புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி
Spread the love

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.


அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்.


அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர்.

பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது. இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது.


-பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய நூலான நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலில் அவர் குறிப்பிட்டது.