மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Spread the love

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்றிரவு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியோரம் வாகனங்களைச் சோதனை

செய்து கொண்டிருந்த போது, கந்தளாயிலிருந்து கடுவலை நோக்கிச் சென்ற டிப்பர் ட்ரக் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.