மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .
தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,
அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .
தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .
அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .
அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .
துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .
துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி









