கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
Spread the love

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

வைத்தியசாலையில்… கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.