கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

Spread the love

கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

அழுகுரல் ஓசை வானை கிழிக்க
அவலம் நடக்கிறது
ஆடி வரும் குண்டு துளைத்து
அரை உடல் கிழிகிறது

போரும் விரட்ட போக்கிடம் கலைய
பொழுதும் விடிகிறது
போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
பெரும் நகர் வீழ்கிறது

தேடி சேர்த்த பொருளில் பாதி
தெருவில் மிதக்கிறது
தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
தேம்பி அழுகிறது

குஞ்சும் கதற பிஞ்சும் பதற
குரல் வளை அறுகிறது
கூவி திரிந்தவர் கூடுபிரிய
குறட்டை விடுகிறது

உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
உனக்கு கவலையில்லை
ஊரைநம்பி ஊதி திரிந்தால்
உனக்கு இழி நிலையே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-03-2022

உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

    Leave a Reply