மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Spread the love

மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

உலகத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தமிழினப்படுகொலையினை நினைவேந்திக் கொண்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், பேரறிவாளன் அவர்களை இந்தி

ய உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது என்ற செய்தி உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் செய்தியறிக்கையினை வெளியிட்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,


பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையில் தமிழகத்தின் உணர்வுடன் ஈழத்தமிழர்கள் நாமும் அணிதிரண்டிருந்தோம். விடுதலைக்காக ஓயாது போராடிய அற்புதம்மாவுக்கு

கிடைத்த இந்த நீதியின் வெற்றி என்பது, நீதிக்கான ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு நம்பிக்கையினை கொடுத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே, பேரறிவாளின் விடுதலையில் கொண்டிருந்த

கரிசனையும், நீதிமன்றில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களும் பேரறிவாளனின் இவ்விடுதலையில் முக்கிய பங்கினை வகித்துள்ளன.

பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து
அயராது போராடிய அனைவரையும் இவ்வேளையில் நெஞ்சார்ந்து பாராட்டுவதோடு,


மிகுதி ஆறு பேரினது விடுதலைக்கு பேரறிவாளது விடுதலை,
நீதியின் கதவுகளை திறக்க வழிசெய்யும் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளது.

    Leave a Reply