துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
Spread the love

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம் ,இலங்கை ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் ,காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இதன் பொழுது அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் அதை சாரதி மீதும் நடத்தப்பட்டுள்ளதால் ,சாரதியின் படுகாயம் அடைந்த நிலையில் முட்கப்பட்டு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் இலங்கை பகுதியில் கூலிக்கு அமர்த்தப்படுகின்ற ஆயுத கலாச்சார குழுக்கள் ஊடாக ,இவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்று வருவதான புதிய புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தகர்கள் பிரபலங்கள் ஊடக நபர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் என பலர் இவ்வாறான மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.

கோட்டபாய ஆட்சி காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம் பெற்று வந்தன.அவ்வாறான சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்கின்ற அறிகுறியாக இவை காணப்படுகின்றன.

ஆட்டோ சாரதி மற்றும் பயணி மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என கண்டறியும் நடவடிக்கையில் ,குற்றப் புலனாய்வுத் துறையில் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.