யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன் ,வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த காட்டு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தது 35 வயதான ‘ராஜா’ என அழைக்கப்படும் காட்டு யானையாகும்.
குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹபரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








