Search Results for: நேரம்
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல்
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல்
டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேரம் தடுப்புக்காவல் காணாமல் போன துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலும் விசாரணைக்காக 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது ஆயுதம் மீட்கப்பட்ட வழக்கில் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
அடுத்தடுத்த விசாரணைகளில், அந்த துப்பாக்கி 2001 ஆம் ஆண்டு தேவானந்தாவுக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

வன்னிமைந்தன் youtube நேரலை 12.00 pm லாண்டம் நேரம் நேரலை
வன்னிமைந்தன் youtube நேரலை 12.00 pm லாண்டம் நேரம் நேரலை ஆரம்பமாகவும் இதில் அழுத்தி பார்க்க to ethiri .com
சுஜீவசேனசிங்கவிடம் மூன்றுமணி நேரம் சிஐடிவிசாரணை
சுஜீவசேனசிங்கவிடம் மூன்றுமணி நேரம் சிஐடிவிசாரணை
சுஜீவசேனசிங்கவிடம் மூன்றுமணி நேரம் சிஐடிவிசாரணை ,நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் மூன்று மணி நேரம் சிஐடி விசாரணை
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனம் தொடர்பான சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (14) காலை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முன் ஆஜரானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சேனசிங்கவிடம் சிஐடி சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், தன்னிடம் நான்காவது முறையாக விசாரணை நடத்தப்பட்டதாகக்
கூறினார், மேலும் தற்போதைய அரசாங்கம் அரசியலில் ஈடுபட்டுள்ள நபர்களை குறிவைக்கும் ஒரு பாணியில் ஈடுபட்டு வருவதாக கவலை தெரிவித்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல்வாதிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சி என்றும், எந்தவொரு சவாலையும் அச்சமின்றி
எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சேனசிங்க மேலும் குற்றம் சாட்டினார்.
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் ,குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது.
அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும்.
இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும்.
இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை.
இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும்.
நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள்.
மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை.
நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது.
இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.
சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்
சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்
இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த வார இறுதியில், சனிக்கிழமையன்று (07) இசை திருவிழா ஒன்று நடந்துள்ளது.
நேச்சர் பார்ட்டி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பாடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அடுத்து நடக்க போகும் பயங்கர நிகழ்வை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் தாக்கியது. அப்படி அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
இதில் சிக்கி திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
லீ சசி என்ற அந்த பெண் மற்றும் 35 பேர் புகலிடம் ஒன்றில் ஓடி சென்று பதுங்கி உள்ளனர். அவர்களை தேடி வந்த ஹமாஸ் குழுவினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர்.
சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்
பின்னர் கையெறி குண்டுகளையும் வீசி, தாக்கியுள்ளனர். இதில், பலரும் ஒருவர் மேல் ஒருவர் என அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.
எனினும், இதில் சசி பாதுகாப்பாக தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
இந்த பயங்கர தகவலை சசி, தன்னுடைய தோழியான நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மேனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
7 மணிநேரம் பதுங்கியிருந்தோம். நான் ஜோக் எதுவும் கூறவில்லை என தெரிவித்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் அதற்கு சான்றாக
வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பலர் உயிரிழந்த நிலை கிடக்க கூடிய காட்சி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தோணிக்கல் ஐயா வாசியசாலை முன்பாக இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் இரு நேரம் உணவு உண்டு வாழும் குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பல பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரியவர்கள், முதியவர்கள் எனப் பாராது மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமது ஆதங்கத்தினை தெரிவித்ததுடன், தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினர்.
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் ,சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு:
கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடைஇ வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறைஃமுகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய
டேய் பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காத திட்டி தீர்த்த சீமான் சற்று நேரம் சலசலப்பு
டேய் பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காத திட்டி தீர்த்த சீமான் சற்று நேரம் சலசலப்பு
ஊடக நபரை பைத்தியகாரன் என்ற சீமான் பேச்சால் கடுப்பான ஊடக நபர் .
சீமானை சீண்டும் முறையில் ,திட்டமிட்டு கேள்விகளை கேட்டு ,சீமான் மீது சர்ச்சையை கிளப்பிட இவ்வாறான கேள்விகளை அவர் கேட்டு வருவதாக சீமான் தெரிவித்துள்ளார் .
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
நாடு முழுவதும் இன்று (11) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்
துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
நாடு முழுவதும் இன்று (02) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
bitcoin பாரிய வீழ்ச்சி பணத்தை அள்ளும் நேரம்
உலக நாடுகளில் மிக முதல்தர கிரிப்டோ கரன்சியாக விளங்கும் bitcoin பாரிய வீழ்ச்சி. பணத்தை அள்ளும் நேரம் .இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.
நமது டெக்கினிக்கல் கணிப்பின் பிரகாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கு செல்லும் இடமாக பணத்தை அள்ளும் நேரம் 13950 இந்த எல்லை பகுதி உடைத்தால் அடுத்து 11000 பகுதிகளை எட்டி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது .
அதன் பின்னர் இதன் ஏறு வரிசை அதிவேக உச்சம் ஒரு லட்சம் வரை எகிறும் நிலை காண படுகிறது.
எதிர் வரும் வாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கி சென்று பின்னர் அசுர வேகத்தில் மேல் நோக்கி செல்லும்.
ஆகையால் பங்கு சந்தையில் ஒரே நாளில் செல்வந்தராகிட பணத்தை அள்ளும் நேரம் இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்தி முந்தி கொண்டு bitcoin வாங்கிட தயார் நிலையில் காத்திருங்கள் .
நாம் கூறும் இந்த எல்லை பகுதியை bitcoin இறங்குநிலை அண்மித்ததும் ஒரு பேசிண்டேஜ் விகிதம் பணம் கையடாலை புரிந்து , சாதூரியமாக கையாண்டு ,பணத்தை bitcoin பங்கு சந்தையில் பணத்தை அள்ளி கொள்ளுங்கள்.
உதாரணம் ஆயிரம் டொலர் உங்களிடம் வைப்பில் இருந்தால் நீங்கள் bitcoin வாங்கிட 0.03 என்பதை பயன் படுத்தி வாங்கி கொள்ளுங்கள் .
இந்த பகுதி என்பது ஆபத்தின்றி காத்திருந்து bitcoin பங்கு சந்தையில் அதிக இலாபத்தை பெற்றிடும் வழியாகும் .
bitcoin இலாபத்தை take profit பெற்று கொள்ளும் இடமாக 25000 அல்லது 28000 பகுதிகளை வைத்து கொள்ளுங்கள்.

இந்த பகுதிகள் மிக இலகுவாக குறுகிய கால பகுதியில் bitcoin மூலம் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வழியாக டெக்கினிக்கல் கணிப்பீட்டில் காண முடிகிறது .
எனவே அவசர பட்டு இப்பொழுது வாங்கிடாது காத்திருந்து நாம் குறிப்பிட்ட பகுதி அல்லது அதனை கிட்ட தட்ட அண்மித்த பின்னர் bitcoin வாங்கி அதிக இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்.
நமது கணிப்பீடு அறிக்கை கணிப்பு துல்லியமானது எனின் , கிட்ட தட்ட மூன்று வருடங்களின் பின்னர் bitcoin இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனலாம்.
இந்த எல்லை பகுதியை bitcoin சந்தை எட்டும் பொழுது பெரும் சுனாமி தாக்குதலாக சந்தை அதிர்வலைகள் காணப்படும்.
அதனால் பணம் கையாடல் உரியமுறையில் கையாண்டால் bitcoin பங்கு சந்தையில் இதில் நீங்கள் வெற்றி கொள்ள முடியும்
- வன்னி –
நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை
நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை
ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை
மஞ்சு வாரியர்
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.
மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார்
முடிவு செய்தனர். கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்தார்.
அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மஞ்சுவாரியர்
அளித்துள்ள தகவல்கள் மூலம் இந்த வழக்கில் மேலும்
பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
10 மணிநேரம் மின்வெட்டு
10 மணிநேரம் மின்வெட்டு
இன்று இலங்கையின் பல் வேறு பகுதிகளில் பத்து மணிநேரம் மின்சார
தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
நாடு பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
இதனால் தொழில் துறை உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் பாதிக்க பட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது
மக்கள் வீதியிறங்க வேண்டிய நேரம் – மைத்திரி
மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில்
அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.
13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.
நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.
ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.
இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு
இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு
இலங்கையில் இன்று நான்கு மணிநேரம் மின்சார வெட்டு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
நாள் தோறும் பலமணி நேரம் மின்சார வெட்டு இடம்பெற்று வருவதால் மக்கள் ஆளும்
ஆட்சியர்கள் மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் மக்கள் நாள்தோறும் பெரும் சுமைகளை சுமந்த வண்ணம் உள்ளனர் ,
நாளை கொழும்பின் பல பகுதிகள் 14 மணி நேரம் நீர் வீட்டுக்கு உள்ளாகும் என
அறிவிக்க பட்டுள்ளதால் மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர்
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
இலங்கையில் நாளை முதல் ஐந்து மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று
இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது
இதனால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கையின் பல பாகங்கள் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது
12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்
12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்
ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம்
புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019
*ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.
மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.
*உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.
*புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இது தவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ
36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்
மூழ்கிய படகு
அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,
இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,
சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,
மீட்ட மீனவர்கள்
அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்
அதிசயம்
இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து
வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .
தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரச தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக
மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர்நினைவேந்த் நிகழ்வினை இணையவழியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுகின்றது.
ஆக்கிரமிப்புக்கும் இனஅழிப்புக்கும் எதிராக போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால்
இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு கட்மைப்பு தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு தடைவிதித்து வருகின்றது.
இந்நிலையில் தேசப்புதல்வர்களை நினைவேந்தி உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு
ஒன்றுகூடுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாயக நேரம் மாலை 6:05க்கு (ஐரோப்பா மதியம் 1:35, நியு யோர்க் காலை 7:35) தொடங்குகின்ற நிகழ்வுகளை www.tgte.tv
TGTE TV
The Transnational Government of Tamil Eelam. TV Channel
www.tgte.tv
– Facebook : tgteofficial காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து
மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களை நினைவேந்தும் வகையில் இது அமையவிருக்கின்றது.









































