ரசியா எறிகணை தாக்குதலில் 32 உக்கிரேனியர்கள் மரணம்

உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
Spread the love

ரசியா எறிகணை தாக்குதலில் 32 உக்கிரேனியர்கள் மரணம்

தெற்கு உக்கிரேன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி ,ஒரே நாளில் அதே பகுதியை சேர்ந்த 32 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் பல தாஸின் மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .கட்டடங்கள் ,வீடுகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .

குறித்த கேர்சன் பகுதியை விடுவித்து ரசியா இராணுவம் விலகி சென்றதன் பின்னர் ,அந்த பகுதியை இலக்கு வைத்து கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

மீளவும் இழந்த உக்கிரேன் பகுதிகளை மீட்கும் இராணுவ நகர்வை ரசியா இராணுவத்தினர் மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது .