நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்
செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை









