Posted in இலங்கை செய்திகள்

13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

    நேரில் வந்து விடு
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    நேரில் வந்து விடு

    நேரில் வந்து விடு

    நித்திரையில் நான் விழிக்க
    சித்திரையை தேடுகிறேன்
    முத்திரையை பதித்த கவி
    முகத்திரையை பார்க்கிறேன்

    சத்தம் இல்லா தூங்கிவிட
    சத்தியமா முடியவில்லை
    செத்த பிணம் ஆகிவிட்டேன்
    சேதி சொல்ல யாரும் இல்லை

    இத் தளத்தில் வந்த கவி
    இதயமதை துளைத்ததுவே
    இத் துயரை தந்த கவி
    இதயமதை ஏற்றிடுமோ

    பொற் கவியை நான் படிக்க
    போதும் நேரம் வந்திடுமோ
    நித்திரையில் நான் விழிக்க
    நிஜம் வந்து கூடிடுமோ

    சத்தியமாய் சொல்லி விடு
    சாதனைகள் செய்திடுவேன்
    செத்துவிட முன்னே நான்
    சொர்க்கமதை கண்டிடுவேன் .

    ஆக்கம் -15-05-2025
    வன்னி மைந்தன்

    ( பதில் கவி }

    செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
    Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

    செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

    செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

    பதினெட்டாம் நாளில்
    படாத பெரும்பாடுபட்டு
    பிணம் தொட்டு அளைஞ்ச
    பெரும்துயரைச் சுமந்துசென்று

    பனங்கொட்டு நிறமுடைய
    படையினர் ஆட்சிக்குள்ள
    உயிர்விட்ட உடல்பிணமாய்
    உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.

    கொட்டி கொட்டியாவென ஆமி
    கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
    முட்டமுட்ட அடைஞ்சு
    மூச்சுவிடேலாம அவிஞ்சு

    செட்டையுரிச்ச கோழிபோல
    செட்டிகுளம் போனகதை
    ஐயோ!

    செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

    செத்திருந்தாலும் பரவாயில்ல.
    ஏனம் அரக்கி அரக்கி
    எலும்பு நாரிமுறிய
    சாமம்வரை காத்திருந்து

    சருவத்தில தண்ணியெடுத்து
    ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
    ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
    பாவப்பட்ட எம் நிலையை
    பாவில் வடிக்கேலுமோ?

    காலைக் கடன்முடிக்க
    காப்போத்தில் தண்ணியோட
    மாலைவரை அடக்கி அடுத்த
    மத்தியானம் போய்க்குந்த

    ஆளைக் கண்டவுடன்
    அரைகுறையா எழும்பி நாம்
    அவஸ்தைப்பட்ட நிலையை
    ஆரிடம் போய்ச்சொல்ல..

    கியூவில உறவுகள் வந்து
    கிட்டவரேலாமல் எட்டிநின்று
    சூவிலுள்ள புலிபோல
    சூம்பண்ணி எமைப் பாத்து

    மாவில்செய்த பலகாரத்தை
    மாத்தையாவிடம் அனுப்பியதை
    சாவிலும் மறக்கேலுமோ?
    சரித்திரம் நிறைய உண்டு.

    வனாந்தர காட்டுக்குள்ள
    வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
    பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
    பதினைந்து பேர் கிடந்து

    சினந்து, சிரங்குவந்து
    சீழ்வடிந்து சீரழிஞ்சு
    இணைந்து வாழ்ந்ததை
    இன்றைய சந்ததி அறியுமோ?

    கொன்னைத் தமிழ் கதைப்போர்
    கூர்ந்து எமைப்பார்க்க
    இன்னஇவர் இயக்கமெண்டு
    எங்கடையள் காட்டிக்கொடுக்க

    உண்ணஏதும் தருவினமோவென்று
    ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
    என்னயிது வாழ்க்கையென்று
    ஏதிலியாய் எத்தனை நாட்கள்.

    வெய்யிலில் வாடிவதங்க
    விழுப்புண் புழுப்பிடிக்க
    கையினில் எதுவுமின்றி
    காண்பவரைக் கடன்கேட்க

    செய்ய ஏதும் வழியின்றி
    செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
    சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
    சீவியத்திலும் இது மறையாது❗

    -பிறேமா(எழில்)-19-05-2024

    Posted in உலக செய்திகள்

    8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்

    8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்

    ராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார்.

    மயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்


    இறந்தவர் உடலை தகனம் செய்ய விறகுகளை தயார் செய்யும் ஜோதி.

    ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்

    உள்ளனர். கணவர் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் மின்மயானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிணங்களை

    எரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் குடும்பத்தை காப்பாற்ற வழிதெரியாமல் திகைத்து கொண்டிருந்த ஜோதி தனது குழந்தைகளை படிக்க வைக்க

    வேண்டும் என்பதற்காக மயான தொழிலை செய்ய துணிந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில்

    பிணங்களை தகனம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.

    இதுகுறித்து ஜோதி கூறியதாவது:-

    எனது கணவர் இங்கு வேலை பார்த்தபோது அவருக்கு சாப்பாடு கொடுக்க வருவேன்.

    அப்போது அவர் மயான வேலையை கற்றுக்கொடுத்தார். நான் இந்த தொழிலை செய்ய தொடங்கியதும் ஆரம்பத்தில் எங்கள்

    குடும்பத்தினர், உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் யாரிடமும் கை ஏந்தாமல் சொந்த காலில் நிற்பதை கண்டு ஏற்றுக்கொண்டனர்.

    இரவு, பகல் பாராமல் இதுவரை சுமார் 8 ஆயிரம் உடல்கள் வரை எரித்துள்ளேன்.

    இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விபத்து, தற்கொலை, அனாதை பிணம் போன்றவைதான். எனது இந்த வாழ்வில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர் உடலை எரிக்க ஆரம்பித்து விடிய விடிய

    எரியவில்லை. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. அதேபோல, மதுரையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி

    ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிள்ளைகள் இறுதிச்சடங்கிலும் எங்களின் பெற்றோர்

    இணைபிரியாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். அதனால் இருவரின் உடலையும் ஒரே சமயத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக

    வைத்து தகனம் செய்தேன். இதுபோன்ற ஆத்ம திருப்திதான் இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும்.

    பிரேத பரிசோதனை செய்த உடல்களை இரவு நேரங்களில் கொண்டுவந்து கொடுப்பார்கள்.

    விடிய விடிய தனி ஆளாக சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் எரியூட்ட வேண்டி இருக்கும்.

    இந்த சுடுகாட்டினை நான் கோவிலாகத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் வறுமையில் இருந்தபோது இந்த தொழில் செய்வதால்

    விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போது என்னை ஏற்றுக்கொண்டு அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    மயான வேலையை ஆண்களே சவாலாக நினைக்கும் இந்த காலத்தில், குடும்பத்தை காப்பாற்ற ஜோதி இந்த வேலையை

    ஏற்றுக்கொண்டிருப்பது அவரை பாரதி கண்ட புதுமை பெண்ணாக தெரிய வைத்திருக்கிறது.

    உடல்களை தகனம் செய்த பெண்
    உடல்களை தகனம் செய்த பெண்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

    என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

    அகமெல்லாம் கோடையது
    அக்கனியாய் கொதிக்கிறது
    விழியேனோ மார்கழியாய்
    விழுந்தேனோ நனைகிறது

    நெஞ்சேனோ நித்தம் – உன்
    நினைவால் துடிக்கிறது
    கத்தும் கடல் அலை போல
    கரை தேடி அலைகிறது

    பகல் எல்லாம் தேடுகிறேன்
    பாலை வனம் ஆகிறது
    இறுதி போர் முற்றுகையாய்
    இதயம் ஏன் இருக்கிறது …?

    நான் இட்ட முத்தத்தை
    நகல் எடுத்து இன்று வை
    நான் இறந்த பின்னாலே
    நாளும் நீ ருசித்து வை

    ஒன்றாக இருக்கையிலே
    ஓராயிரம் சண்டைகள்
    ஒருமையில வாடையில
    உனை வாட்டும் தனிமைகள்

    காரணங்கள் ஏதுமின்றி
    கல் எறிந்தாய் நெஞ்சமதில்
    விட்டெறிந்து நீ போனாய்
    விழுந்து விட்டேன் நோயதினில்

    பிணம் எடுக்கும் வேளையில
    பிரண்டழுவாய் நீ மட்டும்
    பின்னே வந்த மாதங்களில்
    என்னை மறப்பாய் நீ முற்றும்

    மறத்தல் தான் வாழ்வினிலே
    மனதிற்கு நின்மதி
    மரண ஓட்டம் தான்
    மனிதனின் தலை விதி

    எதை எடுப் பாய் எதை எறிவாய்
    எண்ணிப் பாய் நீ தான்
    என் மனதில் உள்ளவற்றை
    எழுதிவிட்டேன் மன்னிப்பாய் ..!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் -03-08-2020

    Home » You searched for பிணம்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    கதறி அழும் காதல் ….!

    கதறி அழும் காதல் ….!

    மடி வைத்து தலை தூங்க
    மணி விரல்கள் தலை கோத …
    முன்பகல் இரவாகி
    முழுமையாய் நனைந்த நாட்கள் …

    எண்ணி இன்று பார்க்கையிலே
    ஏங்குதடி என் மனது ….
    காற்று வந்து உடல் புகா
    கட்டி அணைத்து நின்றவளே ….

    நீ இட்ட முத்தங்களை
    நினைவுகள் தேடுதடி …
    உன் புருஷன் நான் என்று
    உறவாடிய காலங்கள் …..

    வீணாகி போகும் என்று
    விரும்பியது யார் இன்று ..?
    ஏகாந்த பெரு வெளிக்குள்
    எறிந்தது யார் இன்று …?

    ஊர் வந்த வேளையில -கால்
    ஊன்றிய சாலையிலே …
    தேம்பியது உன் நினைவுகளே
    தேவைதையே என் செய்வேன் …?

    அழுதபடி நான் நடக்க
    அகம் எல்லாம் நீர் துடிக்க
    பாத்திருந்த கதிரவனோ
    பாய்ந்து வந்து காய வைக்க …

    நான் நடந்து போனேண்டி
    நடை பிணம் ஆனேண்டி …
    ஏதறிவாய் என் மனதை
    எவர் சொல்வார் என் நிலையை …?

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -21/01/2018