கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs
Posted in அசானி asani saregamapa songs உலக செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs

கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs

ஈழ குயில் கில்மிசா இவ்வாரம் பாடிய நீதானே நீதானே என்ற பாடல் ,
கோல்டன் விருது பெற்று சாதனை ,கட்டியணைத்து முத்தமிட்ட நடிகை லைலா ,சங்கவி ,கலக்கிய கில்மிசா பாட்டு ,இளைய தளபதி விஜய்க்கு கவிதை பாடி அசத்தல் ,

full video

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
Posted in இலங்கை செய்திகள்

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்

இலங்கை பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ,சார்யன்ட் தரத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டுள்ளார் .

இந்த முத்த சம்பவம் குறித்த அதிகாரிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

ஒரு முத்தத்தினால் அவரது பதவி பிடுங்க பட்டு ,அவர் மீது ஒழுக்காற்று நாவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக, காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

பணியிடை நீக்கம் என்பது நீடிக்குமா ,அல்லது தற்காலிக முடக்கமா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

Posted in சினிமா

முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்

முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்

இரவின் நிழல் பட விழாவில் பார்த்திபன், மைக் வேலை செய்யாத்தால் அதனை தூக்கி எறிந்த சர்ச்சைக்கு முத்தமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
பார்த்திபன்


இரவின் நிழல் பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் வேலை செய்யாத மைக்கை தூக்கி முன்வரிசையில் கோபத்தோடு

எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை கிளப்பின. இதற்கு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்

அவர் கூறும்போது, “மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன். இவ்வளவு அகங்காரம் தேவையா என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. தூக்கிப்போட்டது

மைக், ஆனால் உடைந்தது என்னவோ எனது மனது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை.

பார்த்திபன் பதிவு

கடந்த சில நாட்களாக சரியான உறக்கம் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைப்பது பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பொருட்செலவில் விழா

நடத்தினேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த கேடயம் கீழே விழக்கூடாது என்ற பதற்றம். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தின. பயம், படபடப்பு

எல்லாம் சேர்ந்து உள்ளே பேய் புகுந்த மாதிரி ஆனது. வைரலாக்கும் நோக்கோடு இது நடக்கவில்லை. மேடைக்கு நாகரிகங்கள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமானிடம் மன்னிப்பு

கேட்டு குரல் பதிவு அனுப்பினேன்.
ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

    Posted in சினிமா

    இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

    இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம்.

    இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.
    எஸ்.பி.பி., இளையராஜா


    இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு.

    இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை

    பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.

    பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த

    மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.

    இளையராஜா , எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

    இளையராஜா. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம்.

    அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., அந்த வீடியோவை மீண்டும் போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம்.

    இந்தத் தகவலை அந்த ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா

    அச்சுறுத்தல் காரணமாக நண்பன் எஸ்.பி.பி.,யின் மறைவுக்கு இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாவிட்டாலும்,

    திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது

    பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song
    Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

    பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song

    பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song

    பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song ,பெட்ட புள்ள வாடி முத்தமிட உன்னை தாடி எனும் காதல் உருக்கமான பாடலை வன்னி மைந்தன் எழுதி ஏய் ஐ ஊடாக இசை அமைத்து எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் சொங்ஸ் எனும் டிக் டாக்கில் வெளியீடு செய்துள்ளார் .

    பெட்ட புள்ள உன்னை தனே

    இரட்டைக் கொலை தேடப்படும் சந்தேக நபர் கைது
    இரட்டைக் கொலை தேடப்படும் சந்தேக நபர் கைதுஇரட்டைக் கொலை தேடப்படும் சந்தேக நபர் கைது

    பெட்ட புள்ள உன்னை தனே நான் காதல் செய்கிறேன் என காதலை ஏற்றுக்கொள்ள வா என காதல் வலியை எடுத்து படித்துள்ளார் .

    கேட்கும் பொழுதே இசை அருமையாக உள்ளது ,மக்கள் நீங்களும் இந்த பாடலை கேட்டு பாருங்கள் ஈழத்தின் படைப்பு இந்த பாட்டு அருமையாக

    உள்ளது |Petta Pulla vaadi Muthamida unnai thaadi| vanni mainthanin thamil paadlkal | Petta Pulla vaadi|569|

    love ,lovesongs

    பாடல் பெயர் பெட்ட புள்ள வாடி
    பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
    இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
    பாடியவர் AI கிரியேட் மியூசிக்
    வெளியீடு எதிரி இணைய தளம்
    காப்புரிமை வன்னி மைந்தன்
    ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

    CLICK HERE VIDEO

    பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் மனைவி மரணம்
    Posted in உலக செய்திகள்

    பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் மனைவி மரணம்

    பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் மனைவி மரணம்

    பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் மனைவி மரணம் ,ரிச்சர்ட் பிரான்சன் தனது மனைவி ஜோன் டெம்பிள்மேனின் மரணத்தை அறிவித்தார்

    விர்ஜின் குழும நிறுவனர் சர் ரிச்சர்ட் பிரான்சனின் மனைவி

    விர்ஜின் குழும நிறுவனர் சர் ரிச்சர்ட் பிரான்சனின் மனைவி ஜோன் டெம்பிள்மேன் இறந்துவிட்டார்.

    1989 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியருக்கு சாம் மற்றும் ஹோலி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    மற்றொரு மகள் கிளேர் சாரா 1979 இல் பிறந்தார், ஆனால் நான்கு நாட்கள் மட்டுமே வாழ்ந்தார்.

    செவ்வாய்க்கிழமை மாலை சமூக ஊடகங்களில் தனது மனைவியின் மரணத்தை அறிவித்த சர் ரிச்சர்ட், அவரை தனது “சிறந்த தோழி” மற்றும் “வழிகாட்டும் ஒளி” என்று விவரித்தார்.

    “50 ஆண்டுகளாக என் மனைவியும் கூட்டாளியுமான ஜோன் காலமானார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மனம் உடைந்தார்” என்று 75 வயதான அவர் எழுதினார்.

    குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள்

    “எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எப்போதும் விரும்பியிருக்கக்கூடிய மிக அற்புதமான அம்மா மற்றும் பாட்டி அவர்.

    “அவர் என் சிறந்த தோழி, என் பாறை, என் வழிகாட்டும் ஒளி, என் உலகம்.

    “என்றென்றும் உன்னை நேசிக்கிறேன், ஜோன் x.”

    சர் ரிச்சர்ட் தனது மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் “ஜோனின் இந்த புகைப்படத்தை விரும்புகிறேன்” என்ற தலைப்பில் இடுகையிட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    அந்தப் பழைய புகைப்படம், சர் ரிச்சர்ட் காற்றில் குத்துவதைக் காட்டுகிறது, ஜோன் அவருக்கு அருகில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

    நவம்பர் மாத தொடக்கத்தில், கருப்பு உடை மற்றும் பிளேஸர் அணிந்த ஜோனின் படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

    சர் ரிச்சர்ட் அவள் தலையில் முத்தமிட்டபோது அவள் கேமராவைப் பார்த்து சிரித்தாள்.

    “ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு ஜோன் தேவை,” என்று தலைப்பு கூறியது.

    தனது மனைவியின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் விர்ஜின் வலைத்தளத்திற்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், தொழில்முனைவோர் முன்பு ஜோனை “நான் அவளைப் பார்த்த முதல் தருணத்திலிருந்தே” காதலித்ததாகக் கூறினார்.

    அந்த நேரத்தில் லண்டனின் வெஸ்ட்போர்ன் க்ரோவில் உள்ள ஒரு பிரிக்-எ-ப்ராக் கடையில் அவள் வேலை செய்து கொண்டிருந்தாள்.

    இந்த ஜோடி டேட்டிங் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, பழைய விளம்பரப் பலகை உட்பட, “தொடர்ந்து கடையில் சுற்றித் திரிந்து எண்ணற்ற பொருட்களை வாங்க வேண்டியிருந்தது” என்று சர் ரிச்சர்ட் நினைவு கூர்ந்தார்.

    ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி
    Posted in உலக செய்திகள்

    ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி

    ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி

    ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி ,ரபா கடவை மூடப்பட்டதால் சிகிச்சைக்காக வெளியேற முடியாத புற்றுநோய் நோயாளி
    நுசீராத் அகதிகள் முகாமில் உள்ள மார்பகப் புற்றுநோய் நோயாளியான ரஷா

    போர் நிறுத்தம்

    அபு ஸ்பீக்கா, சிகிச்சைக்காக காசாவை விட்டு வெளியேறக் காத்திருந்தார், ஆனால் காசா பகுதியின் வெளி

    உலகத்துடனான முக்கிய இணைப்பான ரஃபா கடவை, போர் நிறுத்தம் இருந்தபோதிலும் மூடப்பட்டுள்ளது.

    அபு ஸ்பீக்கா தனக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பதாகவும், காசாவில் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

    நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்

    “கடவுளின் கிருபையால் நான் நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்.

    இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் என்னை மோசமாக பாதித்தன,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

    இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் தனது நிலையை மோசமாக்கியதாக உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

    “நான் இரண்டு முறை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கப்பட்டேன். நான் அடிக்கடி சுவாசிக்க சிரமப்படுகிறேன்,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

    “நான் என் மரணப் படுக்கையில் இருப்பதாக நினைத்ததால் ஒவ்வொரு நாளும் என் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிடுவேன்.”

    பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இலைல பெண்
    Posted in இலங்கை செய்திகள்

    பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இல்லா பெண்

    பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இலைல பெண்

    பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இலைல பெண் ,இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை

    தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

    பாக். ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து

    பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் .

    இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக். ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது

    தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர்.

    இந்நிலையில் தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட

    நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

    அனுமதி கிடைத்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி, ஏப்ரல் 18ஆம் திகதியன்று சென்றனர்.

    இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே

    முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர்.

    மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு

    காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி.

    பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து

    இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55

    மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார்.

    அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.

    மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து சனிக்கிழமை (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார்.

    ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு

    காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்

    பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்
    Posted in உலக செய்திகள்

    பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்

    பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்

    பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப் ,விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.

    தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது.

    இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ், சி.பி.எஸ் டி.வி. தொகுப்பாளர் கேல் கிங் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவே, விஞ்ஞானி அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் திங்கட்கிழமை(14)பயணம் செய்தனர்.

    நியூ செபார்ட் விண்கலத்துடன், ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டது. புவியின் வளிமண்டலத்தை கடந்து விண்வெளிக்குள் நுழைந்ததும், விண்கல குழுவினர் புவியீர்ப்பு விசை இன்மை, உடல் எடை குறைவு ஆகியவற்றை உணர்ந்தனர். விண்வெளியிலிருந்து அவர்கள் பூமியை பார்த்து ரசித்தனர்.

    அப்போது பாடகி பெர்ரி, ‘வாட் எ வொண்டர்ஃபுல் வேர்ல்ட்’ என்ற பாடலை பாடினார். அவர் தன்னுடன் டெய்சி மலரை எடுத்துச் சென்றார். மகள் ‘டெய்சி’ யின் நினைவாக அவர் அதை எடுத்துச் சென்றார்.

    சுமார் 11 நிமிடங்கள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, நியூ செபார்ட் விண்கலம் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கியது. அப்போது பாடகி பெர்ரி டெய்சி மலரை முத்தமிட்டபடி விண்கலத்திலிருந்து இறங்கினார். தனது காதலி லாரன் சான்செஸ் விண்கலத்தை விட்டு வெளியேறும் போது அவரை ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.

    இதற்கு முன் கடந்த 1963 ஆம் ஆண்டு ரஷ்ய விண்வெளிப் பெண் வேலன்டினா டெரஸ்கோவா, விண்கலத்தின் தனியாக 3 நாள் விண்வெளியில் சுற்றிவிட்டு பூமி திரும்பினார். அதன்பின் தற்போதுதான் முழுவதும் பெண்களுடன் நியூ செபார்ட் விண்கலம் விண்வெளிப் பயணத்தை முடித்து பூமி திரும்பியுள்ளது.

    விண்வெளி சுற்றுலா செல்ல விண்கலத்தில் ஒரு இருக்கைக்கான கட்டணம் எவ்வளவு என்பதை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் திருப்பி செலுத்தக்கூடிய டெபாசிட்டாக, 1,50,000 டாலர் செலுத்த வேண்டும் என அதன் இணையளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு, விண்வெளி பயணத்துக்கான ‘நியூ செபார்ட்’ விண்கல கட்டணம் அதிகபட்சம் 28 மில்லியன் டாலரை வரை ஏலம் போனதாக ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவித்தது

    என்னை அழைக்காயா
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    என்னை அழைக்காயா

    என்னை அழைக்காயா

    கன்னத்தில் கை வைத்து
    காதோரம் நிற்பவளே
    கண்ணாடி சீண்டுதடி
    காதலதை தூண்டுதடி

    முன்னாடி உனை பார்க்க
    முத்தமிட தூண்டுதடி
    மூவேளை உனை தானே
    முழு நாளும் நினைக்குதடி

    கன்னக் குழி சிரிப்பழகில்
    கதை சொல்லி நிற்பவளே
    எண்ணத்தை தூண்டிடவே
    எடுத்து கதை சொல்லிடடி

    உன்னோடு நான் வாழும்
    உயர்வான நாளதனை
    என்று நீ சொல்வாயோ
    ஏக்கத்தில் தவிக்கின்றேன்

    வாலாட்டும் நாய்போல
    வாசலில நான் நிற்க
    வாய் பேசா நிற்கிறியே
    வாவென்று அழைக்காயோ ..?

    ஆக்கம் 14-07-2024
    வன்னி மைந்தன் ( ஜெகன் )

    கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

    மேஜர் திலகா வான்மதி
    Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

    மேஜர் திலகா / வான்மதி

    மேஜர் திலகா /வான்மதி

    மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
    வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
    சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

    நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

    சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை

    முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.

    நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

    அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.

    திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.

    முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1

    சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி

    987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

    யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.

    இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.

    சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.

    குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.

    1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.

    பெண் போராளிகள்

    உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

    ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.

    அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.

    1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.

    கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.

    ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

    நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.

    தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை

    1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.

    ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.

    கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.

    பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.

    ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.

    பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.

    மனதளவில் அன்பாகப் பழகுவார்

    ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.

    களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.

    1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

    அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.

    மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.

    (ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)

    யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.

    சளைக்காத திலகா அக்கா

    எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.

    ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.

    எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.

    வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்

    வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.

    சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.

    1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது

    கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.

    கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி

    கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.

    நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.

    தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.

    இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.

    ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா

    ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.

    ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.

    விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.

    போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.

    “எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.

    1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.

    திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.

    பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.

    திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்

    திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

    வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

    அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.

    ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

    அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.

    அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.

    ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.

    இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.

    அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.

    காப்பரணுக்கு துணையாக தாக்குதல்

    ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.

    எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.

    திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.

    நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்

    அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.

    தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.

    ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.

    “போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.

    திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.

    நெஞ்சிலும குண்டு

    உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.

    எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.

    தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.

    -நிலா தமிழ்.

    (இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)

    வந்து விடு
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    வந்து விடு

    வந்து விடு

    நித்தம் உனக்கு முத்தமிட்டு
    நீண்டுறங்க ஆசை
    நீ எனக்கு உரித்தானால்
    நித்தமிட ஆசை

    பத்து திங்கள் ஆக்கி வைத்து
    பார்த்துவிட ஆசை
    பார் காணும் இரவெல்லாம்
    பகலாக்க ஆசை

    நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
    நித்தம் என்ன செய்வேன்
    காத்திருப்பு போது மடி
    கண் மணியே வாடி

    போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
    போரெல்லாம் தோற்குமடி
    வேர்வைக்குள்ள நீ குளிக்க
    வேண்டுதலும் தீருமடி ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 12-11-2023

    இளைஞரில்லா இலங்கை
    Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

    இளைஞரில்லா இலங்கை

    இளைஞரில்லா இலங்கை

    யுத்தமொன்று வந்ததனால்
    மொத்த உறவும் பறந்தன.
    முத்தமிட்ட அன்னை மண்ணைச்
    சத்த மின்றிப் பிரிந்தன.

    சொத்துப்பத்து ஈட்டவென்றும்
    சொந்த நாட்டைத் துறந்தனர்.
    நித்திரையை மறந்தங்கே
    நித்தம் உழைப்பில் இறந்தனர்.

    புத்திஜீவி கல்விமான்கள்
    பிற நாடுதேடி ஓடினம்.
    பத்தியெரியும் வயிற்றுடனே
    பலர் குத்தியிங்கு முறியினம்.

    கலைஞர் இளைஞர் கன்னிகளும்
    கனடாக் கனவில் மிதக்கினம்.
    அலைகள்போல அள்ளுப்பட்டு
    அங்கே போக நினைக்கினம்.

    இக்கரைக்கு அக்கரையென்று
    இருந்ததெல்லாம் பறக்குதாம்.
    சக்கரையில்லாப் பொங்கல்போல
    சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

    செத்த வீட்டில் பங்குகொள்ளச்
    சொந்தங்களும் இருக்காது.
    சுத்தியுள்ள சாமி தூக்கப்
    பக்தர்களும் கிடைக்காது.

    பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
    பிள்ளை ஒன்றும் இருக்காது.
    புத்தருக்கு விகாரைகட்ட – இனி
    இங்கு போராட்டமும் நடக்காது.

    -பிறேமா(எழில்)-

    திருமணம் செய்வோம் வா
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    திருமணம் செய்வோம் வா

    திருமணம் செய்வோம் வா

    பக்கம் பக்கமாக கவிதை எழுதி
    படித்து காட்ட வந்தாலும்
    வெட்க பட்டு ஓடுறியே
    வெருளியாக மாறிரியே

    அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
    அத்தனை பல்லும் அழகாச்சு
    முத்தமிட முன் மொழியும் – உன்
    உதடு இரண்டும் தெளிவாச்சு

    சத்தமிடா நீ இருந்தா
    சாந்தமாக ஆகிடுவேன்
    உத்தரவு நீ கொடுத்தா
    உன்னை நான் ஏற்றிடுவேன்

    இத்தனை நாள் தவமிருந்தேன்
    இந்த ஒரு நாளுக்காய்
    இன்றேனும் ஏற்று விட்டாய்
    இணைவோம் வா இல்லறத்தில் .

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 05-11-2022

    https://www.youtube.com/watch?v=DTjw9V_C490
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை தா எனக்கு

    உன்னை தா எனக்கு

    உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
    உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
    வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
    வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு

    நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
    நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
    இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
    இதயமதை ஓடி வந்து தந்துவிடு

    நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
    நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
    மூச்சிழக்க பேசும் உன் உதடு
    முத்தமிட நீ எனக்கு தந்துவிடு

    உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
    உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
    உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
    உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 27-07-2022

      ஒரு முறை உன்னை தா
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஒரு முறை உன்னை தா …!

      ஒரு முறை உன்னை தா …!

      வீடு வந்து என்னை தேடும்
      வெண்ணிலா நீ தானோ
      உன்னை தேடி நான் ஏங்கும்
      உயிர் காதல் இது தானோ

      மாலை ஒரு வேளை
      மயக்கும் அதி காலை
      நீ வந்தால் போதும்
      நிகழ்ச்சிகள் தொடரும்

      விடியாத இரவுக்குள்
      மடியாத போர்வைக்குள்
      உன்னோடு வாழும் வாழ்தால் தானே
      உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே

      வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
      விட்டு உயிர் போகும்
      கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
      பட்டுடல் போகும் பாதியில் பாரும்

      நிலையில்லா வாழ்வுக்குள்
      நித்தம் போராட்டம்
      நினைவழியா கனவுக்குள்
      நீயே என் தேரோட்டம்

      ஓடும் நதியாய் தேடி வரவா
      ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
      நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
      நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 30-12-2021

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இவளை எனக்கு தா

      இவளை எனக்கு தா

      உருண்டு வரும் நீரலைகள்
      உன் உடலில் மோதி விழ
      என் உடலோ நடுங்குதடி
      ஏக்கத்தில தவிக்குதடி

      கட்டியணைத்து பேரலைகள்
      கண்ட படி முத்தமிட
      விட்டு உடல் இருப்பவளே
      விடை கூறு என் செய்வேன்

      அங்கமதை தொட்டு விழி
      ஆடை உருவி பார்க்குதடி
      வேர்க்காத என் உதடும்
      வேர்த்து இன்று கொட்டுதடி

      வான் நிலவு அருவியில
      வளைந்து நீராட
      நாள் எழுதி கொடுத்தவரே
      நான் உனக்கு மாலையிட

      தேதி ஒன்று தருவீரா – என்
      சேதி சொல்லி போவீரா
      புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
      பூவை எனக்கு தருவீரா ..?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 22-10-2021

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நான் வாழ உயிர் கொடு

        நான் வாழ உயிர் கொடு

        இடையாலே எந்தன் இதயத்தை
        இடித்தேண்டி போகிறாய்
        முலை காட்டி எந்தன் ஆசைக்கு
        மூட்டி தீ ஏன் வைக்கிறாய்

        கூந்தலில் காய்கின்ற மல்லிகையாய்
        கூடியே நானும் உலர்ந்திடவா –?
        அத்தனை ஆனந்தம் உனக்கென்றால்
        அடியே நானும் காய்ந்திடவா ..?

        ஊருக்கு ஊரடங்கு போட்டு வைத்து
        உள்ளத்துள் புகுந்து விடு
        யாருக்கும் தெரியாமல் நாமினைந்து
        யாகம் நடத்திடுவோம் வந்து விடு

        கரை தேடும் அலையாக ஓடி வந்து – எந்தன்
        காதல் கால்தடம் நனைத்து விடு
        பூமழை பொழியும் மார்கழியாய் – உந்தன்
        புன்னகை வந்து கொட்டி விடு

        கட்டுடைத்து பாயும் வெள்ளம் போல – என்
        கன்னத்தில் வந்து முத்தமிடு
        நீயிட்ட முத்தத்தை நான் குடித்து – இந்த
        நிகழ் காலம் வாழ உயிர் கொடு ..!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 20-09-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்
        http://ethirinews.com/

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இப்போ என்ன சொல்வாய்

          இப்போ என்ன சொல்வாய்

          உன் சிரிப்பை நான் கேட்டால்
          உனக்கென்ன கோபமோ ..?
          என் சிரிப்பை நான் தந்தால்
          ஏன் எடுக்க வெட்கமோ …?

          வங்கி என்றால் கடன் கொடு
          வட்டி முதல் தந்திடுவேன்
          வாங்கியதை தந்து விட்டால்
          வழி வெட்டி என்னை விட்டு விடு

          முத்தமிடும் மழைத்துளியை
          முற்றம் ஏற்க மறுப்பதில்லை
          பின்னிரவில் மனிதரெல்லாம்
          பிள்ளை பெற்றும் உறைவதில்லை

          இப்போ என்ன சொல்வாய்
          இப்போ என்ன சொல்வாய்

          அந்தி மட்டும் உறங்காவிடின்
          அணைத்து பால் கதறுமடி
          படைத்தவனை நினைத்து பார்
          பகலிரவின் முழுமையடி

          முழு நூல்கள் படித்து விட்டால்
          முத்தி இன்று பெற்றிடுவாய்
          இத் திரையில் நீ இருப்பாய்
          இன்றே கடவுளாவாய் …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 14-08-2021
          http://ethirinews.com/

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

            ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

            சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

            சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

            இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின்

            சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும்

            சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்

            பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

            இதனை தொடர்ந்து சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட்

            ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

            இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.