யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம் ,யாழ்ப்பாணத்தில் நடந்த கத்தி வெட்டு சம்பவைத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைவு .
தமிழர்களின் கலாச்சார பட்டினமாக விளங்கி வரும் யாழ்ப்பாணத்தில் ,தனக்கு வாழ்வு கொடுத்த மனைவியை கத்தியால் கோரமாக வெட்டிய கணவன் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவன் மனைவியை சமையலறை கத்தியை கொண்டு வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன .
மனைவி இரத்த வெள்ளத்தில் மிதக்க கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ,அயலவர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ,மனைவி அனுமதிக்க பட்டுள்ளார் .
மனைவியிடம் நடந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தை விசாரித்த போலீசார் ,மனைவியை தாக்கிய கணவனை கைது செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த மனைவி மீதான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொலை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிய வருகிறது .