நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
Spread the love

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படு கொலையாளியுமாகிய கோத்தபாய இராஜபக்சவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து

போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என அறிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, தாமதிக்காமல் ஒப்பமிட்டு நீதிக்கான போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு அனைவரையும் கோருவதாக தெரிவித்துள்ளது.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கிய இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய

நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு

Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமா அதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழர் தாயகத்திலும் கோத்தாவை கைது செய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

    Leave a Reply