பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
Spread the love

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.