ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்

அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
Spread the love

ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரையான 11 மாதங்களில் மொனராகலை மாவட்டத்தில் வாகன விபத்துகளால் 50 ​பேர் உயிரிழந்துள்ளனர் என மொனராகலை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஏ.எஸ்.அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த 11 மாதங்களில் 462 விபத்துகள் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமானவர்கள் தலமன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 462 வாகன விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 164 ​பேர் பாரிய காயங்களுக்கும் 214
பேர் சிறிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No posts found.