புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

Spread the love

புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.

குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply