துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்

சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்

மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது கஹவத்தை துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவின் யாயின்ன பகுதியில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேக நபர் நேற்று (26) பெல்வாடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்கு உதவிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் ரயில் நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒருவரைச் சுட்டுக்

கொல்ல முயன்ற குற்றம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை பொரலஸ்கமுவ பகுதியில் 12 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக

குற்றத்திற்கு உதவிய பெண்

நபர் கைது செய்யப்பட்ட, அதே நேரத்தில் குற்றத்திற்கு உதவிய பெண் சந்தேகநபர், தெல்கஹாவத்தை – ஹல்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதானவருடன், பெண் சந்தேக நபர் கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது ,அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (02) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய யூனிட் 19, அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர் ,ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமரசேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு

தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) பிற்பகல்

முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரவைகள் 18, போர 12 ரக ரவைகள் மூன்றும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது இந்த துப்பாக்கிகள் மீளவும் தயாரிக்க பாடுவது மிக பெரும் குற்றமாக பார்க்க படுகிறது .

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர்.

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தவர் கைது

அதன்படி, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த கண்டி, உடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து மூன்று போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், இரண்டு போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 100 ரூபா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 9 கடதாசிகள், போலி 100 ரூபா நாணயத்தாள்கள்

அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 6 கடதாசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கள்ள நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபர் கைது

இதேவேளை, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இருப்பினும், சந்தேக நபர் அந்த நேரத்தில் நிறுவனத்தில் இல்லை, மேலும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.

இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.

இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது ,ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலீசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது


மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த

இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.


இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.


இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.


அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர்

துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது


துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது , சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய கிராமம் 3 பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சிதம்பரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது ,கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ​ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு

தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த

இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்

video

கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது வெலிகமையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹநெவிய வீதியில் பயணித்த ஐந்து பேரை குறிவைத்து, கடந்த 4ஆம் திகதி T56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (09) மாலை மாத்தறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரை இவர் ஓட்டிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

video

சந்தேகநபரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும், பெண்ணொருவரும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.

கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை

கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை

கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை ,ஜூலை 08 ஆம் திகதி அதுருகிரியவில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்றழைக்கப்படும்

கிளப் வசந்த மற்றும் மற்றுமொருவர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரியவில் உள்ள பச்சைக் கடை உரிமையாளர் உட்பட 8 சந்தேகநபர்களை விளக்கமறியலில்

வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஷார்தீனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர்கள் 100,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் எட்டு பேரின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதுருகிரிய பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் குட்டி வசந்த மற்றும் விஜேசூரிய ஆராச்சிகே நயன வாசல விஜேரத்ன ஆகியோரின் கொலை மற்றும் அதற்கு

உதவியமை தொடர்பில் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் பலர் அரச சாட்சிகளாக மாறவுள்ளதாக அரச சட்டத்தரணி சக்தி ஜகோதராச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணிகளான விஷ்வ விதானகமகே மற்றும் நுவான் ஜயவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள், தோட்டாக்கள், 9 mm கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு வாள்கள், கத்தி ஒன்று ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை அரிசி

இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் சந்தேக நபர் கைது

கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த

பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .

தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000

ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து

வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மாணவி மண்டை உடைத்த டீச்சர் - சிறையில் அடைத்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில், மூன்று சிறுமிகளும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

முன்னதாக இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை, மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் நேற்று (18) அழைக்கப்பட்டு, சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில், இச் சிறுமிகள் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை, தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் மற்றும் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாகக் கூறப்படும் இருவர், மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதையடுத்து, இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து, தலைமன்னார் பொலிஸில் ஒப்படைத்திருந்திருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இந்த இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.