மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்றிரவு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியோரம் வாகனங்களைச் சோதனை
செய்து கொண்டிருந்த போது, கந்தளாயிலிருந்து கடுவலை நோக்கிச் சென்ற டிப்பர் ட்ரக் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்
- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
















