Search Results for: பிரித்தானிய
சீன இணையதளத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்களின் மருத்துவத் தரவுகள் விற்பனை
சீன இணையதளத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்களின் மருத்துவத் தரவுகள் விற்பனை
சீன இணையதளத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்களின் மருத்துவத் தரவுகள் விற்பனை க்கு பட்டியலிடப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சுகாதாரத் தகவல்
பிரிட்டனின் சுகாதாரத் தகவல் தரவுத்தளமான பயோபேங்கில் (Biobank) உள்ள அரை மில்லியன் தன்னார்வலர்களின்
மருத்துவத் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப அமைச்சர் இயன் முர்ரே வியாழக்கிழமை அன்று காமன்ஸ் அவையில் பேசுகையில், “சீனாவில் உள்ள அலிபாபாவின் மின்வணிகத்
தளங்களில் பல விற்பனையாளர்களால் இந்தத் தரவுகள் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன” என்று அந்தத் தொண்டு நிறுவனம் அரசிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
அந்தத் தரவுகளில் பங்கேற்பாளர்கள், பெயர்கள், முகவரிகள்
மேலும், “அந்தத் தரவுகளில் பங்கேற்பாளர்கள், பெயர்கள், முகவரிகள், தொடர்பு விவரங்கள் அல்லது தொலைபேசி எண்கள் எதுவும் இல்லை” என்று அந்தத் தொண்டு நிறுவனம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயோபேங்க் என்பது உயிரியல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைத் தகவல்களின் உலகின் மிக விரிவான தரவுத்தொகுப்பாகும்.
இது டிமென்ஷியா, புற்றுநோய்கள் மற்றும் பார்கின்சன் நோய்களைக் கண்டறிவதிலும் சிகிச்சையளிப்பதிலும் முன்னேற்றங்களை அடையப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திரு. முர்ரே கூறினார்: “அரசு இன்று விற்பனையாளரிடம் பேசியுள்ளது, மேலும் அந்த மூன்று பட்டியல்களும் நீக்கப்படுவதற்கு முன்பு, அவற்றிலிருந்து எந்தப் பரிவர்த்தனைகளும் நடந்ததாக அவர்கள் நம்பவில்லை.”
இருப்பினும், அந்தத் தரவுகளிலிருந்து யாரையும் அடையாளம் காண முடியாது என்பதற்கு 100% உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பாலினம், வயது, பிறந்த மாதம் மற்றும் வருடம், சமூக-பொருளாதார நிலை, வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் மற்றும் உயிரியல் மாதிரிகளிலிருந்து
பெறப்பட்ட அளவீடுகள் உள்ளிட்ட தரவுத் தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
“இதிலிருந்து ஒருவரை அடையாளம் காண முடியாது என்று நான் 100% உறுதியளிப்பது தவறாகும், மேலும் யுகே பயோபேங்கால் 100% உறுதியளிக்க
முடியாது, ஆனால் அந்தத் தரவைப் பயன்படுத்துவதற்கு அது மிகவும் மேம்பட்ட ஒரு வழியாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
“அனைத்துத் தரவுகளும் அடையாளம் நீக்கப்பட்டவை; அவற்றில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டும் எந்தத் தகவலும் (பெயர்கள், முகவரிகள்,
பிறந்த தேதிகள் மற்றும் என்எச்எஸ் எண்கள் போன்றவை) இல்லை” என்று பயோபேங்க் கூறியது.
சீனாவில் உள்ள மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களால் இந்தத் தகவல்கள் சட்டப்பூர்வமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்று திரு. முர்ரே கூறினார்.
அதன்பிறகு, அவர்களுக்கான அணுகல் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த மீறல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையை வெளிப்படுத்த ஏன் ஒரு வாரம் ஆனது என்று கேட்டதற்கு, பயோபேங்க் ஸ்கை நியூஸிடம், “எச்சரிக்கப்பட்டவுடன் நாங்கள் உடனடியாக ஒரு விசாரணையைத் தொடங்கினோம்.
இது ஒரு சிக்கலான மற்றும் மாறிவரும் சூழ்நிலை, ஒரு துல்லியமான தகவலைப் பகிரும் நிலையில் நாங்கள் இருந்தவுடன் அதைச் செய்துள்ளோம்” என்று பதிலளித்தது.
யுகே பயோபேங்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் முதன்மை ஆய்வாளருமான பேராசிரியர் சர் ரோரி காலின்ஸ், பங்கேற்பாளர் தரவுகளின்
பாதுகாப்பைத் தங்கள் நிறுவனம் “மிகவும் தீவிரமாக” எடுத்துக்கொள்வதாகவும், பாதுகாப்பைக் கடுமையாக்கியுள்ளதாகவும் கூறினார்.
“கடந்த வாரம், மூன்று கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட, அடையாளம் நீக்கப்பட்ட பங்கேற்பாளர் தரவுகள்,
அலிபாபாவுக்குச் சொந்தமான சீனாவின் நுகர்வோர் இணையதளம் ஒன்றில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் கூறினார்.
“இங்கிலாந்து மற்றும் சீன அரசாங்கங்களின் ஆதரவுடன், எந்தவொரு விற்பனையும் நடைபெறுவதற்கு முன்பே அலிபாபா அந்தப் பட்டியல்களை உடனடியாக நீக்கியது.
“இது இந்தக் கல்வி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் தெளிவான மீறலாகும். மேலும், அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கும் இணையதள அணுகல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .
நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக
10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .
இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்
உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது
இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை ,இஸ்ரேல் – காஸா போர்நிறுத்தம் தொடர்பாக பிரிட்டன் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பா்
பலஸ்தீனத்துக்கு தனி நாடு
மாதம் பலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து செய்தியாளா்களிடம் பிரித்தானிய பிரதமா் கெய்ர் ஸ்டாா்மா் கூறியதாவது:
காஸாவில் நிலவும் கொடுமையான நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடி போா் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்தாகவேண்டும்.
அவ்வாறு செய்ய அந்த நாடு தவறினால், செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. கூட்டத்தில் பலஸ்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரிக்கும்.
எங்கள் நோக்கம் ‘பாதுகாப்பான மற்றும் நிலையான’ இஸ்ரேல் மற்றும் ‘செயல்படக்கூடிய மற்றும் சுதந்திரமான’ பலஸ்தீன அரசு ஆகிய இரண்டையுமே உருவாக்குவதாகும்.
தொழிலாளா் கட்சியின் நீண்டகால கொள்கை
இது எங்கள் தொழிலாளா் கட்சியின் நீண்டகால கொள்கையாக உள்ளது. மேலும், பலஸ்தீன விவகாரத்தில் பிரித்தானிய அரசு அண்மைக்காலமாக வகுத்துவரும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியும் இதுவே ஆகும்.
தற்போதைய நிலையில் எங்களின் முதன்மை நோக்கம் காஸாவில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதும், அந்தப் பகுதியில் உணவுப் பொருட்களை தாராளமாக விநியோகிப்பதன் மூலம் தற்போதைய நிலையை மாற்றுவதுமே
ஆகும். அதனால்தான் பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அறிவிப்பு இஸ்ரேலுக்கான நிபந்தனைகளுடன் வெளியிடப்படுகிறது என்றாா்.
தற்போது 140 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான்
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக முதல்முறையாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நிலையில் இந்திய விமானம் வெடித்துச் சிதறியதில் மூன்று பிரித்தானியர்கள் பலி ஆகியுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகீல் நனபாவா, அவரது மனைவி ஹன்னா, மற்றும் அவர்களது நான்கு வயது மகள் ஸாரா ஆகியோர் விமானத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று
Gloucester Muslim Community அவர்கள் Facebook-இல் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 1.38 மணிக்கு அகமதாபாதிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது. இதில் மொத்தம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 169 பயணிகள், பிரித்தானியாவைச் சேர்ந்த 53 பயணிகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும், 1 கனடா பயணி ஆகியோர் இருந்ததாக ஏர்லைன் தெரிவித்துள்ளது.
Flightradar எனும் விமான தடதள விளக்கதளத்தின் படி, விமானம் புறப்பட்ட பிறகு ஒரு நிமிடத்துக்குள் அதன் சிக்னல் காணாமல் போனது.
அதன் பின்னர் விமானம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில் விழுந்துவிட்டது.
இது தொடர்பில், லண்டன் கேட்விக் விமான நிலையம் கூறியதாவது,
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு பிரிட்டன் நேரப்படி தரையிறங்க வேண்டியது.
பிரிட்டன் வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணிபுரிந்து உண்மைகளை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது” என்று தெரிவித்தது.
முதலில், அகமதாபாத் காவல் ஆணையர் ஒருவர் உயிரிழந்தவர்களில் யாரும் உயிர்தப்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறைந்தது 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து, Boeing 787 Dreamliner என்ற விமான வகையில் இதுவரை நிகழ்ந்த முதல் விபத்து என Aviation Safety Network தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான வகையானது, இரண்டு என்ஜின் கொண்ட விசாலமான பயணிகள் விமானமாகும். 14 வருடங்களாக இந்த Dreamliner மாடல் ஐந்து மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Twitter) தளத்தில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்:
“அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத துக்கமான நிகழ்வாகும். இந்த சோகமான தருணத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கின்றனர்.”
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள் இங்கிலாந்தில் பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகளை மிகவும் கடுமையாக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார்.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு ,-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி-
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத்
ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.
2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த
குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும்
தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.
ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சிலவாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO)
சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.
அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால்
பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய
பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற
உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.
கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து,
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை
செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ
ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது ஆட்சியமைந்துள்ள பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆயினும் இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த
போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது. அத்துடன் ITJP, Redress, Sri Lanka Campaign,
Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் கடும் உழைப்பின் விளைவாக, இன்று பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானாய வாழ் இளையோரின் இடைவிடாத
போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும். இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டந்தில் இது ஒரு ஆரம்பபடியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார்
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார்
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,
“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து பொலிஸார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
“ஆனால், உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்” என்றார்.
இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்கப் போவதாக தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு ,; ஈழ ஆதரவு குழுவின் மேல்முறையீடு தோல்வி
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி TGTE (தமிழீழ இடைக்கால அரசாங்கம்) விடுத்த வேண்டுகோளை UK தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
ஆறுமுகம் மற்றும் பலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேல்முறையீட்டில் ஆணையம் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது.
அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில் இது தடைசெய்யப்படவில்லை என்று TGTE வாதிட்டது.
சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் (“GoSL”) TGTE இன் வழிமுறைகள், ஆளும் குறிப்புகள் பற்றி வேறுபட்ட பார்வையை எடுத்தது.
மார்ச் 29, 2001 அன்று, UK இராஜாங்கச் செயலர் எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதச் சட்டம் 2000 (தடைசெய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன்
அட்டவணை 2 இல் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 7, 2018 அன்று, பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை 2 ல் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட வேண்டும் என்று TGTE உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.
கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான UK
மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் மார்ச் 8, 2019 அன்று விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அக்டோபர் 21, 2020 அன்று, மேல்முறையீட்டு ஆணையம் மேல்முறையீட்டாளர்களின் மேல்முறையீட்டை அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, மே 13, 2021 தேதியிட்ட உத்தரவின்படி, TGTE ஆனது ஜூன் 3,
2021க்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் மாநிலச் செயலர் தனது
தடையை நீக்குவதற்கான முடிவு
விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31, 2021க்குப் பிறகு இல்லை.
நிவாரணம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை யைத் தக்கவைக்க மாநிலச் செயலாளர் ஒரு புதிய
முடிவை எடுத்தார், மேலும் முடிவு ஆகஸ்ட் 31, 2021 அன்று TGTE க்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற நிகழ்வுகளை அடுத்து இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Featured
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்கள், “ரம்போ” வகையைச் சேர்ந்த கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதாக இருந்தால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டரீதியான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த வெளிநாட்டு பிரஜை எவ்விதமான அனுமதியையும் பெறாமல் கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று (22) பிற்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பயணப் பொதியை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜை விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பயணியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். குறித்த கைத்துப்பாக்கியை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.
இன்று (13) காலை பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.
லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.
உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான
போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நன்றி ஈழம் ரஞ்சன்
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரித்தானியாவுக்கு
அரசமுறை உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் .
அவரது இந்த பயணத்தில் ,நாட்டுக்கு வழங்க படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
,இலங்கை ,உலக நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இதனால் ,இலங்கை வரும் நான்கு வருடங்களில் சோமாலியாவாக,
மாற்றம் பெறும் நிலை காணப்படுகிறது .
பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
பிரித்தானிய தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய குற்றச்சாட்டில் வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்பு பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
இவ்வாறான போராட்டங்கள் ,
ஆளும் பிரதமர் சுனெக் ஆட்சிக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பிரித்தானிய அழகுராணி கார் விபத்தில் பலத்த காயம்
பிரித்தானிய அழகுராணி கார் விபத்தில் பலத்த காயம்
பிரித்தானிய உலக அழகு ராணி இந்த வார தொடக்கத்தில்,
பிரிட்ஜெண்ட் அருகே நடந்த விபத்தில் , சிக்கினார் .
இந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு,
மற்றும் கழுத்தில் இரண்டு உடைந்த நிலையில்
பாதிக்கப்பட்டார்.
21 வயதான உலக அழகி ,
கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக ,
மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
உலக அழகி விபத்தில் சிக்கி காயமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் ,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும்
அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் ஆகியோர் 2023 ஜனவரி 17, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர்.
ஐக்கிய இராச்சிய – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டில் இந்த ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாடு இடம்பெற்றது.
வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, நாட்டின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான அரசாங்கத்தின் திட்டங்கள்
குறித்து ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கமளித்தார்.
நிரந்தர துணைச் செயலாளர் பார்டன், இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்ததோடு, இது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு இலங்கை அளிக்கும் முன்னுரிமையின் அடிப்படையில், ஐக்கிய இராச்சிய சந்தைக்கான வரியில்லாத அணுகலை வழங்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின்
வர்த்தகத் திட்டத்தின் கீழ், இலங்கையின் சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் குடியேற்றத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இலங்கையின் பொருளாதாரப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிவிவகார செயலாளர்
எடுத்துரைத்தார். காலநிலை மாற்ற நோக்கங்களுக்கான எதிர்வினை உட்பட வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான
சாத்தியக்கூறுகள் மற்றும் 2030ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடையும் இலங்கையின் இலக்கை அடைந்து கொள்வதில் இரு தரப்பினரும் பாராட்டினர்.
தற்போதுள்ள பன்முக ஈடுபாட்டை உயர்த்துதல் மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல துறைகளில் முடிவு சார்ந்த அணுகுமுறையின் மூலம் உறுதியான முடிவுகளை அடைதல் ஆகியவற்றை நோக்கமாகக்
கொண்ட, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை – ஐக்கிய இராச்சிய உரையாடலைத் தொடங்குவதற்கு இரு தரப்பும் பரஸ்பர ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தியது.
வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன மற்றும் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் ஆகியோர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைப்
பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் துடிப்பான மக்கள் உறவுகளைப் பாராட்டினர். பரஸ்பர நலனுக்காக அவர்களது கூட்டுறவை சிறப்பாகப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டிலுள்ள இலங்கை
சமூகத்துடன் மேலும் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து நிரந்தர துணைச் செயலாளருக்கு வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன விளக்கமளித்தார். நீண்ட கால உறவுகளை முன்னோக்கி, முடிவுகளை
நோக்குவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சிய – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூருவதற்கு இதன்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், இந்து சமுத்திர ஈடுபாட்டில் இலங்கையின் கொள்கை முன்னுரிமைகள் மற்றும்
இந்த ஆண்டு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டமை ஆகியன குறித்து வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கினார்.
இந்த விஜயத்தின் போது, நிரந்தர துணைச் செயலாளர் சேர் பார்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல
ரத்நாயக்க ஆகியோரை சந்தித்தார். சேர் பிலிப் பார்டனுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்
மற்றும் ஐக்கிய இராச்சிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க
மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27,
விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர்
ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழீழத்தேசிய செயற்பாட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவரும் பிரித்தானிய தமிழீழ
ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளராகவும் இருக்கும் திரு.சின்னவன் சிவலிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்
பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாற்பரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழ தேசியக் கொடியினை ராமச்சந்திரன் விஜயகுமார் எனும் இயற் பெயர் கொண்ட 1992 ஆம் ஆண்டு தாயக விடுதலை போரில் தன்னை இணைத்து
மணலாறு மாவட்ட தளபதியாகவும், காவல் துறை ஆணையக பொறுப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்துணைப்படை பொறுப்பாளராகவும் பல பொறுப்புகளை வகித்து இறுதி வரைகளத்தில் நின்ற திரு.தமிழவன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றும் நேரத்திற்க்காக காத்திருங்கள்.









































