துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
Spread the love

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றின் சடலம், மின்விளக்கு மற்றும் அலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.