பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை வரும் வாரம் ஆபத்து
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் 40C இல் வெப்ப நிலை செல்லவுள்ளதால் மக்களை விழிப்பாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கைவிடுக்க பட்டுள்ளது.
அதிக வெயில் காரணமாக மக்கள் மரணமடைய கூடும் எனவும் ,இதனால் வீடுகளில் உள்ள மக்கள் மிக விழிப்பாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் தமது பயணங்களை தவித்திடும் படியும் மிக எச்சரிக்கையுடன் செல்லும் வண்ணம் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை வரும் வாரம் ஆபத்து
கடற்கரைக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
அதிக வெப்ப நிலை காரணமாக மக்கள் பெரும் துயரை சந்திக்க கூடும் என்பதால் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன.
அதிக வெப்பம் காரணமாக தீ பற்றால் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களே மிக , விழிப்பாக இருந்து கொள்ளுங்கள் இந்த வாராம் வழிப் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
பிரிட்டன் தழுவிய நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் விடுமுறை விடுத்துள்ளதாக அறிவிக்க பாடுள்ளமை குறிப்பிட தக்கது.