கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Spread the love

கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை

அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

இன்று (12) ஆரம்பமான ‘இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி’ என்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்

    Leave a Reply