மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்
மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய் ,இலங்கை ரூபன் வெல்ல காவல்துறை பகுதியில் பெண் ஒருவர், தான் பெற்ற நான்கு வயது மகளை வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நான்கு வயது சிறுமி வாய் பேச முடியாத நிலையில் காணப்பட்ட நிலையிலும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அதனால் ஏற்படுத்த மன உளைச்சலுக்கு ஆளான தாயார்.
அந்த சிசுவை வீசி படுகொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த படு கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண் சிசு தொடர்பாக தாயார் மிகவும் கவலை அடைந்ததாகவும் உளவியல் ரீதியில் பாதிப்பு கொள்ளாத நிலையில் அவரது வாழ்வை எப்படி இருக்கும் என்று நிலையிலேயே ,
படுகொலை செய்த தாய்
அந்த வாழ்வை அவருக்கு அளிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு படுகொலையில் ஈடுபட்டு இருக்க கூடும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
வாய் பேச முடியாத பல ஆண் பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் மிகப் பெரும் அதிசயங்கள் செய்து அசத்தியுள்ளார் .
இவர்களினால் வாய் மட்டும் பேச முடியாது தவிர அவர்கள் கல்வியை கற்று அதன் ஊடாக பல சாதனையை நிலை நாட்டியுள்ளனர் .
குறித்த சிசுவானது கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியிலும் அந்த கிராம மக்கள் மத்தியிலும் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊமையாகப் பிறந்த காரணத்திற்காக இப்பொழுது அவரை உறக்கத்தில் அழைத்துச் சென்று அவரை கிணற்றில் வீசி படு கொலை செய்வதற்கு இவருக்கு எப்படி மனம் வந்தது என்கின்ற கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது .
தாயார் விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைக்கவில்லை என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற விசாரணையின் முடிவிலேயே விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.












