Search Results for: காரணம்
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் ,த.வெ.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர்.
கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு
இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக கரூர் நகர பொலிஸ் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம் ,அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக
இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை
வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.
விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.
ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்
எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.
இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.
இனவழிப்பு நடக்கவில்லை
இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.
கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.
நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு
40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.
தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்
இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.
சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.
அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.
முன்னாள் வடமாகாண சபை
குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.
இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.
இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.
அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.
அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.
முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.
சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.
புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.
அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும்
என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டளவில் , தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் தேங்காய்களின் விலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில், ஒரு தேங்காய் சந்தையில் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு தேங்காயின் விலை சுமார் 100 ரூபாவாக இருந்தது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சராசரி சில்லறை விலை 80 – 120 ரூபாவாக இருந்தது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளது.
தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன.
இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன மக்கள் எழுப்பும் கேள்விகள் .
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க வாய்ப்பில்லை என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என வலியுறுத்தி நீதவான் இதனை தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியின் கெரவலபிட்டிய பிரதேசத்தில் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமான வீதி விபத்து தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் ஆஜரான
தனராஜ் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு சனத் நிஷாந்தவின் மனைவியின் உரிமைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
இதன்போது, விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் இதுவரை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியாது என நீதவான் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது அந்த இடத்தை பார்வையிட வேண்டிய அவசியமில்லை என்ற போதும், விபத்து இடம்பெற்ற ஜனவரி 24 ஆம் திகதி தான் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாக நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுக்குமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்த நீதவான், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
தலைமன்னார் – வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில் குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த திருகோணமலை – குச்சவெளி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபரை 48 மணித்தியாலத்துக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்னார் நீதவான் அனுமதியளித்துள்ளார்
நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்துக்கள் அதிகம் சாலைகளில் ஏற்பட சாரதிகளே கரணம் என பந்துல குணவர்தனதெரிவித்தார் ,இவ்வாறான விபத்துகளினால் சாரதிகள் இறப்பதுடன் காயமடைந்து வருவதாக பந்துல குணவர்தன கவலை வெளியிட்டார் .
வீதி விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,ஆண்டு தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .
கல்வி முறையில் இருந்து வீதி போக்குவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே இந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்க படுகிறது .
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சர் குத்துகாரணம் அடித்துள்ளார் .
இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர் .
, அதனால் சமூகத்தை நேர்வழியிலிருந்து திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனை

“சமூக ஊடகங்களுடன் தொடர்புபடும் புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக உருவாக்கப்படவுள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களினால் அப்பாவி மக்களுக்கு பலர் பல்வேறு விதமான அசௌகரியங்கள், இதனால் ஏற்படுத்த படுகிறது .
சமூக வலைத்தளங்களை தடை இல்லை அமைச்சர் குத்துகாரணம்
சிரமங்கள் மற்றும் வெறுப்புக்கள், குரோதம், ஆத்திரம், போன்றவற்றை ஏற்படுத்துவதனால் மனித வாழ்க்கையில் பாரியளவில் அழிவுகளை சந்தித்தவாறு செயற்படுவதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் இச்சட்டத்தினால் சிறந்த வெற்றிகரமான சந்தர்ப்பங்களே ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
உலகில் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் எவ்வித சமூக ஊடகங்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அவ்வாறான நாடுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட வெகுஜன ஊடக அமைச்சர், அந்நாடுகளில் எவ்வித தணிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வில்லை.
அவ்வாறே நமது நாட்டிலும் இப்புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
அத்துடன்; மிகவும் சிறந்த வாதப்பிரதிவாதங்கள், விமர்சனங்களினால் ஏற்படக் கூடியது என்றும் ஆனால் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, வெறுப்புக்களை பரப்பும், சமய மற்றும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பிற்கு
எச்சரிக்கையானவற்றிற்காக ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் பிரதான நோக்கமாக இதனை முன்வைக்க வேண்டும், எந்த அமைச்சராக இருந்தாலும் அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
என்றும் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சருக்கு இதற்கான தமது அபிப்பிராயங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
8 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா
வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம். அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
பின்னர் மருந்துகளை ஏற்றுக் கொண்ட போது கை வீங்கி இருந்தது இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்னபோதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
அதற்கு அடுத்த நாள் வைத்தியரிடம் சொன்ன போது தான் வைத்தியர் பார்வையிட்டு கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை கொண்டு அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று தெரிவித்தனர். இருந்தாலும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை அகற்றப்பட்டுள்ளது.
தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார். இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை,
இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் கவனயீனமே, என சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
by நிருபர் காவலன் - சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
by நிருபர் காவலன் - நாய்களை எரிக்க சுடலை
by நிருபர் காவலன் - கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
by நிருபர் காவலன் - ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
by நிருபர் காவலன்
நாடு நாசமா போனதுக்கு இதுதான் காரணம் சீமான்
நாடு நாசமா போனதுக்கு இதுதான் காரணம் சீமான்
நாடு மக்களும் நாசமா போனதுக்கு காரணம் இவர்கள் தான் என ,நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்by நிருபர் காவலன்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்by நிருபர் காவலன்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டிby நிருபர் காவலன்
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்by நிருபர் காவலன்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்by நிருபர் காவலன்
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி தனக்கு வழங்கப்பட்ட மருந்தினால் அல்ல, ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் முழுமையான அறிக்கையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் அர்ஜுன திலகரத்ன,
அர்ஜுன திலகரத்ன – “மருந்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இது நடந்தது என்று சொல்வது கடினம். ஒவ்வாமையால் ஏற்படும் நிலை. மற்ற நோயாளிகளுக்கு 2700 டோஸ் Ceftriaxone கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் – ஏதேனும் தவறு அல்லது அதிகப்படியான டோஸ் வழங்கப்பட்டுள்ளதா என நீங்கள் ஆராய்ந்தீர்களா?
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
அர்ஜுன திலகரத்ன – “Ceftriaxone என்பது ஒரு நாளைக்கு ஒரு முறை வழங்கப்படும் மருந்து. 2 மி.கி வழங்க வேண்டும.
ஒரு குப்பியில் ஒரு மில்லிகிராம் உள்ளது.
அதனால்தான் இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏதேனும் ஒவ்வாமையை இருந்ததா என பார்த்தோம். இந்த நோயாளிக்கு இதற்கு முன் எவ்வித ஒவ்வாமையும் இல்லை.
பத்திரிக்கையாளர் – முதல் டோஸின் பின்னர் லேசான ஒவ்வாமை ஏற்படும் போது, அடுத்ததைக் கொடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லையா?
அர்ஜுன திலகரத்ன – “முதலில் கொடுத்தபோது ஒவ்வாமை ஏற்படவில்லை. இரண்டையும் கொடுத்த பின் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றின.”
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
இது தொடர்பான மருந்துகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் உடலியல் துறைத் தலைவர் பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ.
பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ – “ஒவ்வாமையில் அதிகரிக்கும் சிஆர்பி புரோட்டீன் மதிப்பு. சாதாரணமாக 6 அலகிற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த யுவதியின் மதிப்பு 270 அலகாக அதிகரித்திருந்தது.
மதிப்பு 270 அலகிற்கு மேல் இருக்கையில் பற்றீரியாவின் அறிகுறிகள் தென்படுகின்றன. நோய்த்தொற்று பிறகு நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, பொதுவாக Ceftriaxone மருந்து
பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மருந்து ஒவ்வாமை. அரிதாக, சிலர் இறக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த யுவதியும் இறந்துவிட்டார்.”
சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்
சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜீலை 20 ஆம் திகதி புதுடில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன் போது ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்து
காரணாம் வெளியாகியுள்ளது .
இரு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று ,
நேரெதிர் மோதியதில் ,300 மக்கள் பலியாகியும் 900
பேர் காயமடைந்தனர் .
இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
இந்த விபத்தினால் நூற்றுக்கு மேற்பட்ட , ரயில் போக்குவரத்து தடை பட்டது .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிக்கனலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ,
ரயில்வே மந்திரி தெரித்துள்ளார் .
உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த ,
முதலாவது மிக பெரும் ரயில், விபத்தாக இது பதிய பெற்றுள்ளது
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோ நாடுகளை தக்க தருணம் பார்த்து சீன வெளுத்து வாங்கியுள்ளது .
ரஸ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் ஏதும் இல்லை ,வாய் சொல்லில் ,
வரையறையற்ற உறவுகள் உள்ளதே தவிர ,உள்ளக உறவில் ,
ஆக்க பூர்வமாக ,ஏதும் இல்லை என ,ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன தூதர் ஃபூ காங்அடித்து விட்டுள்ளார் .
ரஸ்யாவை வெறுப்பதை போல தோற்றத்தை ,காண்பித்து ,நேட்டோ தலையில்
ஏறி நின்று மத்தளம் அடித்துள்ளார் .
ரஸ்யா மீது நேட்டோ நாடுகள் ,
தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை விடுத்தது வருகிறது ,
அதனாகல்,அவர்கள் உக்ரைன் மீதான ,ஆக்கிரமிப்பு போரை,
தொடுத்துள்ளது என்கின்ற நியாயத்தை வலிந்து பேசியுள்ளார் .
நேட்டோ விலகினால் ,ரஸ்யா ஏன் உக்காரனை ,
கட்டி வைத்து அடிக்க போகிறது என்பது ,சீனாவின் வாதமாக உள்ளது .
கூட்டு வாங்கினாலும் மோதிர கையால் கூட்டு வாங்கணும் என்பது,
சீனாவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான
தூதர் பேச்சு வாயில்கா அம்பல பட்டுள்ளது .
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய நபர் குறித்த செய்தி ஒன்று மொரட்டுவையில் பதிவாகியிருந்தது.
கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் மன்னா கத்தியொன்றால் மற்றைய நபரை தாக்கும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
தாக்குதலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும், தாக்கிய நபருக்கும், நேற்று முன்தினம், குடிபோதையில், மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் இரு கைகளையும் வெட்டி அவற்றை எடுத்துக்கொண்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சந்தேகநபர் நபரொருவரின் கைகளை துண்டித்த போதும் அது பின்னர் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டதன் காரணமாக இந்த நபரின் கைகளை வெட்டி அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கல்கிஸ்ஸ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது.
இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி கடந்த பத்து நாட்களில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதிக்கு மதிப்பளித்து, அவருக்கு எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவே, நாம் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.வாக்குறுதிகள் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கூறினார்.
வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டபோதே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
Featured
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான
ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் .
உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.
தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது .
அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக தனிமை மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல்
உறவுகளுடனான முரண்பாடு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை துஷ்பிரயோகங்கள் மனநோய் பொருளாதார நெருக்கடிகளை கையாள தெரியாமை அதாவது எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது.
ஆனால் அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலைவாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.
கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் .
குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையினுடைய உளநல வைத்தியர் சிவதாஸ் மற்றும் சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர்
அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் அவர்களது மனநல
மருத்துவம் தொடர்பான நுல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கொவிட் காலத்தில் சேவையாற்றிய தாதியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் சுகந்தன் மாவட்ட பொது வைத்திய சாலையின் மனநல மருத்துவர் ம.
ஜெயராசா வைத்தியர்கள் தாதியர்கள்,
தாதிய உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்
குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்
இலங்கை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று,
நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று
குத்துகாரணம் அடித்த நிலையில்
மூவர் காயமடைந்துள்ளனர்
வேகமாகப்பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லொறி பலத்த சேதமடைந்துள்ளது















































