Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நித்தம் நீயே வா

நித்தம் நீயே வா

முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
என் எச்சி பட்டே உன் உடலை
எந் நாளும் நனைக்கவா ..?

இடையாட்டும் காற்றை பிடித்து
இன்று சிறை வைக்கவா ..?
நனையாமல் நீ செல்ல
நானும் குடை பிடிக்கவா ..?

தலையாட்டும் கூந்தலை
தாங்கமே தந்திட வா
தாலாட்டு நான் பாட
தங்கமே உறங்க வா

முன் பகலை இரவாக்கி
முழு நிலவில் தோய்க்கவா ..?
உன் சாமி நான் ஆனேன்
உயிரே நித்தம் வணங்க வா ….

ஆகாய சூரியனாய்
அன்றாடம் வருபவளே
நித்தம் என் உறக்கத்தை
நீயே கலைக்க வா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது
    Posted in இலங்கை செய்திகள்

    அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

    அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

    அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது ,15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரியான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை

    கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அந்தத் துறவி சிகிச்சை பெற்று வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, அனுராதபுர நீதவான் நீதிமன்றம் பிரதம மந்திரியையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் கைது செய்ய பிடியாணை

    பிறப்பித்திருந்தது. மேலும், அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன, தேரர் நாட்டை விட்டு வெளியேறும் எந்தவொரு முயற்சியையும்

    தடுக்க குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவித்து, அவருக்குக் கடுமையான வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளார்.

    இந்த வழக்கு, 2026 மார்ச் 6 ஆம் தேதி நித்தம்புவ பொலிஸில், தொடக்கத்தில் ஒரு சிறாரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரிலிருந்து உருவானது.

    ஆரம்பத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர் ராகமாவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்ட போதிலும்,

    சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில்

    பின்னர் அச் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவருக்கு முன்பே பாலியல் துஷ்பிரயோகம் நடந்த வரலாறு இருப்பது தெரியவந்தது.

    இன்றுவரை, இந்த வழக்கு தொடர்பாக மூன்று நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவரின் தாயாரும் ஒருவர்.

    பித்து எனக்குப் பிடித்து
    Posted in கவிதைகள்

    பித்து எனக்குப் பிடித்து

    பித்து எனக்குப் பிடித்து

    பித்து எனக்குப் பிடித்து
    நித்தம் உனை நினைத்து
    சத்தமாக கவிபடிக்க
    எத்தனிக்கிறேன்

    பல நாள் கேட்ட குரல்
    சில நாளா இனிக்கிறது
    கலகலவெனும் சிரிப்பு
    சலசலப்பை தருகிறது

    உன் கதை கேட்காமல்
    உன் கவி படிக்காமல்
    என் இரவு தொடங்கவில்லை
    என் கனவு முடியவில்லை

    உன் சமூக தொண்டு
    உன் தேசிய நோக்கம் கண்டு
    மிரண்டு போகின்றேன்
    துவண்டு விடாது தொடர் உன்பணி

    அண்மை நாட் கவிதைகளில்
    என்னை இவள் காண்கிறாள்
    உண்மை அதுவென்றால்
    நன்மை இது தொடர்ந்திடுவாள் ..

    இப்படிக்கு
    இவள் உன் கவிதை
    நாயகி.

    என்னை அழைப்பாயா
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    என்னை அழைப்பாயா

    என்னை அழைப்பாயா

    உந்தன் கவி படிக்கையில
    உள்ளம் வியக்குதடி
    உன்னை தினம் பார்த்திடவே
    உள்ளம் துடிக்குதடி

    நீ எழுதி வைத்த கவிதையதை
    நித்தம் புரட்டி படிக்கையில
    சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
    சாதனை போல பேசுதடி

    பன்மையில் பகிரும் மொழியதனில்
    பாசம் வந்து கொட்டுதடி
    ஒருமையில் பேசும் சங்கதியில்
    ஓடி மனம் துள்ளுதடி

    என்னை என்னடி செய்தாயோ – என்னை
    ஏனோ சிறை வைத்தாயோ
    உன்னை மறக்க முடியாமல்
    உள்ளத்தை ஏனோ வைத்தாயோ

    பேசா பேசும் பேரழகே
    பேரொளி எனக்கு காட்டாயோ
    பக்கம் வந்து பார்த்திடவே
    பாவை என்னை அழைக்காயோ ..?

    ஆக்கம் -13-05-2025
    வன்னி மைந்தன்

    என்னை பார்ப்பாயா பதில் சொல்
    Posted in கவிதைகள்

    என்னை பார்ப்பாயா பதில் சொல்

    என்னை பார்ப்பாயா பதில் சொல்

    உன்னை தினம் பார்க்கையிலே
    உள்ளம் இன்று குளிருதடி
    கன்னக்குழி பேரழகில்
    கவிதை வந்து கொட்டுதடி

    கொஞ்சி பேசும் உன் மொழிதனையே
    கெஞ்சி கேட்க துடிக்குதடி
    வஞ்சி உன் பேரழகில்
    வாடி மனம் போகுதடி

    பிள்ளை உன் செயலினால்
    பிரியம் மனம் கூடுதடி
    கள்ளம் இல்லா பேச்சினால்
    காதல் வந்து ஊறுதடி

    நித்தம் உன்னை பார்த்திடவே
    நிலவே மனம் துடிக்குதடி
    சத்தம் இல்ல பேசிடவே – இதயம்
    சாளரம் மெல்ல திறக்குதடி

    உன்னை தினம் எண்ணி எண்ணி
    உயிரே உயிர் ஏங்குதடி
    வெள்ளை மனம் கொண்டவளே
    வெளி நாடு நீ வந்திடடடி

    சோர்ந்து மனம் போகையிலே
    சோர்வகற்றி போறவளே
    வாடி நான் போகாமல்
    வைய்யத்தில் என்னை பார்ப்பாயா ..?

    வன்னி மைந்தன் (ஜெகன் )
    ஆக்கம் – 25-01-2025

    ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
    Posted in கவிதைகள் நிலா தமிழ்

    ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

    ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

    ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
    எந்நாளும் விளக்கேற்றி அழுதிடுவோம்
    எம் வாழ்வின் பெருமையென உணர்ந்திடுவோம்
    மாவீரர் திருநாளை
    தலை வணங்கி நினைத்திடுவோம்
    மான மறவர்க்கு தினமும் மலர் தூவிப் போற்றிடுவோம்
    தரணியெல்லாம் அவர் புகழை
    தமுக்கு எடுத்து அறைந்திடுவோம்!

    ஈழத்தின் விடியலுக்காய் யாகத் தீயில்
    மாவீர முதல் வித்தாய்
    ஆகுதியானார்
    சங்கரண்ணா
    உண்ணாமல் நோன்பிருந்து
    உயிரீய்ந்தார் திலீபன் அண்ணா
    எம்மின விடுதலைக்காய்
    பெண் மாவீர விடுதலை முதற் தாயாய் தன்னுயிரை உவந்தளித்தாள்
    ஈழத்துக் கொற்றவையாம் மாலதி அக்கா!

    கருவேங்கை விடுதலை முதல் மாமுனிவனாக
    சரித்திரம் படைத்தார்
    மில்லர் அண்ணா
    ஈழத்து மறத்திகளும் வீரத்தில் சளைத்தவர்கள்
    அல்ல என்று
    முதற் பெண் கடற் கரும்புலியாய்
    கடலினிலே காவியம் படைத்தாள் அங்கயற்கண்ணி அக்கா
    வானில் கூட வெடித்து உலகை வாய் திறக்க வைத்தார்கள்
    ரூபனும் சித்திரனும்!

    எம் நாடு எம் நிலம்
    என்னுணவு என்னுணர்வு
    எம்மொழியே எம்மறிவு
    யாரவன் நீ எமைக் கேட்க
    எம் வலிமை உணராமல்
    எகத்தாளமுடன் வந்து
    எள்ளி நகையாடி
    எமையடிமையாக்க வந்த
    எதிரிகளை
    வீறுடனே வீழ்த்தியழித்து
    அச்சம் தவிர்த்து அடங்க மறுத்து
    வருங்காலம் உணர்வு பெற வழி வகுத்து
    ஈழத்தின் இறையாண்மை
    காத்தோர்கள்!

    தானுயர வாழாமல்
    தம் சுற்றம் வாழ்வினிக்க
    தமிழ் உயர தமிழன் புகழ் வான் சிறக்க
    தொல் குடித் தமிழினம் தான் பெருமை கொள்ள
    உண்மையுடன் வாழ்க்கை வாழ்ந்து
    ஒப்பற்ற தலைவன் வழியில் நடந்து
    தரணியிலே புதுப் பரணி
    படைத்தவர்கள்!

    கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
    புலரட்டும்
    இவர்கள் நினைவோடு
    மலரட்டும்
    இவர்கள் கனவோடு
    நாளெல்லாம் இவர்கள் புகழை
    கொட்டட்டும் செண்டை மேளம்
    முழங்கட்டும் பம்பை மேளம்
    நித்தம் எம் எழுத்தாணியும் மாவீரர் புகழ் பாடியே சிறக்கட்டும்
    ஊனு

    -நிலா தமிழ் –

    இது தான் காதல்
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    இது தான் காதல்

    இது தான் காதல்

    எங்க ஊரு வீதியில
    ஏ மனமே நடந்தேண்டி
    உன் நினைவு எனை துரத்த
    உட்க்கார்ந்து அழுதேண்டி

    நீ தந்த உணவுகளும்
    நீ யிட்ட முத்தங்களும்
    நெஞ்சில் நீச்சலிட
    நித்தம் உனை நினைக்கிறேன்

    மடி சாய்ந்து நீ அழுதிட
    மணி விரல்கள் தலை கோத
    கண் துடைத்து நீயணைத்த
    கால நினைவு துடிக்குதடி

    போர் வந்து சதி செய்ய
    போராலே பிரிந்தோமே
    ஏன் நினைத்தேன் நான் அன்று
    எனை பிரிவாய் நீ என்று

    இன்றுவரை உறவில்லை
    எங்கிருக்காய் தெரியவில்லை
    ஆனாலும் ஆள் மனதில்
    அன்பே உனை நினைக்கிறேன்

    எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
    என்னை நானே சமரசமாக்கி
    உன் நினைவோடே வாழ்கிறேன்
    உண்மை காதல் இது தானே …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 03-04-2024

    ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

    ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி


    ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி

    ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் பலஸ்தீன மக்கள் பரம எதிரி இஸ்ரேல் .


    ஹமாஸ் கோட்டைகளை பிடித்து விடலாம் என கற்பனை கட்டி பறந்த ,காலாட் படை அடி வாங்கி சுருண்டு கொண்டது .

    வீரமுடன் விவேகத்துடன் அர்ப்பணிப்பும் தியாகத்துடன் விடுதலை போராளிகள் நடத்தும் ,வீர வேக தாக்குதலில் நாள்தோறும் 60 இராணுவ படைகள் காயம் என அறிவிப்பு .

    ஹமாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலில் அலறும் எதிரி


    எதிரி எதிர்பாரா தாக்குதலால் நிலை குலைந்து ,நின்மதி அற்று நித்தம் அழுகிறான் ,அழுகிறான் .,

    அப்பாவி மக்களின் கண்ணீரும் ,பல்லாயிரம் உயிர்களின் சாபமும் இன்று இஸ்ரேலை துரத்திய வண்ணம் உள்ளது ,துரத்திய வண்ணம் உள்ளது .

    அழுகுரலின் ஒப்பாரி ஓலம் இன்று இஸ்ரேலை சுற்றி படர்கிறது .

    வீடியோ

    வந்து விடு
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    வந்து விடு

    வந்து விடு

    நித்தம் உனக்கு முத்தமிட்டு
    நீண்டுறங்க ஆசை
    நீ எனக்கு உரித்தானால்
    நித்தமிட ஆசை

    பத்து திங்கள் ஆக்கி வைத்து
    பார்த்துவிட ஆசை
    பார் காணும் இரவெல்லாம்
    பகலாக்க ஆசை

    நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
    நித்தம் என்ன செய்வேன்
    காத்திருப்பு போது மடி
    கண் மணியே வாடி

    போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
    போரெல்லாம் தோற்குமடி
    வேர்வைக்குள்ள நீ குளிக்க
    வேண்டுதலும் தீருமடி ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 12-11-2023

    இளைஞரில்லா இலங்கை
    Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

    இளைஞரில்லா இலங்கை

    இளைஞரில்லா இலங்கை

    யுத்தமொன்று வந்ததனால்
    மொத்த உறவும் பறந்தன.
    முத்தமிட்ட அன்னை மண்ணைச்
    சத்த மின்றிப் பிரிந்தன.

    சொத்துப்பத்து ஈட்டவென்றும்
    சொந்த நாட்டைத் துறந்தனர்.
    நித்திரையை மறந்தங்கே
    நித்தம் உழைப்பில் இறந்தனர்.

    புத்திஜீவி கல்விமான்கள்
    பிற நாடுதேடி ஓடினம்.
    பத்தியெரியும் வயிற்றுடனே
    பலர் குத்தியிங்கு முறியினம்.

    கலைஞர் இளைஞர் கன்னிகளும்
    கனடாக் கனவில் மிதக்கினம்.
    அலைகள்போல அள்ளுப்பட்டு
    அங்கே போக நினைக்கினம்.

    இக்கரைக்கு அக்கரையென்று
    இருந்ததெல்லாம் பறக்குதாம்.
    சக்கரையில்லாப் பொங்கல்போல
    சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

    செத்த வீட்டில் பங்குகொள்ளச்
    சொந்தங்களும் இருக்காது.
    சுத்தியுள்ள சாமி தூக்கப்
    பக்தர்களும் கிடைக்காது.

    பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
    பிள்ளை ஒன்றும் இருக்காது.
    புத்தருக்கு விகாரைகட்ட – இனி
    இங்கு போராட்டமும் நடக்காது.

    -பிறேமா(எழில்)-

    உன்னால் துடிக்கிறோம்
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் துடிக்கிறோம்

    உன்னால் துடிக்கிறோம்

    உன்னால் துடிக்கிறோம்

    உன்னால் துடிக்கிறோம்

    துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
    துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
    அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
    அறத்திலே நீயோர் தாயாகினாய்

    அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
    அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
    போதனை பொழிகின்ற அருவியானாய்
    பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்

    கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
    கருணையில் நீயோர் தெய்வமானாய்
    பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
    பேறுகள் பேசும் நூலே ஆனாய்

    உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
    உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
    வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
    வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்

    உன்னை தினம் நான் படிக்கையிலே
    உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
    உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
    உதடு சிரித்து எனை அழைத்தாய்

    சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
    சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
    உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
    உலகத்தில் எழுதாத புது பாடல்

    உன்னாலே துயராகி வாடுகிறோம்
    ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
    என்றுன்னை இனி நாம் காண்போம்
    ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!

    சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
    அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 30-07-2023

    ஆர தழுவு
    Posted in கவிதைகள்

    ஆர தழுவு

    ஆர தழுவு

    உந்தன் சிரிப்பு என்னை மட்டும்
    ஏனோ கொல்லுதோ
    உன்னை மட்டும் எண்ண வைக்க
    ஏனோ துடிக்குதோ

    கள்ளம் இல்லா உந்தன் பேச்சு
    காதில் ஒலிக்குதே
    கண்கள் மட்டும் உன்னை சுற்றி
    ஏனோ தேடுதோ

    ஆர தழுவு

    நீ சிரித்தால் நான் மகிழ்வேன்
    சிந்தை கூறுதே
    நித்தம் உன்னை பார்க்க மனம்
    நித்தம் தேடுதே

    உந்தன் பார்வை மட்டும் வந்து
    என்னை கொல்லுதே
    உன்னால் எந்தன் தூக்கம்
    இன்று தொலையுதே !

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 26-05-2023

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    தமிழன் அழிந்த நாள் ….!

    தமிழன் அழிந்த நாள் ….!

    நந்தி கடலே நந்தி கடலே
    நீயும் அழுவதா
    நித்தம் குமுறி மடிவதா – நீயும்
    நித்தம் குமுறி மடிவதா

    ஆண்டு பல ஆகிப் போச்சு
    ஆனாலும் என்ன ஆச்சு
    உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
    உணர்வுகளும் செத்து போச்சு

    வல்லரசு ஆதிக்கம் தான்
    வாலாட்டுது எங்கும் தான்
    பலம் இழந்தால் இழிவாச்சு
    பாதணியாய் கிழிவதாச்சு

    படு கொலையை புரிந்தாரை
    பாடையிலே ஏற்றலையே
    தீர்ப்பெழுத மறந்தவரே
    தீர்வென்ன கூறாயோ

    ஆதிக்க இன வெறியான்
    அரசாண்டு மகிழ்வதுவோ
    இனம் அழித்தான் இனவெறியன்
    இன்றாழ விடுவதுவோ

    முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
    முன் தீர்ப்பு எழுதிவிடு
    நாம் வாழும் நாடொன்றை
    நலமுடனே தந்து விடு …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 14-05-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இன்றே நீ செத்து விடு …!

      இன்றே நீ செத்து விடு …!

      கடவுள் ஒருவன் இருக்கிறான் – அவன்
      கண்ணீர் தர மறுக்கிறான்
      வாழ வழி காட்டுறான் – அவன்
      வாழ்விற்க் ஒளி வீசிறான்

      ஊரில் உள்ள மனிதர் எல்லாம்
      உன் உறவு என்று எண்ணிவிடு
      உலகை ஆளும் கடவுள் போல
      உளம் மகிழ சிரிப்பு கொடு

      நீயும் நானும் மனிதர் என்றால்
      நின் மதியாய் வாழ விடு
      நித்தம் இடும் இழிவுகளை
      நீயும் இன்று நிறுத்தி விடு

      ஏழை இன்று நாளை உலகை
      ஏறி நன்றே ஆள்வான் – நீ
      எறிந்த சொல் லடியில்
      ஏறி நின்றே ஆடுவான்

      உன் பணத்தில் மேலானால்
      உன்னை அவன் மதிப்பானா
      உந்தன் தலை கனத்தை
      உருட்டி அவன் அடிக்காணா

      விந்தை பூரி உலகினிலே
      விடயங்கள் நிறைந் திருக்கு
      வினை விதைத்தார் வினையறுக்கும்
      விடயங்கள் நிகழ்ந் திருக்கு

      சிந்தை உளார் மனிதரெல்லாம்
      சிகரத்தில் நிறைந் திருக்கு
      விந்தை உளார் தாமெனே
      விதைத் தவர் நடந்திருக்கு

      முந்தை உரை நாவெல்லாம்
      முன் செயலில் தவித்திருக்கு
      பிந்தை நிலை அறியாநிலை -விழி
      பிரளயத்தில் மூழ்கிருக்கு

      முந்தை வினை விதைக்கும் முன்
      முளை வேர் நன்றே அறிந்துவிடு
      பிந்தை விதை வான் எழுந்தால்
      பிடரி இழந்து மாண்டு விடு …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 12-01-2022

        தவிக்கிறேன்
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

        உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

        என்ன செய் தாயோ
        என்னை ஏங்க வைத்தாயோ
        என்னை ஏங்க வைத்தேனோ
        என் இதயம் பறித்தாயோ

        முன் பனியாய் பின்னிரவில்
        முன்னே வாராயோ – நான்
        முழு நிலவில் குளித்திட
        முழு உலா வாராயோ

        எதுகை மோனை எனதாகும் – என்
        ஏக்கம் வாங்கு உனதாகும்
        படித்து பாரு புதிராகும்
        படைக்க முனை விழிப்பாகும்

        சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
        சங்கதி இருக்காதே
        அந்தி சாயும் வேளையிலே
        ஆள் மனம் தூங்காதே

        முத்தம் தரவா முன்னே வரவா
        முழு நிலவே பதில் தர வா
        நித்தம் வரவா நீளும் இரவா
        நினைவில் வைத்திட வா

        உன்னை எண்ணி தவிக்கிறேன்
        உருகி மெழுகாய் அழுகிறேன்
        வின் விட்டு வாராயோ
        விழுந்து உடல் தழுவாயோ ..?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 03-01-2022

        ஒரு முறை உன்னை தா
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        ஒரு முறை உன்னை தா …!

        ஒரு முறை உன்னை தா …!

        வீடு வந்து என்னை தேடும்
        வெண்ணிலா நீ தானோ
        உன்னை தேடி நான் ஏங்கும்
        உயிர் காதல் இது தானோ

        மாலை ஒரு வேளை
        மயக்கும் அதி காலை
        நீ வந்தால் போதும்
        நிகழ்ச்சிகள் தொடரும்

        விடியாத இரவுக்குள்
        மடியாத போர்வைக்குள்
        உன்னோடு வாழும் வாழ்தால் தானே
        உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே

        வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
        விட்டு உயிர் போகும்
        கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
        பட்டுடல் போகும் பாதியில் பாரும்

        நிலையில்லா வாழ்வுக்குள்
        நித்தம் போராட்டம்
        நினைவழியா கனவுக்குள்
        நீயே என் தேரோட்டம்

        ஓடும் நதியாய் தேடி வரவா
        ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
        நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
        நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 30-12-2021

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        ஏன் என்னை விட்டு விலகினாய் ..?

        ஏன் என்னை விட்டு விலகினாய் ..?

        நித்தம் உன்னை பாடிட தானே
        நிகழ் காலம் துடிக்கிறேன்
        கத்தும் கடல் போல உன்னை
        காண தானே தவிக்கிறேன்

        பட்ட துயர் மறைந்திட தானே
        பகலே உன்னை அழைக்கிறேன்
        வித்துடல் ஆகிட முன்னே
        விழி காட்டு அழைக்கிறேன்

        ஒருமைக்கும் பன்மைக்கும் இடையிலே
        ஓடி உறவாடினாய் – இன்று
        ஓடி ஓடி மறைவதென்ன
        ஒரு தரம் பதில் சொல்லாய்

        விடியுமா அந்த கிழக்கு – ஒளி
        தருமா வந்து எனக்கு
        ஏனோ வானில் மறைந்தாய்
        இருளை அள்ளி விதைத்தாய் ..?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 08-11-2021

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

          நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

          ஒத்தையில நீ தனித்து
          ஒடிந்துருகி போனவளே
          நித்தம் பல கோயில் ஏறி
          நின்று வரம் பெற்றவளே

          மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
          மூழ்கி விழி போனதடி
          அல்லும் பகல் வாயில் வந்து
          அறம் பேசி நிற்பவளே

          உந்தன் துயர் பாடும் நிலை
          உயிர் விட்டு தந்ததென்ன
          நெஞ்சுருகி நாம் கதறும்
          நிலை இன்று வைத்த தென்ன

          ஒத்த பிள்ளை பெற்றவளே
          ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
          பெற்றவளே உனையிழந்து
          பேரன்பு கதறுதடி

          அன்புருகி பேசி நிதம்
          ஆறுதல் சொல்பவளே
          நெஞ்சிளகி நாம் வாழ
          நீ வந்து பேசாயோ ..?

          முன் தினத்தில் கோழிக்கறி
          முழு சமையல் செய்தவளே
          அன்புருகும் பிள்ளாய்க்கு
          ஆக்கி நன்றே தந்தவளே

          இன்று அதை எண்ணி எண்ணி
          இதயமுடைந்து அழுகிறானே
          பெற்றவளே உனையிழந்து
          பெரும் துயரில் தவிக்கிறானே

          சோதனைகள் ஆயிரமாம்
          சோடனையாய் தூவையிலும்
          அவை எல்லாம் நெஞ்சடக்கி
          அமைதியாய் நடந்தவளே

          நீ வீழ்ந்த செய்தி இன்று
          நெஞ்சில் துயர் தந்ததம்மா
          இன்று வரை உன் இறப்பை
          நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!

          மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..

          -வன்னி மைந்தன்-(ஜெகன் )

          ஆக்கம் -03-03-2021

          நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
          நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            காதல் வந்தது எப்படி …?

            காதல் வந்தது எப்படி …?

            நான் நடந்த வீதியில
            நீ வந்த வேளையில
            நான் தொலைந்து போனேனே
            நாயகியை நினைந்தேனே

            நீ பேசும் போதெல்லாம்
            நித்தம் நான் இரசிக்கிறேன்
            நிகழ் காலம் உன் மடியில்
            நீண்டுறங்க துடிக்கிறேன்

            நாளை என்ற நாளதனை
            நான் எண்ண மறுக்கிறேன்
            நாடி வந்து உன்னடியில்
            நான் கூட துடிக்கிறேன்

            சிரிப்பாலே கதை பேசி
            சிறை வைத்து போபவளே
            என்ன உந்தன் மந்திரமோ
            என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 01-02-2021

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            காதல் வந்தது எப்படி

            காதல் வந்தது எப்படி

            நான் நடந்த வீதியில
            நீ வந்த வேளையில
            நான் தொலைந்து போனேனே
            நாயகியை நினைந்தேனே

            நீ பேசும் போதெல்லாம்
            நித்தம் நான் இரசிக்கிறேன்
            நிகழ் காலம் உன் மடியில்
            நீண்டுறங்க துடிக்கிறேன்

            நாளை என்ற நாளதனை
            நான் எண்ண மறுக்கிறேன்
            நாடி வந்து உன்னடியில்
            நான் கூட துடிக்கிறேன்

            சிரிப்பாலே கதை பேசி
            சிறை வைத்து போபவளே
            என்ன உந்தன் மந்திரமோ
            என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 01-02-2021

            வன்னி மைந்தன் கவிதைகள்

            காதல் வந்தது எப்படி
            காதல் வந்தது எப்படி