யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .
இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .