங்கை செய்திகள்

ஏப்ரல் 9 முதல் வடக்கு ரயில் பாதை இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும்

ஏப்ரல் 9 முதல் வடக்கு ரயில் பாதை இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும்

ஏப்ரல் 9 முதல் வடக்கு ரயில் பாதை இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் ,தித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு ரயில் பாதையில் ஏப்ரல் 9 முதல்

இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும்

இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையே இரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் வடக்கு மாகாணத்திற்கான ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பு மீண்டும் செயல்படும்.

காலை 5:15 மணிக்கு மவுண்ட் லவினியா இரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புறப்படும் இரயிலுக்கும், பிற்பகல் 1:50 மணிக்கு

காங்கேசன்துறையிலிருந்து மவுண்ட் லவினியா

காங்கேசன்துறையிலிருந்து மவுண்ட் லவினியாவுக்கு இயக்கப்படும் நகரங்களுக்கிடையேயான விரைவு இரயிலுக்கும் இன்று முதல் இருக்கை

முன்பதிவு வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதால், பயணிகளின் பயணம் கணிசமாக எளிதாகும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு

இது ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு இஸ்ரேலிய நகரத்தில் வீடுகள் மீது ராக்கெட் தாக்குதல்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

வடக்கு இஸ்ரேலிய நகரத்தில் வீடுகள் மீது ராக்கெட் தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரத்தில் வீடுகள் மீது ராக்கெட் தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரத்தில் வீடுகள் மீது ராக்கெட் தாக்குதல்: எச்சரிக்கை ஏதும் இல்லை

வடக்கு இஸ்ரேலிய நகரம் ஒன்றில்

வடக்கு இஸ்ரேலிய நகரம் ஒன்றில், எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்காமல் வீடுகள் மீது ராக்கெட் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யாருக்கும் காயம் ஏற்படவில்லை

யாருக்கும் காயம் ஏற்படவில்லை

யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் அந்த எறிபொருள் சொத்து சேதத்தை ஏற்படுத்தியதாக YNet News தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, ஆள் நடமாற்றமில்லாத குடியிருப்புத் தெருவின் மீது புகை மண்டலம் எழுவதைக் காட்டும் ஒரு புகைப்படத்தை சேனல் 12 வெளியிட்டது, இது சேதத்தின் அளவை எடுத்துக்காட்டுகிறது.

வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா

வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா

வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா அரசின் நடவடிக்கை உலக தமிழர்கள் மத்தியில் மீளவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

திட்டமிடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்க பட்டு வருகின்ற இந்த செயல் பாடு என்பது இனவாதத்தில் கட்டி அமைக்க பட்ட ஆட்சி என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக காட்டி கொள்கிறது ,

வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள்

வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள் இலங்கை திரும்ப முடியாது என கோரி போட பட்டுள்ள தடைகள் என்பன இந்த விடயத்தை கோடிட்டு காட்டுகின்றன .

புலிகள் அழிக்க பட்டு போர் இன்றி சத்தம் இன்றி இரதம் சிந்தா மக்கள் வாழ்கின்றார்கள் .

மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை

அவ்வாறன காலத்தில் மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை வாதத்துடன் இலங்கை அரசு நடந்து கொள்வது ,சிங்கள ஆட்சியாளர்கள் மீது தமிழர்கள் நம்பிக்கை அற்று உள்ளதை மீளவும் எடுத்து காட்டியுள்ளது .

இது பவுத்த மேலாதிக்கம் இனவெறி கொள்கையுடன் நடப்பதை இந்த செயல்பாடுகள் எடுத்து காண்பிக்கின்றன .

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்
Posted in உலக செய்திகள்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் ,பாக்தாத்தின் வடக்கே உள்ள அல்-தர்மியா பகுதியில் ஒரு வாகனத்தில் சாலையோர குண்டு வெடித்ததாக ஈராக்கிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஈராக் பாதுகாப்புப் படை

ஈராக் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் இருந்தபோதும் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

தற்போது வரை, உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கிற்கு அமெரிக்கா இராணுவ உபகரணங்களை மாற்றுகிறது
Posted in உலக செய்திகள்

கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கிற்கு அமெரிக்கா இராணுவ உபகரணங்களை மாற்றுகிறது

கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கிற்கு அமெரிக்கா இராணுவ உபகரணங்களை மாற்றுகிறது

கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கிற்கு அமெரிக்கா இராணுவ உபகரணங்களை மாற்றுகிறது.

பாதுகாப்பு வட்டாரங்களின்படி

பாதுகாப்பு வட்டாரங்களின்படி, அமெரிக்கா கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கிற்கு இராணுவ உபகரணங்களை பரவலாக மாற்றியுள்ளது.

ஒரு பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி, அல்-மாலோமா, அமெரிக்கா கத்தாரில் இருந்து வடக்கு ஈராக்கில்

உள்ள ஹரிர் விமான தளத்திற்கு அதிக அளவிலான இராணுவ உபகரணங்களை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இந்த தளம் முன்னோடியில்லாத வகையில் அமெரிக்க விமான நடவடிக்கைகளைக் கண்டது, நாள் முழுவதும் பல விமானங்கள் அதில் தரையிறங்கியதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த நடவடிக்கை நடந்ததைக் குறிப்பிட்ட அந்த வட்டாரங்கள், சமீபத்திய வாரங்களில் ஹரிர்

தளத்தில் அமெரிக்கப் படைகளின் இதேபோன்ற நகர்வுகள் இருந்ததாகவும், இடமாற்றங்களின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினர்.

ஈராக்கிய சட்டமியற்றுபவர்கள் வெளிநாட்டுப் படைகளை, குறிப்பாக அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து

வருவதால், ஈராக்கியப் படைகள் நாட்டிற்குள் நிலைத்தன்மையை பராமரிக்கும் திறன் கொண்டவை என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர்

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக்

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும்,

அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக

தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை

இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை

தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்

நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற

பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய போர் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம்

ரூபா 1,600,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.

எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன் அர்ச்சுனா இராமநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ,வன்னிமைந்தன் அவர்கள் போட்டியிட உள்ளதாக ,மக்கள் வாக்கு அற்று உள்ளுராட்சி சபை தேர்தலில் தோல்வி அடைந்த அர்ச்சனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் ,பல்வேறுப்பட்ட சர்ச்சைப் பேச்சுக்களை பேசி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக விளங்க கூடிய அர்ச்சுனா இராமநாதன் ,வன்னி மைந்தன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, போட்டியிட உள்ளதாகவும் அவர் பாரிய வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என அடித்து விட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன், எப்படி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வர முடியும் என்பதை கூட அறியாத அர்ச்சனா ராமநாதனுடைய ,உருட்டும் பிரட்டும் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாள்தோறும் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக .தான் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்காக. அவதூறுகளையும் சர்ச்சைப் பேச்சுகளையும் பேசி இடம் பிடித்து வருகிறார் .

அவ்வாறான மக்கள் நலனற்ற மக்கள் சேவை மறந்து ,மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ,மக்கள் பணத்தில் வாழ்வை ஓட்டி வருகின்ற அர்ஜுனா இராமநாதன் ,தமிழர் அரசியல் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தும் முதலாவது கதிர்காமராக பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் வெளிநாட்டு வாழ் மக்களிடம் ,பணக் கொள்ளையடிக்க முனையும் அர்ச்சனா, தங்கத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ,என்கின்ற விடயமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இவருமே இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனராம் .

ஆடம்பரமான வாழ்வில் திளைத்திருக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு மக்கள் காசுகளை அனுப்பி வருகின்றனர் .

பாவப்பட்ட மக்கள் வறுமையில் உள்ள மக்கள் பசிபோக்க மறுக்கின்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ,வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு, எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

ஆகமொத்தம் அர்ஜுனாவின் கணிப்பின்படி, வடக்கு முதலமைச்சராக வன்னி மைந்தன் வருகிறார் வருகிறார்.

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்
Posted in உலக செய்திகள்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி படைகள் அகற்றுகின்றன

கிலானின் வடக்கு மாகாணத்தில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) புலனாய்வுப் பிரிவு கலைத்துள்ளது.

மேற்கு மாகாணங்களிலிருந்து நாட்டின் வடக்கே உள்ள கிலானுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல முயன்ற ஆயுதக் கடத்தல்காரர்களின் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி புலனாய்வுப் படைகள் அகற்றின.

நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுதக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளிடமிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் ஏற்றுமதிகள் புலனாய்வுப் படைகளால் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம் ,பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை

மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது.

தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன.

1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்

இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது.

அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன

சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள்

ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது.

ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது

உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு

பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது
Posted in உலக செய்திகள்

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

இடம்பெயர்தல் திட்டங்களுக்கு எதிராக வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

15 மாதங்களுக்கும் மேலான போரினால் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் பேரழிவிற்குள்ளான பிரதேசத்தின் வடக்கே காசான்கள் திரும்பியது பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்ச்சிக்கான “திட்டங்களுக்கு” எதிரான வெற்றியாகும் என்று ஹமாஸ் திங்களன்று கூறியது.

“இடம்பெயர்ந்தோர் திரும்புவது நமது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும், மேலும் ஆக்கிரமிப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான திட்டங்களின் தோல்வி மற்றும் தோல்வியைக் குறிக்கிறது” என்று போராளிக் குழு கூறியது, இஸ்ரேல்

அவர்களின் பாதையைத் தடுப்பதை நிறுத்திய பின்னர் ஆயிரக்கணக்கான காசா மக்கள் வடக்கு நோக்கி ஓடினார்கள். ஹமாஸின் கூட்டாளியான

இஸ்லாமிய ஜிஹாத் இது “எங்கள் மக்களை இடம்பெயர வேண்டும் என்று கனவு காணும் அனைவருக்கும் பதில்” என்று அழைத்தது.

அழிக்கப்பட்ட வடக்கு காசா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அழிக்கப்பட்ட வடக்கு காசா

அழிக்கப்பட்ட வடக்கு காசா

அழிக்கப்பட்ட வடக்கு காசாவில் வரையறுக்கப்பட்ட உதவிகள் வரும்போது இஸ்ரேலிய தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும், குறிப்பாக அதன்

முற்றுகையிடப்பட்ட வடக்கில் தாக்குதல்களில் அதிகமான பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொன்றது.

இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி முழுவதும் பல டஜன் பாலஸ்தீனியர்களைக் கொன்றது, ஏனெனில் அது ஒரு சிறிய அளவிலான

உதவியை என்கிளேவின் வடக்குப் பகுதிக்கு அனுமதித்தது, இது ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரப்படுத்தப்பட்ட முற்றுகைக்குப் பிறகு.

பாலஸ்தீனிய வஃபா செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை மாலை காசா முழுவதும் விடியற்காலையில் இருந்து குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், வடக்கில் 24 பேர் உட்பட.

டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல் ஜசீரா குழுவின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று டுஃபா சுற்றுப்புறத்தில் இடம்பெயர்ந்த மக்களை

அடைக்கலம் கொடுத்த ஃபஹத் அல்-சபா பள்ளியை குறிவைத்து குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டு உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு குழந்தை இறந்தவர்களில் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம் “பயங்கரவாதிகளை” குறிவைத்ததாக கூறி ஒரு பொதுவான நியாயத்தை பயன்படுத்தியது ஆனால் ஆதாரம் அல்லது விவரங்களை வழங்கவில்லை.

காசா நகரத்தின் ஷுஜேயா சுற்றுப்புறத்தில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் துப்பாக்கிச் சூட்டில் ஜீடவுன் சுற்றுப்புறத்தில் குறைந்தது ஒருவரைக் கொன்றது.

இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில்

இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில்

இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில் ,வடக்கு காசாவில் வசிப்பவர்கள் தாயகம் திரும்பவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்காது என்று இஸ்ரேலிய ஒலிபரப்பு ஆணையம் செவ்வாய் மாலை இராணுவ மாநாட்டை மேற்கோள் காட்டி கூறுகிறது.

காசா நகருக்கு வடக்கே “இன்னும் பொதுமக்கள் எஞ்சாததால்” மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீனத்தின் தெற்கே “வழக்கமாக” நுழையும் என்று அறிக்கை கூறியது.

இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தை வடக்கின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கத் திட்டமிட்டுள்ளன, இது இஸ்ரேல் வடக்கு காசாவின் மக்களை

நிரந்தரமாக இடம்பெயரத் திட்டமிட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது.

பெய்ட் லஹியா மற்றும் ஜபாலியா உட்பட வடக்கில் உள்ள நகரங்கள், கடந்த ஒரு மாதமாக இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், இராணுவ தரைப்படை நடவடிக்கைகள் மற்றும் முற்றுகைகளின் மையமாக உள்ளன.

வடக்கில் ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஒருங்கிணைவதைத் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது, அவ்வாறு செய்ய, சில பகுதிகளை

முற்றுகையிட்டுள்ளது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளை முடக்கியுள்ளது.

காசாவின் சிவில் பாதுகாப்புப் பிரிவின்படி, வடக்கில் இஸ்ரேலின் குண்டுவீச்சு கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 1,300 பேரைக் கொன்றது, அதே காலகட்டத்தில் சுமார் 100,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.

95,000 பேர் வரை வடக்கில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கை விட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பாதைக்கு உத்தரவாதம் அளிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஆனால் அல் ஜசீராவுடன் பேசிய பாலஸ்தீனிய

குடியிருப்பாளர்கள், இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரர்களால் சுடப்படும் அபாயம் மற்றும் இஸ்ரேலால் நியமிக்கப்பட்ட “பாதுகாப்பான

மண்டலங்களில்” தாக்கப்படும் அபாயத்தை மேற்கோள் காட்டி வடக்கு காசாவை விட்டு வெளியேற பயப்படுவதாக தெரிவித்தனர்.

அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்..

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன ,ராக்கெட் தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன.


லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் கண்டறியப்பட்டதை அடுத்து வடக்கு இஸ்ரேலின் மேற்கு கலிலி பகுதியில் உள்ள ஷோமேரா மற்றும் ஸாரிட் நகரங்களில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலின் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் தெரிவித்துள்ளது.

லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள மேல் கலிலியில் உள்ள டோவேவ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்ததாக அது கூறியது.

முன்னதாக, “சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு கிழக்கிலிருந்து கடப்பது கண்டறியப்பட்டதை அடுத்து” தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி ,ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம்.

இவ்வாறு ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (03) மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இக் கூட்டணியின் சின்னமாக குத்துவிக்கு இருந்தது.

ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில்

சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய

கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை

விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் 02 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம்.

அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்மறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகிறோம் என தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார்

வடக்கு மாகாண ஆளுநர் ஓடினார் ,பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை துறந்து ஓட்டம் பிடித்துள்ளார் .

இவர் வடக்கு மாகாண ஆளுநராக அங்கம் வகித்த பொழுது ,பல்வேறு பட்ட நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டார் .,

அவ்வாறான ஒருவரே தற்பொழுது புதிய ஆட்சி அதிகாரம் நிலவ பெற்றுள்ள நிலையில் தப்பி ஓடியுள்ளார் எனப்படுகிறது .

இவ்வாறு தப்பி ஓடிய வடக்கு ஆளுநர் தொடர்பான லஞ்ச ஊழல் மோசடிகள் புதிய ஜனாதிபதியினால் விசாரனைக்கு உள்ளாக்க படுமா என்ற விடயமே தற்போது கேள்வியாகியுள்ளது .

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல் ,சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தாம் கொள்கைகளின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், செயற்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லத் தயார் எனவும் தெரிவித்தார்.

“நாங்கள் சவால்களுக்கு பயப்படுவதில்லை. நான் சவால்களை விரும்புகிறேன். அதைத்தான் நான் என் தந்தையிடம் கற்றுக்கொண்டேன். நான் யாரையும் வெறுக்கவில்லை. அதனால், எங்கள் மீது சேறு பூசுவது பயனற்றது,” என்று அவர் கூறினார்.

2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறிய ராஜபக்ச, விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதாகவும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்காது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம், எம்மால் என்ன செய்ய முடியுமோ அதை மாத்திரம் கூறுவோம், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வடமாகாண மக்களை ஏமாற்ற மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா இஸ்ரலினால் ஆக்கிரமிக்க பட்ட ,வடக்கு கிரியட் ஷமான ,மக்கள் குடியேற்ற பகுதிகள் ,மற்றும் அதன் அருகில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய படை நிலைகளை ,இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா அமைப்பினர் ,கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்

நீண்ட தூர ரொக்கட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதில் மக்கள் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் இராணுவ படை நிலைகள் என்பனவற்றுக்கு, பலத்த சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக லெபனான் போர் படைகள் .தெரிவித்துள்ளன .

ஆனால் இஸ்ரேல் படைகள் எத்னையும் தெரிவிக்கவில்லை .

வீடியோ