பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Spread the love

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின்

உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை

பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No posts found.