Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

இலங்கை கிளிநொச்சி பகுதியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

சிசுவை கதிரையில் அமர்த்திவிட்டு விட்டு சமயிலறையில் பெற்றவர்கள் இருந்துள்ளனர் ,,அவ்வேளை குழந்தை வீழ்ந்து இறந்துள்ளது

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிசு முழங்காவில் மருத்துவ மனைக்கு கு எடுத்த செல்ல பட்ட பொழுது சிசு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது

பெற்றவர்களில் அசமந்த போக்கே கதிரையில் இருந்து சிசு வீழ்ந்த்து மரணமாக காரணம் என தெரிவிக்க படுகிறது

கதிரையில் இருந்து வீழ்ந்த சிசு மாரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

    வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

    தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

    வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்

    கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in Uncategorized

      நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

      நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

      பூகொட – யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா மற்றும் தம்பி இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

      43 வயதுடைய திருமணமாகாத சகோதரியும், 38 வயதுடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

      இந்த நிலையில், அவர்கள் இருவரும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

      பின்னர் நேற்று காலை அவரது உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

      இதனையடுத்து சுகாதார பிரிவிற்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.

      பின்னர் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

        Posted in Uncategorized

        நித்திரையில் கணவனை வெட்டி கொன்ற மனைவி

        தன்னுடைய கணவனை ​அவருடைய வீட்டுக்குள் வைத்தே படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாயும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        இந்த சம்பவம் லுணுவில கொஸ்வத்தையில் இடம்பெற்றுள்ளது.

        தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அந்தப் பெண், தன்னுடைய கணவனை படுகொலைச்

        செய்துள்ளார்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

        44 வயதான நபரே, 38 வயதான பெண்ணினால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படுகொலைக்கு படுக்கை விரிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.

        இந்தவேளை அவ்விருவரின் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு

          மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு

          மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் தூக்கத்தில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

          மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள நெடியமடு கிராமத்தில் தூக்கத்தில் இருந்த வேளை வீட்டில் நுழைந்த நபர்கள் தனது மூன்று பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

          குறித்த பெண்ணின் கணவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில் குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார்.

          வாள்வெட்டில் படுகாயமடைந்த குடும்ப பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

          Posted in உலக செய்திகள்

          வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

          வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

          வடகொரியா – அதிபர் ,மற்றும் அவரது மனைவி ,உயர் இராணுவ அதிகாரிகள் ,Mount Paektu, மலை உச்சியில் வெள்ளைக்குதிரை ஒன்றில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,இந்த புகைப்படங்கள் ஜனாவுக்கு தாம் குதிரையில் சவாரி செய்கிறோம் என்பதை காண்பிப்பதாக உள்ளது என தெரிவிக்க பட்டு கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

          வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர்
          ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி
          Posted in இலங்கை செய்திகள்

          ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

          ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

          ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி ,ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணி நிர்வாகம் போட்டி நடுவர் நீயமூர் ரஷீத்திடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தது.

          மூன்றாவது ஒருநாள் போட்டியின் கடைசிக்கு முந்தைய பந்தில் வங்கதேசம் எல்பிடபிள்யூ ரிவியூ எடுக்க அனுமதித்த மைதான நடுவர் குமார்

          தர்மசேனாவின் முடிவுதான் கேள்விக்குரிய சம்பவம்.

          தர்மசேனாவின் முடிவுதான் கேள்விக்குரிய சம்பவம். ESPNCricinfo படி, பாகிஸ்தான் புகாரைப் பதிவு செய்தது,

          திரையில் ரீப்ளே தோன்றிய பிறகு எதிரணி ரிவியூ எடுத்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

          ரிவியூ எடுக்க முடிவு பங்களாதேஷுக்கு ஆட்டத்தில் ஒரு அசைக்க முடியாத நிலையை எடுக்க உதவியது. இந்த பந்து வீசப்படுவதற்கு முன்பு,

          பாகிஸ்தானுக்கு இரண்டு பந்துகளில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது.

          ரிஷாத் ஹொசைன் பந்தை லெக் ஸ்டம்பை நோக்கி மேலே பாய்ச்சினார், அது ஷாஹீன் ஷா அப்ரிடியின் கால்களுக்கு அருகில் இல்லாமல் லெக் சைடு நோக்கி சுழன்றது. தர்மசேனா அதை வைட் என்று அழைத்தார்;

          இருப்பினும், ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, பந்து அப்ரிடியின் கால்களுக்கு அருகில் அல்லது அவரது உடலின் எந்தப் பகுதிக்கும் அருகில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், வங்கதேசம் எல்பிடபிள்யூ ரிவியூ எடுத்தது.

          பெரிய திரையில் எந்த மறுபரிசீலனை

          நெறிமுறைகளின்படி, பெரிய திரையில் எந்த மறுபரிசீலனையும் தோன்றுவதற்கு முன்பு மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட

          வேண்டும். மறுபரிசீலனை திரையில் தோன்றியதால் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று பாகிஸ்தான் இப்போது வாதிடுகிறது, இது பங்களாதேஷின் முடிவை பாதித்தது.

          மறுபரிசீலனைக்கு செல்ல வங்கதேசம் 15 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டதால் பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாகவும் ESPNcricinfo அறிக்கை

          தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஒளிபரப்பில் எந்த நேரமும் இல்லை, எனவே பங்களாதேஷ் சரியான நேரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டதா இல்லையா என்பதை சுயாதீனமாக சரிபார்க்க முடியாது.

          போட்டி நடுவரிடமிருந்து PCB என்ன விரும்புகிறது என்பது சரியாகத் தெரியவில்லை; இருப்பினும், மன்னிப்பு கேட்பது விஷயத்தை குளிர்விக்கும்.

          ஆட்டத்தின் இறுதி பந்து வீச்சில் ஷாஹீன் ஸ்டம்பிங் செய்யப்பட்டார், இதன் விளைவாக, வங்கதேசம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது,

          மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. சல்மான் அலி அகாவின் சதம் வீணானது, பாகிஸ்தான் 291 என்ற இலக்கைத் துரத்தத் தவறியது

          பெண்ணை கட்டிப்பிடித்தார் பறிபோன பதவி
          Posted in உலக செய்திகள்

          பெண்ணை கட்டிப்பிடித்தார் பறிபோன பதவி

          பெண்ணை கட்டிப்பிடித்தார் பறிபோன பதவி

          பெண்ணை கட்டிப்பிடித்தார் பறிபோன பதவி ,Coldplay இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு பெரிய திரை அரவணைப்பு வைரலானதை அடுத்து அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது

          – அதன் இரண்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்டதாக வதந்தி பரவியது – வைரலானது.

          பாஸ்டன் இசை நிகழ்ச்சியில் ஒரு பெரிய திரையில் தோன்றிய கிளிப்பில், இரண்டு பேர் ஒருவரையொருவர் சுற்றிக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டுள்ளனர்.

          ஆணும் பெண்ணும் திடீரென

          ஆயிரக்கணக்கானோர் பார்க்க முகங்கள் தோன்றும்போது, அந்த ஆணும் பெண்ணும் திடீரென கேமராவிலிருந்து விலகி ஒளிந்து கொள்கிறார்கள்.

          இருவரும் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தில் நிர்வாகிகள் என்றும், இசைக்குழுத் தலைவரின் கருத்து காரணமாக ஒரு காதல் விவகாரம் பற்றிய வதந்திகள் எழுந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன, பின்னர் ஆன்லைனில் பரவின.

          வெள்ளிக்கிழமை இரவு, நிறுவனம் X இல் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது.

          புதன்கிழமை இரவு இசைக்கு ஏற்ப ஜோடி ஆடி, பின்னர் விரைவாக மறைக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் பரவியது.

          கோல்ட்ப்ளேயின் முன்னணி பாடகர் கிறிஸ் மார்ட்டின், இந்த ஜோடி மறைந்திருப்பதைக் கண்ட பிறகு, கூட்டத்தினரிடம் கூறினார்:

          “அவர்கள் ஒரு காதல் உறவில் இருக்கிறார்கள், அல்லது அவர்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்கள்.”

          மில்லியன் கணக்கான பார்வை

          டிக்டோக்கில் வெளியிடப்பட்ட முதல் காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.

          பின்னர் அது பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, மீம்களாக மாற்றப்பட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேலி செய்யப்பட்டது.

          இணையம் தழுவல் பற்றிய பேச்சுகளால் நிரம்பி வழிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வானியலாளர் வீடியோவைக் குறிப்பிடாமல்,

          இந்த விஷயத்தில் விசாரணையை அறிவிக்கும் அறிக்கையை வெளியிட்டார்.

          நேரில் வந்து விடு
          Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

          நேரில் வந்து விடு

          நேரில் வந்து விடு

          நித்திரையில் நான் விழிக்க
          சித்திரையை தேடுகிறேன்
          முத்திரையை பதித்த கவி
          முகத்திரையை பார்க்கிறேன்

          சத்தம் இல்லா தூங்கிவிட
          சத்தியமா முடியவில்லை
          செத்த பிணம் ஆகிவிட்டேன்
          சேதி சொல்ல யாரும் இல்லை

          இத் தளத்தில் வந்த கவி
          இதயமதை துளைத்ததுவே
          இத் துயரை தந்த கவி
          இதயமதை ஏற்றிடுமோ

          பொற் கவியை நான் படிக்க
          போதும் நேரம் வந்திடுமோ
          நித்திரையில் நான் விழிக்க
          நிஜம் வந்து கூடிடுமோ

          சத்தியமாய் சொல்லி விடு
          சாதனைகள் செய்திடுவேன்
          செத்துவிட முன்னே நான்
          சொர்க்கமதை கண்டிடுவேன் .

          ஆக்கம் -15-05-2025
          வன்னி மைந்தன்

          ( பதில் கவி }

          கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
          Posted in இலங்கை செய்திகள்

          கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

          கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

          கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .

          மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .

          எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.

          எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.

          இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

          அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .

          பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .

          பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.

          பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

          சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

          குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

          மக்களை ஏமாற்றும் அனுரா
          Posted in இலங்கை செய்திகள்

          மக்களை ஏமாற்றும் அனுரா

          மக்களை ஏமாற்றும் அனுரா

          மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.

          புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.

          ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

          இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.

          ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

          இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.

          இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.

          என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.

          கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை
          Posted in இலங்கை செய்திகள்

          கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

          கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

          கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ,மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது .

          குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக்

          கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளது.

          வீடீயோ

          அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ,

          ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீரினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து

          ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

          40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில்
          Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

          40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில்

          40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில்

          40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில் ,காஸாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ‘பாதுகாப்பான பகுதி’ கஃபே மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.


          வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை, இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களில் இருந்து இந்த வசதியைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

          இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸா முழுவதும் குறைந்தது 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு முன்னர் இஸ்ரேலின்

          இராணுவத்தால் “பாதுகாப்பான பகுதி” என்று நியமிக்கப்பட்ட பிராந்தியத்தின் தெற்கில் உள்ள அல்-மவாசி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்திருந்த மக்கள் மீது ட்ரோன் தாக்குதல் உட்பட.

          காசாவில் அல் ஜசீராவின் நிருபர் திங்கள்கிழமை பிற்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் தெற்கில் கான் யூனிஸின் மேற்கில் அமைந்துள்ள

          சிறிய கூடார கஃபே மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

          ‘வெளியேறும் பகுதிகள்’ மற்றும் ‘பாதுகாப்பான பகுதிகள்’ பற்றிய இஸ்ரேலிய கூற்றுக்கள் தவறான கதைகளே தவிர வேறொன்றுமில்லை என்பதற்கு இது

          கூடுதல் சான்றாகும்” என்று அல் ஜசீராவின் ஹனி மஹ்மூத், மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாவில் இருந்து அறிக்கை செய்தார்.

          “இணையம் மற்றும் வெளி உலகத்துடன் இணைக்க அல்லது பெரிய திரையில் கால்பந்து விளையாட்டைப் பார்க்க மக்கள் இந்த காபி கடைக்குச்

          செல்கிறார்கள். மக்கள் உள்ளே இருக்கும் போது ஒரு ட்ரோன் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஓட்டலை நோக்கி ஏவியது. அது நிரம்பியதாக ஒரு சாட்சி கூறினார்,” என்று மஹ்மூத் கூறினார்.

          “கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் சிதைந்துவிட்டனர்,”
          என்று அவர் கூறினார், வேலைநிறுத்தத்தில் காயமடைந்த ஏழு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

          அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
          Posted in இலங்கை செய்திகள்

          அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

          அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

          அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
          நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
          இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..


          நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
          நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..


          ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
          அது சட்டப்படி முரணானது..


          ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..


          காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..


          ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
          இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..


          தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…


          மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
          அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..


          ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
          இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..


          அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
          எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
          வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..


          நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
          ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..


          எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..


          இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..


          தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
          உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
          என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..


          அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..


          வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..


          இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
          யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..


          யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..


          அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..


          அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..


          என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..


          உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..

          போலி மருத்துவ மாணவி கைது
          Posted in இலங்கை செய்திகள்

          போலி மருத்துவ மாணவி கைது

          போலி மருத்துவ மாணவி கைது

          போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்

          6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

          சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
          சடலம் ரயில் நிலையத்தில் மீட்புசடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

          எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

          கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

          மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

          மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

          வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு

          பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்

          தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

          முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு

          செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி

          தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

          இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது

          கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

          உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

          உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

          உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

          உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் உலங்குவானூர்திகள் காணாமல் போயுள்ளது தேடும் இராணுவம் .

          வானில் பறந்த ஜப்பான் தாக்குதல் உலங்குவானூர்திகள் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளன .

          இவ்வாறு காணாமல்போன உலங்குவானூர்திகளுக்கு என்ன ஆனாது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

          வானில் மோதி வீழ்ந்த உலங்குவானூர்திகள்

          கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடு கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் நேருக்கு நேர் மோதி வீழ்ந்தனவா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

          இரு உலங்குவானூர்திகளும் ராடார் கட்டுப்பாட்டில் இருந்து இருந்து காணாமல் போயுள்ளன .

          அதனை அடுத்தே ஜப்பான் தேடுதலை ஆரம்பித்தது , ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .

          தொடர்ந்து ஏழுபேர் காணமல் போயுள்ளனர் .காணமல் போனவர்களும் கடலில் மூழ்கி பலியானார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

          சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்

          ராடர் திரையில் காணாமல் போன இந்த இரு உலங்கு வானூர்திகளும் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

          இதே போன்று சில மாதங்களுக்கு முன்னரும் ,இதே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் உலங்கு வானூர்திகள் காணமல் போயிருந்தது .

          தொடர்ச்சியாக காணாமல் போகும் இந்த விமானங்கள், மர்ம எதிரிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் ,இங்கே வலுவாக எழுப்ப பட்டுள்ளது .

          வீடியோ

          Error: View 9293b2au4w may not exist
          நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
          Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

          பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

          பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

          மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

          இதனையடுத்து சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

          அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

          பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

          கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மதுபோதையில் இருந்துள்ளார்.

          அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

          இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு

          சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.

          இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்துக்கொண்டார்.

          மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்துள்ளார்.

          அந்த பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீதும், இளைஞனுடன் அவரது தாயார், சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

          பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

          காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

          இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

          இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

          வீடியோ

          மாவீரர்
          Posted in கவிதைகள் நிலா தமிழ்

          மாவீரர்

          மாவீரர்

          கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
          கார்த்திகையின் நாயகர்களே
          உமை நினைந்துருகி
          கார்த்திகைப் பூவெடுத்து
          கார்த்திகை 27 இல்
          உம் பாதந் தொழுதிடுவோம்!

          விழித்திரையில் நீர் வழிந்திட
          எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
          மொழியுரை ஏதுமற்று
          நடைப் பிணமாக
          உமைத் தேடி
          நிரை நிரையாக வந்து
          விம்மி யழுதிடுவோம்!

          கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
          தில்லாக நின்று
          எமை யழித்த படையழித்து
          ஈழவளின் மானம் காத்து
          கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
          உமை கணமும்
          நினைந்து ருகிடுவோம்!

          இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
          எமதினத்தின்
          வருங்கால சந்ததிக்காக
          ஈழத்தின் யாகத் தீயில்
          ஆகுதியாகிய உமை
          நிதமும்
          போற்றித் துதித்திடுவோம்!

          ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
          காலத்தின் தேவையை
          ஈடேற்றி
          ஞாலத்தில் வரலாறாகிய
          தீரர்களே
          உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
          தாருமென்று இறைந்துருகி
          நெய் விளக்கேற்றிடுவோம்!

          நிலாதமிழ்.17.11.2023.

          சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
          Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

          சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

          சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

          குரங்கிலிருந்து மனிதன்
          பிறந்தானென்று
          கூர்ப்பு விளக்குது – திரை
          அரங்கினில் நின்று
          தொங்குவதைப் பார்க்க
          அதுவும் விளங்குது.

          வருசா வருசம்
          விஜய்யும் அஜித்தும்
          திரையில் வருவினம். – இங்கு
          வலியோடு வாழும் ஈழத்
          தமிழன் வாழ்வுக்கு
          என்ன தருவினம்?

          கலையை மதிப்பதும்
          அதனை ரசிப்பதும்
          அவரவர் உரிமைகள் – அதற்குன்
          நிலையை அழிப்பதும்
          நினைவை இழப்பதும்
          வாழ்விலென்ன பெருமைகள்.

          ரொக்கெட் செலுத்தியும்
          விக்கற் வீழ்த்தியும்
          பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
          டிக்டொக்கை அமத்தியும்
          சீக்ரட்டை பத்தியும் ஏன்
          மாக்கெற்றை இழக்கிறீர்கள்.

          திரிஷா பிறநடிகைகள்
          பெரிதா செய்ததை யார்க்கும்
          தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
          ஒரிசா பாலுவையும்
          தெரேசா அன்னையையும் முடிந்தால்
          உசிரா வணங்குங்கள்❗

          -பிறேமா(எழில்)-

          வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
          Posted in இலங்கை செய்திகள்

          ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ

          ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ


          ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத

          தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள், வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் காட்சிப்படுத்தப்பட்டது.

          நீதிமன்ற அறையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காட்சிப்படுத்தி உரிய ஆதாரங்களை பதிவு செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டது.

          ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ

          பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான

          மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி ஹரிபிரியா ஜயசுந்தர விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நீதிமன்ற அமர்வு மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.

          மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த (தலைவர்), அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

          வீடியோ