விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (02)) திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், வரலாற்றில்
முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றினார்.
கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் A9 ரகம், HOB-2 எனும் முதலாவது போஞ்சி மரபணு ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தியமை, புதிய
கலப்பின கறி மிளகாய் வகையான “பிரார்த்தனா”வை அறிமுகப்படுத்தியமை போன்ற பல ஆராய்ச்சிகளை மாலதி பரசுராமன் மேற்கொண்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்ப,
பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் மாலதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.