கணவன் இறப்பு மனைவி தற்கொலை
கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .
மாரடைப்பால் கணவன் மரணம்
நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .
கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .
பிள்ளைகள் அனாதை
இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .
தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .
மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உடன்கட்டை ஏறிய மனைவி
உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .
அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .